Shri Hanumath Laangula Asthira Mandhiram | ஶ்ரீ ஹனுமத் லாங்கூல அஸ்திர மந்திரம் | தமிழில்
ஹே ஹனுமாரே அஞ்சனா தேவியின் மகனே, மிகுந்த பலமும் வீரமும் பொருந்தியவரே உம்முடைய அசைந்து ஆடுகின்றவாலாகிய அஸ்திராயுதத்தினால் எனக்கு உபத்திரவம் தருகின்ற எனது எதிரிகளை அடித்து தள்ளி விழச் செய்ய வேணும்.
வானர சேனைக்கு அதிபதியும் சூர்யமண்டலத்தையே
கவளமாக்கி உண்டவருமாகிய மாருதியே உம்முடைய வாலாகிய
அஸ்திரத்தினால் என் சத்ருக்களை வீழ்த்துவாயாக
அட்சய குமாரன் என்கிற அரக்கனை அழித்தவரே, பொன்னிற
கண்களையுடையவரே, திதி தேவியினிடமிருந்து உண்டாகிய அரக்கர்களை அழித்த அனுமந்தரே
உம்முடைய வால் அஸ்திரத்தினால் என் எதிரிகளை வீழ்த்திவிடுவாயாக.
சிவனுடைய அவதாரமாகவும் ஸம்ஹார மூர்த்தியும், வாட்டுகின்ற
மனச்சுமையினின்றும் மீட்பவரே, தங்கள் வாலாகிய ஆயுதத்தினால் எனது எதிரிகளின் தீய சக்திகளை
முறியடிப்பாயாக,
ஸ்ரீராமருடைய பாத கமலமாகிய தாமரைபூவினில் தேன்உண்டு மகிழும்
வண்டு போன்று மனதோடு எப்போழ்தும் உள்ளவரே, எனது எதிரிகளை உம்முடைய வாலாகிய அஸ்திரத்தினால் அடித்து
விழச்செய்வாயாக.
வாலியினால் துன்புறுத்தப்பட்டு மனம் வருந்திய சுக்ரீவன்
முதலியவர்களை காப்பாற்றி விடுவித்திருந்த ப்ரபுவே. உம்முடைய அஸ்திரமென்கிற வாலால்
என் எதிரிகளை நாசம் செய்வாயாக.
சீதைபிராட்டியின் பிரிவினால், துக்க சமுத்திரத்தில் மூழ்கிய ராமனை, அவ்விதத்திலிருந்து
காத்தவரே, உம்முடைய வாலினால் என் எதிரிகளை வீழ்த்துவாயாக.
ராக்ஷஸர்களின் அரசனாகிய இராவணனுடைய ஆசை என்கிற அக்னியால் எரிந்த
உலகங்களை, தேவரீர் கருணை மழையினால் குளிரச் செய்தவரே. உம்முடைய வாலாகிய
ஆயுதத்தினால் எனது எதிரிகளை நசிப்பீராக.
அரக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தீங்குகளுக்கு உட்பட்ட, அமைதியான அகில
உலகங்களையும், ராக்ஷச சமுத்திரதினின்று மந்தரமலை போன்று கடைந்து காத்தவரே
உம்முடைய வாலாகிய அஸ்திராயுதத்தால் எனது எதிரிகளை வீழ்த்துவீராக.
உம்முடைய வாலின் நுனியில் ஜொலிப்புடன் பிரகாசிக்கின்ற
குஞ்சத்தினால் வீரனாகிய இராவணனின் பட்டணத்தின் அஹங்கார அழகினை ஒட்டு மொத்தமாக
விவேகத்துடன் எரித்தவரே. உம்முடைய வால் அஸ்திரத்தால் எனது எதிரிகளை நாசம்
விளைவிப்பீராக.
உலகினில் தோன்றிய யாராலும், மனத்தினாலும் தாண்ட முடியாத பெருங்கடலை
தாண்டியவரே, ஆடுகின்ற உமது வாலால் அடித்து என் சத்ருக்களை வீழ்த்திடுவாயாக.
உம்மை நினைத்த மாத்திரத்தில் உடனே நமக்கு எல்லாவித
மனோபீஷ்டங்களை அளிப்பவரே, உம்மை வணங்கியவரை பிரியங்ககொண்டு நிறைவுகள் அளித்து, நிறைவு அடைபவரே, ஆடி அசைந்து கொண்டிருக்கின்ற
உமது வாலால் எனது சத்ருக்களை வீழ்த்துவீராக.
இரவில் அலையும் அரக்கர்களாகிய இருளைப் போக்குவதில் சூரியனுக்கு
நிகரானவரே, ஆடிக்கொண்டு இருக்கின்ற உமது வாலால் எனது எதிரிகளை வீழ்த்துவீராக.
ஸ்ரீ ஜானகியின் கருணைக்கும், ஸ்ரீ ஜானகியின் வரனாகிய ஸ்ரீ ராமரின் அன்பிற்கும்
பாத்திரமாகிய வரும், அத்தகைய அன்பிலிருந்து மீழாமலிருக்க சதா தவமிருப்பவரும், மிகுந்த தபோ
வலிமையுள்ள மஹேசனே, உமது ஆடுகின்ற வாலால் என் சத்ருக்களை அடித்து வீழ்த்துவீர்.
வீமனைவிட அதிக உறுதி படைத்தவரே, வீரஆவேசமாக அவதரித்தவரே, மஹாதேவனின்
அம்சமாகிய ஹனுமந்தராயரே, உமது ஆடுகின்ற வாலாகிய அஸ்த்ரத்தினால் எமது சத்ருக்களை வீழ்த்தி
தண்டிப்பாயாக.
சீதையின் பிரிவினால் மிக வருந்திய ஸ்ரீராமனின் கோபத்தின்
மறு உருவமாகி, மிகுந்த கோபாக்னியாக இருந்தவரே, உமது ஆடுகின்ற வாலால் எனது எதிரிகளை
அடித்து தண்டிப்பாயாக
வைரம் போன்று உறுதியான
தேஹம்படைத்தவரும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்கு ஒப்பான வரும். இந்திரனுடைய
வஜ்ராயுதத்தை வீணாக்கியவரும், ஆகிய ஹனுமரே! உமது வஜ்ராயுதம் போன்ற வாலினால் எமது சத்ருக்களை
அடித்து வீழச் செய்து தண்டிப்பீராக.
நேர்மையற்ற கர்வம் கொண்ட கந்தவர்களின்
வசிப்பிடமான மஹேந்திர பர்வதத்தினை தகர்த்தி பிளவுபடுத்தி கர்ஜித்தவரே, உமது கர்ஜனையுடன், உமது உறுதி மிகுந்த
வாலால் எமது எதிரிகளை அடித்து தள்ளி வீழ்த்துவீராக.
லக்ஷ்மணனுடைய உயிர்காத்தவரும், உம்மை சரணடைந்தவரை அபயமளித்தும், நமது எதிரிகளை
குலைநடுங்க வைக்கும் கூரிய நகங்களுடன் அமைந்த கைகளுடன் உடையவரே, உமது பலம் மிகுந்த
வாலால் எமது சத்ருக்களானவர்களை அடித்து தள்ளி வீழச் செய்வீராக.
ஸ்ரீராமரின் கட்டளையினால் திருப்பி அனுப்பப்பட்டதினால் உண்டான
பரதசத்ருக்னர்களுடைய மனக்கவலைகளை போக்கியவரே! உமது அஸ்த்திரமான பலம் பொருந்திய
வாலால் எமது எதிரிகளை அடித்துத் தள்ளி தண்டிப்பீராக.
ஸஞ்ஜீவினி மலையை தூக்கி வந்ததினால் ஏற்பட்ட அரக்கர்களின் வலிமை
குறைந்ததாக அவநம்பிக்கை உணரும் பொருட்டு காரணமாக இருந்து சுபத்தை அறிவித்தவரும்.
விழா விசேஷங்களின் முடிவுகளில் நிறைவான வைபவத்தினை ஏற்படுத்தி சுபசொரூபமாகவும்
உள்ளவரே, உமது வாலால் எமது சத்ருகளை அடித்து தள்ளி தண்டிப்பீராக.
ஸ்ரீ சீதாதேவியின் பரிபூரண ஆசியினால் குறைவற்ற
சமஸ்தலக்ஷணங்களோடு திகழ்பவரே. உமது வீரம்மிகுந்து ஆடி அசைகின்ற வாலால் எமது பயங்கர
சத்ருகளை அடித்து சாய்த்து. அடியேனைக் காப்பீராக!
நல்லவர்கள் யாராகிலும் இந்தசுலோகங்களை அரசமரத்தடியில் அமர்ந்து, துதிக்கின்றார்களோ, அவர்களுக்கு
சகலசத்ரு பீடைகள் நீங்கி ஸ்ரீ ஹனுமந்தராயரின் அருட்கடாக்ஷதிற்கு பாத்திரமாகி
எல்லாவிதமான சம்பத்துக்களினால் நன்மைகள் பல பெற்று ஆனந்தமடைவீர்கள் என்பது
நிச்சயம்.
Listen to this Tamil translation here : https://www.youtube.com/watch?v=mTfIaKrFh68
