2.உதயசூரியனுக்கு நிகரான சிவந்த தாமரை போன்ற முகத்தை உடையவரும், கருணையால் கண்ணீர் வழியும் கண் பார்வையை உடையவரும், சஞ்சீவி மலையைக்கொண்டு வந்து போரில் இறந்த வானரர்களை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தவரும், மனதை ஈர்க்கும் மகிமை படைத்தவரும், அஞ்சனாதேவியின் புண்ணியத்தின் பலனாகத் தோன்றியவருமாகிய ஹனுமாரை தரிசிக்க விரும்புகிறேன்.
3. காமத்தை வென்றவரும், தாமரை இதழ்போன்ற பரந்த கண்களால் அழகு வாய்ந்தவரும், சங்கு போன்ற கழுத்தை உடையவரும், கோவைப்பழம் போல் சிவந்து பிரகாசிக்கும் உதடு உடையவரும், வாயு புத்திரருமாகிய ஹனுமாரை ஒரே ஆதாரம் என்று சரணடைகிறேன்.
4. சீதையின் துன்பத்தைப் போக்கியவரும், ஸ்ரீராமபிரானின் புகழைப் பிரகாசிக்கச் செய்தவரும், ராவணனுடைய புகழை அழித்தவருமாகிய ஹனுமாரின் உருவம் என் முன்னால் தோன்றட்டும்.
5.வானரக் கூட்டத்தின் தலைவரும், அசுர வம்சமாகிய ஆம்பல் மலரை சூரியகிரணம் போல்இருந்து அழித்தவரும், எளியவர்களைக் காப்பாற்றுவது என்ற உறுதியாக சித்தம் கொண்டவரும், வாயு பகவான் செய்த தவத்தின் வடிவமாக இருப்பவருமாகிய ஹனுமாரை நான் நேரில் கண்டேன்.
பஞ்சரத்தினம் என்று பெயர் பெற்ற ஹனுமாரின் இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறாரோ, அவர் இந்த உலகில் நீண்ட காலம் எல்லா இன்பங்களையும் அனுபவித்து ஸ்ரீராமபக்தனாகவும் விளங்குவார்.
No comments:
Post a Comment