ஓம் திருவரங்கமே திகழ்பவனே போற்றி
ஓம் திவ்யதேசத்து முதல்வனே போற்றி
ஓம் இருநதியிடையில் கிடப்பவனே போற்றி
ஓம் இருமொழி மறைகள் கேட்பவனே போற்றி
ஓம் திருச்சுற்று ஏழு உடையவனே போற்றி
ஓம் திருவாராதனப் பெருமாளே போற்றி
ஓம் தரும வர்மனின் திருத்தலனே போற்றி
ஓம் தானாய்த் தோன்றிய தலத்தனே போற்றி
ஓம் விருப்பன் திருநாள் உற்சவனே போற்றி
ஓம் விதவித நடைகள் பயில்பவனே போற்றி
ஓம் பெருமைகள் நிறைந்த பெருமாளே போற்றி
ஓம் பேராயிரானே திருமாலே போற்றி
ஓம் பொன்னரங்கத்துப் பூபதியே போற்றி
ஓம் பூலோக வைகுந்தம் ஆள்பவனே போற்றி
ஓம் தென் அரங்கத்து தேவனே போற்றி
ஓம் திரளும் கோபுரங்கள் சூழ்ந்தவனே போற்றி
ஓம் மின்னிடும் கனக விமானனே போற்றி
ஓம் வீடணன் கொணர்ந்த மாலவனே போற்றி
ஓம் மன்னர்கள் போற்றிய மாலவனே போற்றி
ஓம் மணத்தூண்களிடை திகழ்பவனே போற்றி
ஓம் தென்திசை நோக்கிய திருமுகனே போற்றி
ஓம் த்ரேதாயுகத்துப் பெருமாளே போற்றி
ஓம் சன்னிதி அழகாய்க் கிடப்பவனே போற்றி
ஓம் தசாவதாரப் பெருமாளே போற்றி
ஓம் நாகத்தணையில் துயில்பவனே போற்றி
ஓம் நம்பெருமாள் என ஆனவனே போற்றி
ஓம் தேகம் கிடந்த ஒயிலழகே போற்றி
ஓம் திசை கீழ் மேலாய்ப் படுத்தவனே போற்றி
ஓம் யோகசயனமாய் அமைந்தவனே போற்றி
ஓம் யுகங்கள் கடந்த பெருமானே போற்றி
ஓம் யாக பேரரின் கோலனே போற்றி
ஓம் யவன ராஜனே யாதவனே போற்றி
ஓம் போக மண்டபம் திகழ்பவனே போற்றி
ஓம் புவனம் ஏழினுள் அமைந்தவனே போற்றி
ஓம் மேக வண்ணனே மாதவனே போற்றி
ஓம் விஷேசம் மூன்றுடை தலத்தனே போற்றி
ஓம் சத்ய லோகத்து பெருமாளே போற்றி
ஓம் சதுர் முகன் போற்றிய சுந்தரனே போற்றி
ஓம் முத்தியின் வடிவ மூலனே போற்றி
ஓம் மோகினி கோல ஜாலனே போற்றி
ஓம் இத்தரை வந்த ஈசனே போற்றி
ஓம் இக்ஷ்வாகு குலப் போற்றுதலே போற்றி
ஓம் சித்திகள் அருளும் ஸ்ரீதரனே போற்றி
ஓம் ஸ்ரீ ராமனின் குல தெய்வமே போற்றி
ஓம் நித்தமும் உற்சவம் காண்பவனே போற்றி
ஓம் நீலமேகனே ஸ்யாமளனே போற்றி
ஓம் பக்தர்கள் பலரை ஈர்த்தவனே போற்றி
ஓம் பரவாஸுதேவப் பெருமாளே போற்றி
ஓம் பெரிய கோயிலின் பேரருளே போற்றி
ஓம் பெரிய பெருமாள் நாமம் கொண்டவனே போற்றி
ஓம் பெரிய மதிள்களைக் கொண்டவனே போற்றி
ஓம் பெரிய கோபுரம் கொண்டவனே போற்றி
ஓம் பெரிய பிராட்டி உடனுறைவாய் போற்றி
ஓம் பெரிய கருடனின் போற்றுதலே போற்றி
ஓம் பெரிய அதிரசம் ஏற்பவனே போற்றி
ஓம் பெரிய பணியாரம் ஏற்பவனே போற்றி
ஓம் பெரிய மேளத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் பெரியாழ்வாரின் மருமகனே போற்றி
ஓம் பெரிய அரங்கிலே திகழ்பவனே போற்றி
ஓம் பெரிய செயல்களைப் புரிபவனே போற்றி
ஓம் பரமபத வாசல் வருபவனே போற்றி
ஓம் பைந்தமிழ்ப் பாசுரம் கேட்பவனே போற்றி
ஓம் அரவரசப் பெரும் சோதியனே போற்றி
ஓம் ஆனந்த சயனப் பெருமாளே போற்றி
ஓம் அரங்க மாநகர் ஆள்பவனே போற்றி
ஓம் ஆதி ரங்கத்து அழகியனே போற்றி
ஓம் மரமாம் புன்னையடி மகிழ்பவனே போற்றி
ஓம் மாமதி சந்திரன் போற்றுதலே போற்றி
ஓம் வரத நாரணப் பெருமாளே போற்றி
ஓம் மங்கை மன்னனின் வாழ்த்துதலே போற்றி
ஓம் அரையர் சேவையைக் காண்பவனே போற்றி
ஓம் ஆழ்வார் பாசுரம் கேட்பவனே போற்றி
ஓம் சந்த்ர புஷ்கரிணி தீர்த்தனே போற்றி
ஓம் சூர்ய புஷ்கரிணி தீர்த்தனே போற்றி
ஓம் வில்வ தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் நாவல் தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் அரசு தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் புன்னை தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் மகிழ தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் புரசு தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் கடம்ப தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் மா தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் விரஜா நதியின் தீரனே போற்றி
ஓம் காவிரி தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் அழகிய மணவாளப் பெருமாளே போற்றி
ஓம் அஷ்ட மகிஷி சமேதனே போற்றி
ஓம் திருமார்பு லக்ஷ்மி அழகியனே போற்றி
ஓம் ரங்க நாயகியின் இணையோனே போற்றி
ஓம் கமலவல்லியுடன் உறைபவனே போற்றி
ஓம் சேரகுல வல்லி சமேதனே போற்றி
ஓம் ஸ்ரீ தேவியின் ச்ருங்காரனே போற்றி
ஓம் பூ தேவியின் மணாளனே போற்றி
ஓம் ஆண்டாள் மணந்த ஆயனே போற்றி
ஓம் அன்னை காவிரியை ஏற்றவனே போற்றி
ஓம் பங்குனி உத்திர பெருமாளே போற்றி
ஓம் வைகுண்ட ஏகாதசி உற்சவனே போற்றி
ஓம் வேதஸ்வரூப கோலனே போற்றி
ஓம் வேதஸ்ருங்க முடியோனே போற்றி
ஓம் வேதப்ரணவ விமானனே போற்றி
ஓம் வேத அக்ஷர மண்டபனே போற்றி
ஓம் பதின்மர் பாடிய பெருமாளே போற்றி
ஓம் பாதம் குண திசை வைத்தவனே போற்றி
ஓம் முதிர்ந்த அருளெனும் கனியமுதே போற்றி
ஓம் முடியைக் குட திசை வைத்தவனே போற்றி
ஓம் திருப்பாணனின் பண் எழிலே போற்றி
ஓம் திவ்ய ப்ரபந்த சொல்லழகே போற்றி
ஓம் கருடாதி ராஜ திருமாலே போற்றி
ஓம் ஸ்ரீ ரங்கராஜ பெருமாளே போற்றி போற்றி
No comments:
Post a Comment