Saturday, August 10, 2024

சிக்ஷாஷ்டகம் தமிழ் வரிகளுடன்|Sikshashtaka Tamil

1. ஸ்ரீகிருஷ்ணநாம சங்கீர்த்தனத்திற்கு எல்லா வெற்றியும் உரித்தாகட்டும். இது காலம் காலமாக நம் இதயத்தில் படிந்துள்ள மாசுக்களை நீக்கி, கட்டுண்ட வாழ்வில் தொடரும் பிறப்பு இறப்பு என்ற தீயை அணைக்கிறது. நிலவு தன் ஒளியால் குளிர்ச்சியை கொடுப்பது போல, இந்த ஸங்கீர்த்தனமானது மனித இனத்திற்கு பெரும் வரப்பிரசாதமாகும். இது தெய்வீக ஞானத்திற்கு வித்திடுகிறது. பேரானந்த கடலை பெருக வைக்கிறது. எப்பொழுதும் நாம் விரும்பும் அமிர்த்தை முழுமையாக சுவைக்கச் செய்கிறது



2. எம்பெருமானே, உமது திருநாமம் மட்டுமே அனைத்து ஜீவன்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாகும். இவ்வாறாக கிருஷ்ணா, கோவிந்தா என ஆயிரக்கணக்கான உடையவராயிருக்கிறீர். தெய்வீக நாமங்களில் தெய்வீக சக்தியை இருக்கிறீர்கள். இந்த நாமங்களை இத்தகைய உம்முடைய உள்ளடக்கி நாமங்களை ஜெபிப்பதற்கு கடினமான நிபந்தனை எதுவும் இல்லை. உம்முடைய கருணையினால், உம்முடைய தெய்வீகநாமங்களினால், நாங்கள் சுலபமாக உம்மை அடைந்துவிட முடியும். ஆனால் இத்தகைய நாமங்களில் சுவையற்ற நான் துர்பாக்கியசாலியாக இருக்கிறேன். மிகவும்

3. பகவானின் புனித நாமத்தை ஜெபிக்கும் ஒருவர் தாழ்வான மனநிலையில் இருக்க வேண்டும். புல்லைக் காட்டிலும் பணிவாக இருக்க வேண்டும். மரத்தை விடப் பொறுமையாக இருக்க வேண்டும். தனக்கென்று எந்த மரியாதையையும் எதிர்பார்க்கக் கூடாது.பிறருக்கு எல்லா மரியாதையையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மனநிலையில் ஒருவர் பகவானின் புனித நாமத்தை இடைவிடாமல் உச்சரிக்க முடியும்.

4. எல்லாம் வல்ல பெருமானே, பொருள் சேர்க்கும் விருப்பம் இல்லை. அழகிய பெண்களை விரும்பவில்லை, என்னை பின்பற்றுவோரும் எனக்கு வேண்டாம், ஒவ்வொரு பிறவியிலும் உமக்கு ஆற்றும் உள்நோக்கமற்ற பக்தி சேவையை மட்டுமே நான் வேண்டுகின்றேன்.

5. நந்த மஹாராஜாவின் புதல்வனே (கிருஷ்ணா), நான் உனது நிரந்தர சேவகன், எவ்வாறோ நான் பிறப்பு, இறப்பு என்ற கடலில் விழுந்துவிட்டேன். தயவு செய்து என்னை இந்த கடலில் இருந்து கை தூக்கிக் காப்பாற்றி, உங்களுடைய தாமரைப் பாதங்களில் ஒரு தூசியாக வைத்துக் கொள்ளுங்கள்.

6. எம்பெருமானே, தங்கள் புனித நாமத்தை ஜபிக்கும் போது, என் கண்களில் பக்திப் பரவசத்தால் ஆனந்த கண்ணீர் பெருகுவது எப்பொழுது? மேலும் எப்பொழுது எனது குரல் தழுதழுத்து, மயிர்க் கூச்செறிந்து உமது நாமத்தை நான் ஜபிக்கப் போகிறேன்?

7. ஓ கோவிந்தா! உம்முடைய பிரிவினால், ஒரு நொடிப் பொழுதையும், பல யுகங்களாக உணர்கிறேன். கண்களில் கண்ணீர் பெருகி மழை போல் பொழிகிறது. நீங்கள் இல்லாமல் அனைத்து உலகத்தையும் வெற்றிடமாக நான் உணர்கிறேன்.

8. கிருஷ்ணரை தவிர வேறு எவரையும் நான் என் இறைவனாக அறியேன். அவர் என்னை முரட்டுத்தனமாக நடத்தினாலும், அணைத்துக் கொண்டாலும், என் முன் தோன்றாமல் என் இதயத்தை பிளக்கச் செய்தாலும் அவரே என் பிரபுவாவார், என்னிடம் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்து கொள்ள அவருக்கு முழுஉரிமை உண்டு. ஏனென்றால் எவ்வித நிபந்தனையும் இன்றி, அவர் எப்பொழுதும் எனது வழிபாட்டிற்குரிய பகவானே ஆவார்.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...