கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண் நந்தியுள் ளிட்டோரான நற்கணநாதன் ஆனான் மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான மகாரமாய் உருக்கொள் வோனை மனங்கொளத் துதிக்கின்றேனே
தக்கனின் யாகம் தன்னைத் தகர்த்து தாட்சாயனியின் மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன் தொக்கமா விடைக்கொ டிகொள் தூயனை அரனை அந்தச் சிகாரமாய் உருக்கொள் வோனைச் சிவனையான் துதிக்கின்றேனே.
வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல் தவத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழுது வாழ்த்தும் சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின் றேனே.
யட்ச சொரூபம் கொண்ட யாகசெஞ் சடையைக் கொண்ட கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் ப்ரராம் துய்ய யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.
No comments:
Post a Comment