நிதம் உன்னைத் தொழுகின்றோம் கணபதிமகள் உன்னை நாடியே வந்தோம் துணை உந்தன் பொற்பதமே ! ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!
சிவந்த உன் திருமுகம் செந்தாமரையோ! இருள் வழி அருள் மொழியோ! அம்மா அழகின் கொலுவறையோ வெள்ளிக்கிழமையில் நோன்பு தொடங்குவோம் மஞ்சள் குங்குமம் தா ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!
விளக்கினையேற்றி உன்புகழ் போற்றி வினாயகனைத் தொழுவோம் அவனின் குமரியை இனி மறவோம்! கலச ஜலம் அதைத் தூவித் தெளித்தோம் துளசியைப் பூஜித்தோம் ! ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!
பாயசம் வைத்தோம் புளியை மறுத்தோம் குழந்தைகளை அழைத்தோம்! எட்டுபேர் விருந்துண்ணவே படைத்தோம் எல்லோரும் கேட்க உன் கதை படித்தோம் இல்லத்தில் இருந்திடம்மா ! ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!
கடலையும் வெல்லமும் வினியோகித்தோம் கவலைகள் தீர்த்திடம்மா! உந்தன் கடைக்கண் பார்த்திடம்மா! விரதம் முடித்தோம் ஆரத்தி எடுத்தோம் கேட்டதைக் கொடுத்திடம்மா ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!
பவழம் இதழ்கள் முல்லை மலர்கள், சிரிப்பினிலே மயங்குகிறோம், அம்மா பளிங்குபோல் உள்ளம், உருவமும் பளிங்கு புனிதம் உன் பார்வையம்மா!ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!
வரம் தர வேண்டும் அம்மா நிதம் உன்னைத் தொழுகின்றோம் கணபதிமகள் உன்னை நாடியே வந்தோம் துணை உந்தன் பொற்பதமே ! ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!
No comments:
Post a Comment