ஜய ஜய சந்தோஷிமாதா!
செல்வங்கள் அனைத்தையும் எங்களுக்களித் திடும்!
ஜய ஜய சந்தோஷிமாதா!
அழகிய ஆடையும் ஆபரணங்களும் அன்புடன் அணிவாய் மாதா நீயே!
இரத்தின ஒளிதான் உன் உடல் தாயே!
இரக்கம் மிகக் கொண்டு அருள் செய்வாயே!
ஜய ஜய சந்தோஷிமாதா!
தாமரை மலர் போல் சிவந்த உன் முகமும்!
மங்களமான உன் மந்தகாசமும் கண்டு!
மூவு லகத்தார் மனமும் மோகிக்கும் தாயே!
பூவுலகெங்கும் உனக்கிணை நீயே!
ஜய ஜய சந்தோஷிமாதா!
சுவர்ண சிம்மாசனத்தில் நீ அமர்ந்திருக்க!
சுந்தரி உனக்கு வீசுவேன் சாமரம்!
தூபமும் தீபமும் தேனும் பழமும்!
துதித்து நான் உனக்குச் செய்வேன் நிவேதனம்!
ஜய ஜய சந்தோஷிமாதா!
வெள்ளிக் கிழமையே விரதத் திருநாள்!
உன் வீரக்கதை கேட்கவும் அதுவே நன்னாள்!
வெல்லமும் கடலையும் பிடித்தவை உனக்கே!
வெற்றியைத் தருவதால் சந்தோஷி நீயே!
ஜய ஜய சந்தோஷிமாதா!
கோயில் எங்கும் பளிச்சென ஒளிவீச!
மங்கள வாத்தியம் எங்கும் முழங்கும்!
சிறுவர் சிறுமியர் உன்னடி பணிவார்!
சிறப்புகள் தருவாய் ஐகன்மாதா நீயே!
ஜய ஜய சந்தோஷிமாதா!
பக்திமிக்க எங்கள் பூஜையை ஏற்பாய்!
பக்தர்கள் எங்கள் எண்ணத்திற்கு அருள்வாய்!
ஏழை எளியோர் துயர்தனைத் துடைப்பாய்!
இல்லங்கள் தோறும் தானியம் தருவாய்!
ஜய ஜய சந்தோஷிமாதா!
தியானத்தால் பெரும் பலன்கள் நேரும்!
உன் திருக்கதை கேட்டாலே நினைத்தது கைகூடும்!
ஸ்ரீ சந்தோஷிமாதா உனக்கு ஆரத்தி எடுப்போம்!
சகல சம்பத்தும் பெறுவோம் உறுதியம்மா!
ஜய ஜய சந்தோஷிமாதா!
No comments:
Post a Comment