ஓம் பொன் மகளாகிய பூந்தளிரே போற்றி
ஓம் பூமிதேவியாய் உதித்தவளே போற்றி
ஓம் மன்னவன் மாலவன் மார்பினளே போற்றி
ஓம் மகாதேவியாய் மணப்பவளே போற்றி
ஓம் செந்நிறம் பூத்த செந்திருவே போற்றி
ஓம் செல்வ அதிபதி ஆனவளே போற்றி
ஓம் அன்னையே மாடம் எழுபவளே போற்றி
ஓம் அருமருந்தாக ஆனவளே போற்றி
ஓம் மின்னிடும் ப்ரகாசம் கொண்டவளே போற்றி
ஓம் மேனியில் பசுமை சுடர்பவளே போற்றி
ஓம் பன்னெடுங்காலம் வளர்ந்தவளே போற்றி
ஓம் பாக்கியம் எல்லாம் தருபவளே போற்றி
ஓம் கரும் பச்சையாய் நிறம் கொண்டாய் போற்றி
ஓம் க்ருஷ்ண துளசியாய் பெயர் கொண்டாய் போற்றி
ஓம் பெரும் சுடர் என ஒளிர்பவளே போற்றி
ஓம் பெயரில் ராமனைக் கொண்டவளே போற்றி
ஓம் திருத்துழாய் என பூத்தவளே போற்றி
ஓம் திருமாலை தினம் துதிப்பவளே போற்றி
ஓம் பெரும் செல்வமே பேரருளே போற்றி
ஓம் பேராயிரமும் கொண்டவளே போற்றி
ஓம் விருந்தாவனம் இருந்தவளே போற்றி
ஓம் வேத நூல்களை ஏற்றவளே போற்றி
ஓம் திருவெனும் நிதியாய் உதித்தவளே போற்றி
ஓம் தேவ அமுதமுடன் வந்தவளே போற்றி
ஓம் கார்த்திகை மாதம் உதித்தவளே போற்றி
ஓம் கனக பைந்தளிர் நிறத்தவளே போற்றி
ஓம் பூத்த பௌர்ணமி போன்றவளே போற்றி
ஓம் புண்ய தளமாக ஜனித்தவளே போற்றி
ஓம் ஆர்த்த பாற்கடல் எழுந்தவளே போற்றி
ஓம் அமரர் அமுதுபெறச் செய்தவளே போற்றி
ஓம் சேர்த்த நெல்லியுடன் இணைப்பவளே போற்றி
ஓம் சேவித்தார்க்கு அருள்பவளே போற்றி
ஓம் வார்த்த சிறுமரம் ஆனவளே போற்றி
ஓம் வன விருட்சமாய் உயர்ந்தவளே போற்றி
ஓம் பார்த்த இடமெல்லாம் மணப்பவளே போற்றி
ஓம் பரந்தாமனின் மாலையளே போற்றி
ஓம் கல்யாணியே திருமகளே போற்றி
ஓம் கவலை யாவும் தீர்ப்பவளே போற்றி
ஓம் இல்லம் எங்கும் இருப்பவளே போற்றி
ஓம் இனிய பூஜைகள் ஏற்பவளே போற்றி
ஓம் அல்லும் பகலும் கடந்தவளே போற்றி
ஓம் ஹரிப்ரியையாய் ஒலிப்பவளே போற்றி
ஓம் செல்வம் தந்திடும் பச்சையளே போற்றி
ஓம் செவ்வாய் பூஜை ஏற்பவளே போற்றி
ஓம் வெல்லும் பகையைச் சொல்பவளே போற்றி
ஓம் வெள்ளியில் பூஜை ஏற்பவளே போற்றி
ஓம் விஷ்ணு வல்லபையே போற்றி
ஓம் வரமனைத்தையும் தருபவளே போற்றி
ஓம் மாடம்தோறும் அமைபவளே போற்றி
ஓம் மங்களமெல்லாம் தருபவளே போற்றி
ஓம் கூடம் தெருவில் அமைபவளே போற்றி
ஓம் குண்டலினி என்னும் சித்தி தரும் போற்றி
ஓம் பீடம் ஏறிய தரிசனமே போற்றி
ஓம் பேறு பதினாறு தருபவளே போற்றி
ஓம் ஆடகப் பொன்னாம் அருமருந்தே போற்றி
ஓம் அமுத தண்ணீரில் பிறந்தவளே போற்றி
ஓம் காடாளுகின்ற மாமகளே போற்றி
ஓம் கார்த்திகை வளர்பிறை மணமகளே போற்றி
ஓம் வீடாளும் நிலை தருபவளே போற்றி
ஓம் வீடுகள் தோறும் மணப்பவளே போற்றி
ஓம் துளசிச் செடியாய் விளைந்தவளே போற்றி
ஓம் துளசித் தளிராய் ஒளிர்ந்தவளே போற்றி
ஓம் துளசித் தளமாய் விரிந்தவளே போற்றி
ஓம் துளசித் தருவாய் வளர்ந்தவளே போற்றி
ஓம் துளசி வனமாக மணப்பவளே போற்றி
ஓம் துளசி பூஜையில் மகிழ்பவளே போற்றி
ஓம் துளசி அர்ச்சனையில் களிப்பவளே போற்றி
ஓம் துளசி மாலையென சுடர்பவளே போற்றி
ஓம் துளசி வேரென நிலைப்பவளே போற்றி
ஓம் துளசி மணி மாலை தருபவளே போற்றி
ஓம் துளசித் துகள் மருந்தானவளே போற்றி
ஓம் துளசி என்னும் பசுங் கற்பகமே போற்றி
ஓம் நுனியில் ப்ரஹ்மனைப் படைத்தவளே போற்றி
ஓம் இடையில் விஷ்ணுவைக் கொண்டவளே போற்றி
ஓம் அடியில் சிவனை அணிந்தவளே போற்றி
ஓம் தளங்களில் அமரரைக் கொண்டவளே போற்றி
ஓம் பன்னிரு சூரியர் வடிவினளே போற்றி
ஓம் அஷ்ட வசுக்கள் அமைந்தவளே போற்றி
ஓம் அஸ்வினி தேவர்கள் இழைந்தவளே போற்றி
ஓம் வேரினில் தலங்களைக் கொண்டவளே போற்றி
ஓம் தண்டினில் தெய்வங்கள் சுமப்பவளே போற்றி
ஓம் வானம் பூமியை இணைப்பவளே போற்றி
ஓம் மறைகளை மேனியில் கொண்டவளே போற்றி
ஓம் மாருதிக்குகந்த இலைமகளே போற்றி
ஓம் பங்கஜ தாரிணி பேரழகே போற்றி
ஓம் பரம கல்யாணி சுபதையே போற்றி
ஓம் மங்கல புண்ணிய தள மகளே போற்றி
ஓம் மணம் பரப்பிடும் சுகந்தையே போற்றி
ஓம் கங்கை நீரின் சமம் ஆனவளே போற்றி
ஓம் கவச தேவியே காமினியே போற்றி
ஓம் தங்க நிறத்தொளி தாரகையே போற்றி
ஓம் ஜனனி என்னும் பெயர் கொண்டவளே போற்றி
ஓம் எங்கும் நிறைந்திடும் எழில் வதனி போற்றி
ஓம் எல்லாவற்றையும் காப்பவளே போற்றி
ஓம் பொங்கும் புனல் எனும் அருள் வடிவே போற்றி
ஓம் பூதேவியே நாரணியே போற்றி
ஓம் வண்ணம் ஏற்கும் ஒளியழகே போற்றி
ஓம் வைஷ்ணவியாகிய துளிர் அழகே போற்றி
ஓம் விண்ணில் இருந்து வந்தவளே போற்றி
ஓம் விவாஹம் கொள்ளும் பேரழகே போற்றி
ஓம் பெண் தெய்வம் ஆனவளே போற்றி
ஓம் பெரும் ஆயுளைத் தருபவளே போற்றி
ஓம் கண்ணில் தெரியும் கற்பகமே போற்றி
ஓம் கலை அருளும் வித்யாமயியே போற்றி
ஓம் பண்ணில் மயங்கும் பார்கவியே போற்றி
ஓம் பலமும் புகழும் தருபவளே போற்றி
ஓம் மண்ணில் மலரும் திருவழகே போற்றி
ஓம் மாநிதி செல்வம் தருபவளே போற்றிப் போற்றி!
No comments:
Post a Comment