Monday, August 12, 2024

அன்னை பராசக்தி பாடல்| Annai Parasakthi Padal

அன்பே சிவமாய் அமர்வாள் அன்னை பராசக்தி
ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதி பராசக்தி!
இப்புவி இன்பம் யாவும் அளிப்பாள் அன்னை பராசக்தி!
உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி!


எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி!
ஏகாட்சரமாய் அவனியிலே வந்தாள் ஆதி பராசக்தி!
ஐங்கர நாதனை ஆதியில் தந்தாள் அன்னை பராசக்தி!
பொன் சிங்க பீடத்தில் அமர்வாளே அன்னை பராசக்தி!

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி!
ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி!
ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி!

ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே உருவாய் வருவாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதி பராசக்தி!
அன்னை பராசக்தி! ஜெய ஜெய மாதா ஆதி பராசக்தி!

மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் யாரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே!

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...