Saturday, March 29, 2025

கணபதி பஞ்சகம் தமிழ்| Ganapathi Panchakam Tamil

♦️♦️கணபதி பஞ்சகம் = 1

🚩கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்
கணபதியின் அருள்நினையக் கமலமென மனம்விரியும்
கணபதியின் புகழ்செவியில் கலந்திடவுட் குழைந்துருகும்
கணபதியின் பெயர்மொழியக் கனிவுறுசெங் கவியெழுமே.

🌹பொருள் விளக்கம்:

விநாயகரின் சிலம்புகள் அணிந்த திருவடிகளை வணங்கி தொழுதால் கொடிய வினைகளின் பயன்கள் நம்மை வருத்தாமல் விட்டு அகலும்;
விநாயகரின் திருவருளின் மகிமையை எண்ணித் துதிக்கும்போது தாம ரையைப் போல நம் மனம் மலரும்;
கணேசரின் திருப்புகழானது நம் செவிகளில் நிறைந்திடும் போது மனம் நெகிழ்ந்து உருகும்;
கணநாதரின் திருநாம ங்க ளை ச் சொல்லச் சொல்ல இனிமை மிகுந்த தாகவும் சீராகவும் விளங்கும் கவிதைகள் கணேசரின் திருவருளால் நமக்குள்ளிலிரு ந்து தாமாகவே உருவாகும்.

♦️♦️கணபதி பஞ்சகம் = 2

🚩அலமருமென் உளம்தெளிய அருள்பொழியும் அணிமுகிலாம் 
நலமிகுகற் பகமலராம் நவநிதியத் தொருகுவையாம் 
கலிநலிய வருகதிராம் களிதருமுத் தமிழமுதாம் 
கலைநிலவின் குளிரொளியாம் கணபதியின் கழல்நிழலே. 

🌹பொருள் விளக்கம்:

கவலைச் சுழலில் கிடந்து தவிக்கின்ற எனது மனம் தெளிவடையுமாறு திருவருளைப் பொழியும் அழகிய மேகமாக விளங்கும்;
என்றும் வாடாமல் நலமிக்க கற்பகமரத்தின் மலர் போல மனம் எங்கும் மணம் பரப்பும்; ஒன்பது விதமான செல்வங்க ளின் கொள்ளக்குறையாத குவியல் போன்ற நிறைவைத் தரும்;
துன்பங்கள் ஆகிய இருள் எல்லாம் அழிந்து ஒழியுமாறு சூரியனைப் போல உதிக்கும்; இன்பத்தைத் தருகின்ற இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழாகிய அமுதத்தைப் போன்றது;
கலைக ளாகிய பருவங்கள் விளங்கும் நிலவின் குளிர்ச்சி பொருந்திய ஒளியை வீசிப் பக்தர்களின் மனத்தில் துயர் என்னும் வெம்மையைப் போக்கி அருளும். விநாயகரின் சிலம்பு அணிந்த திருவடிகளின்குளிர்ந்த நிழலானது

♦️♦️கணபதி பஞ்சகம் = 3.

🚩இயற்றரிய திருக்கதையை இயம்பிடுநான் மறைமுனிவற்(கு)
எயிற்றினையன் றெடுத்தெழுதி இரும்பனுவல் அளித்தருள்வான்
நயத்தகுநுண் நுழைபுலனும் நவையறுநன் மனநிறையும்
வியத்தகுசெங் கலையறிவும் விரைந்தருளும் கணபதியே.

🌹பொருள் விளக்கம்:
பண்டொருநாள் யாரும் இயற்றுவ தற்கு அரிய புனிதமான காப்பிய மான மகாபாரதத்தை வாய்மொழியாகச் சொன்ன வேத வியாசருக்காக
தமது தந்தங்களில் ஒன்றை ஒடித்து எடுத்து
அம்முனிவர் சொல்லச் சொல்ல ஏட்டில் எழுதி ஒரு மிகப்பெரிய நூலாக அமையுமாறு அருளினார்.
பக்தர்கள் வேண்டுகின்ற நுண்மையான ஆழ்ந்த அறிவையையும், குற்றம் குறைகள் நீங்கிய மன நிறைவையும்
வியக்கத் தக்க கலைகளில் தேர்ச்சியையும் உடனே அருளுகின்ற ஶ்ரீ கணேசப் பெருமான்

♦️♦️கணபதி பஞ்சகம் = 4.

🚩அனற்படுமோர் புழுவெனவே அழன்றுழலா திமைப்பொழுதும்
இனித்தமுறக் கணபதியின் நினைப்பொழியா திருமனமே,
அனைத்துலகும் வயிற்றொடுங்க அணிமணியோ டெயிறிலங்கத்
தனிப்பெருநல் லருணடஞ்செய் தளிரடிகள் நமக்கரணே.

🌹பதவுரை:
நெருப்பினில் பட்ட ஒரு புழுவைப் போல துன்பத்தால் தவிதவித்து
சுழல்வதைத் தவிர்த்து, நொடிப்பொழுதும்
கணபதியின் நினைப்பு ஒழியாது
ஶ்ரீ கணேசரின் மகிமை யை நினைப்பதை நிறுத்தாமல் அவரது திருவருளின் இனிமை யில் லயித்து இருப்பாயாக…
என் மனமே! எல்லா உலகங்களும்.தம் திருவயிற்றில் அடங்கி இருக்க, அழகிய மணிகளுடன் தந்தமும் ஒளி வீசித் திகழுமாறு
தனிப்பெருமை வாய்ந்த நலம் அருள்கின்ற, நர்த்தனத்தைப் புரிகின்ற (விநாயகரின்) மென்மை பொருந்திய திருவடிகள்.நமக்குக் காப்பாக இருப்பதால்,

♦️♦️கணபதி பஞ்சகம் = 5

🚩எழிலொழுகும் தடவிழியும் தழைந்தசையும் இருசெவியும்
புழையுறுகைக் கயமுகமும் பொழிகருணை 
மழைமதமும்
செழுமலரின் விரைகமழும் திருவடியும் திகழ்வுறுமோர்
பழமறையின் அருளுருவைக் கணபதியைப் பணிமனமே.

🌹பதவுரை:
அழகு விளங்கும் படர்ந்த விழிகளும் நீண்டு தொங்கியவாறு அசைகின்ற இரண்டு திருச்செவிகளும்
துளைகள் கொண்ட துதிக்கை உடைய யானையின் திருமுகமும் கருணை மழையை பொழிகின்ற மதத்தையும்
செழுமை மிக்க மலர்களின் வாசனை எழும்பும் திருவடிகளும் விளங்குகின்ற தனிச்சிறப்பு வாய்ந்த
பழமையான வேதங்களின் அருள் வடிவமாகத் திகழ்பவரை ஶ்ரீ கணேசரை பணிந்து வணங்குவாயாக…என் மனமே…
 
♦️♦️கணபதி பஞ்சகம் = 2

🚩அலமருமென் உளம்தெளிய அருள்பொழியும் அணிமுகிலாம் 
நலமிகுகற் பகமலராம் நவநிதியத் தொருகுவையாம் 
கலிநலிய வருகதிராம் களிதருமுத் தமிழமுதாம் 
கலைநிலவின் குளிரொளியாம் கணபதியின் கழல்நிழலே. 

🌹பொருள் விளக்கம்:
கவலைச் சுழலில் கிடந்து தவிக்கின்ற எனது மனம் தெளிவடையுமாறு திருவருளைப் பொழியும் அழகிய மேகமாக விளங்கும்;
என்றும் வாடாமல் நலமிக்க கற்பகமரத்தின் மலர் போல மனம் எங்கும் மணம் பரப்பும்; ஒன்பது விதமான செல்வங்க ளின் கொள்ளக்குறையாத குவியல் போன்ற நிறைவைத் தரும்;
துன்பங்கள் ஆகிய இருள் எல்லாம் அழிந்து ஒழியுமாறு சூரியனைப் போல உதிக்கும்; இன்பத்தைத் தருகின்ற இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழாகிய அமுதத்தைப் போன்றது;
கலைக ளாகிய பருவங்கள் விளங்கும் நிலவின் குளிர்ச்சி பொருந்திய ஒளியை வீசிப் பக்தர்களின் மனத்தில் துயர் என்னும் வெம்மையைப் போக்கி அருளும்.
விநாயகரின் சிலம்பு அணிந்த திருவடிகளின்குளிர்ந்த நிழலானது


No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...