Monday, August 26, 2024

ஸ்ரீகிருஷ்ணா பள்ளி எழுச்சி | Shri Krishna Palli Ezhuchi

யசோதையின் மைந்தா ஸ்ரீகிருஷ்ணா எழுந்தருள்வாய்!
யமுனையில் நீராடும் மாதவனே எழுந்தருள்வாய்!
கோபியர்கள் கொஞ்சிடும் கோபாலா எழுந்தருள்வாய்!
கோவர்தன மலை எடுத்த கோவிந்தா எழுந்தருள்வாய்!

அகிலத்தை தாங்கும் இறைவா எழுந்தருள்வாய்!
ஆநிரை மேய்த்த கண்ணனே எழுந்தருள்வாய்!
இன்பங்கள் தந்திடும் இறைவா எழுந்தருள்வாய்!
ஈசனும் வணங்கும் தேவா எழுந்தருள்வாய்!

உலகளந்த பெருமாளே மாயவனே எழுந்தருள்வாய்!
ஊனுக்குள் உயிராய் நிறைந்தவனே எழுந்தருள்வாய்!
எங்கும் நிறைந்த பரம்பொருளே எழுந்தருள்வாய்!
ஏழுமலை வாழும் ஸ்ரீனிவாசா எழுந்தருள்வாய்!

ஐயங்கள் தீர்த்தருளும் ஆதவனே எழுந்தருள்வாய்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அரங்கனே ! எழுந்தருள்வாய் !
ஒருபொழுதும் கைவிடேன் என்றவனே எழுந்தருள்வாய்
ஒன்றாகி நின்ற சுடரோனே ! ஒப்பிலி அப்பனே பரம்பொருளே ! எழுந்தருள்வாய் !

ஓங்காரப் பொருளதனை உணர்த்திடுவான் எழுந்தருள்வாய்!
ஓங்கி உலகளந்த உத்தமனே ! வேதம் போற்றும் மன்னா ! எழுந்தருள்வாய் !
ஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய்
ஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வாய்!

வைகலும் வெண்ணை கைகலந்து உண்டவா எழுந்தருள்வாய்!
மையல் செய்யும் மைவண்ணா ! வையம் கொண்ட வாமனா எழுந்தருள்வாய் !
தளர்ச்சி இன்றி மலையை தூக்கி சொக்க வைத்த வித்தகா எழுந்தருள்வாய்!
போதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க எழுந்தருள்வாய் !

சௌமித்திரி பாக்கியமே ! கௌசலைக் கொழுந்தே ! எழுந்தருள்வாய் !
மால்வண்ணா மழை போலொளி வண்ணா எழுந்தருள்வாய்!
பாகவதர் பலருன்னைப் போற்றிடவே எழுந்தருள்வாய்!
பையவே எழுந்தென்னைப் பார்த்திடவே எழுந்தருள்வாய்!


No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...