உந்தியில் மலரோன் தேவனே!
அகிலத்தின் மூலோன், விண்ணென விரிந்தோன்
முகில்களின் நிறத்தோன், அழகனே
திருமகள் துணையோன், தாமரை விழியோன்
யோகியர் உளக் கோயிலோன்!
பவபயம் தீர்த்து உலகங்கள் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன்!
கிழக்கினில் என்னை ஸ்ரீஹரி காக்க! மேற்கினில் என்னை சுதர்சனன் காக்க!
கிருஷ்ணன் என்னை தெற்கினில் காக்க! திருவின் நாயகன் வடக்கில் காக்க!
ஆனந்தம் தருவோன் மேற்புறம் காக்க! சார்ங்கம் கொண்டோன் கீழ்புறம் காக்க!
மலர்பதம் உடையோன் பதங்களை காக்க! நலமுடன் முன் தொடை ஜனார்தனன் காக்க !
த்ரிவிக்ரமன் எந்தன் பின் தொடை காக்க! ஸ்ரீ ஜகந்நாதன் முட்டியைக் காக்க!
ஸ்ரீ ரிஷிகேசன் குறிகளைக் காக்க! அழிவில்லாதோன் பின்புறம் காக்க!
அனந்தனே என்றும் உந்திசுழி காக்க! அரக்கனை வென்றோன் தொந்தியை காக்க!
நலமுடன் இதயத்தை தாமோதரன் காக்க ! நரஹரி மார்பினை திடமுடன் காக்க!
காளிங்கனை வென்றோன் கரங்களை காக்க! கஷ்டங்கள் தீர்ப்போன் புஜங்களை காக்க !
கார்முகில் நிறத்தோன் கழுத்தினைக் காக்க! கம்சனை வதைத்தோன் தோள்களைக் காக்க!
நாசியை நலமுடன் நாரணன் காக்க! கேசியை வென்றவன் செவிகளைக் காக்க !
கபாலம் தன்னை வைகுந்தன் காக்க! தயாளன் எந்தன் நாவினைக் காக்க!
கருநீல விழியோன் கண்களைக் காக்க! புருவத்தை பூதேவி நாயகன் காக்க !
பத்துதலை தகர்த்தோன் வாயினைக் காக்க! அச்சுதன் என்றும் நெற்றியைக் காக்க!
முகத்தினை பொலிவுடன் கோவிந்தன் காக்க! சிரத்தினை கருட வாகனன் காக்க!
பக்தரை விரும்புவோன் நோய்தீர்த்து காக்க! அங்கங்கள் யாவும் சேஷசாயி காக்க!
பிசாசு,நீர்,தீ தொல்லைகளி லிருந்து வாமனன் என்னை என்றும் காக்க!
என்னை துரத்தும் இன்னல்களி லிருந்து புருஷோத்தமனே என்றும் காக்க!
பிணிகளை தீர்க்கும் பகைகளை அழிக்கும் மங்கலம் அளிக்கும் ஸ்ரீவிஷ்ணு கவசம் இது!
No comments:
Post a Comment