Sunday, February 23, 2025

Nayamargal 108 Potri| நாயன்மார்கள் 108 போற்றி

ஓம் அதிபத்தநாயனாரே போற்றி
ஓம் அப்பூதியடிகளே போற்றி
ஓம் அமர்நீதிநாயனாரே போற்றி
ஓம் அரிவாட்டாயரே போற்றி
ஓம் ஆனாய நாயனாரே போற்றி
ஓம் இசைஞானியாரே போற்றி
ஓம் இடங்கழி நாயனாரே போற்றி
ஓம் இயற்பகை நாயனாரே போற்றி
ஓம் இளையான்குடி மாறரே போற்றி
ஓம் எறிபத்தரே போற்றி
ஓம் ஏனாதிநாதரே போற்றி
ஓம் ஏயர்கோன்கலிக்காமரே போற்றி
ஓம் ஐயடிகள் காடவர்கோனே போற்றி
ஓம் கணநாதரே போற்றி
ஓம் கணம்புல்லரே போற்றி
ஓம் கண்ணப்பரே போற்றி
ஓம் கலிக்கம்பரே போற்றி
ஓம் கலிய நாயனாரே போற்றி
ஓம் சுழற்றறிவாரே போற்றி
ஓம் சுழற்சிங்கரே போற்றி
ஓம் காரி நாயனாரே போற்றி
ஓம் காரைக்கால் அம்மையே போற்றி
ஓம் குங்கிலியக்கலியரே போற்றி
ஓம் குலச்சிறையாரே போற்றி
ஓம் கூற்றுவ நாயனாரே போற்றி
ஓம் கோட்புலி நாயனாரே போற்றி
ஓம் கோச்செங்கட் சோழரே போற்றி
ஓம் சடைய நாயனாரே போற்றி
ஓம் சண்டேசுவரரே போற்றி
ஓம் சக்தி நாயனாரே போற்றி
ஓம் சாக்கிய நாயனாரே போற்றி
ஓம் சிறுத்தொண்டரே போற்றி
ஓம் சிறுப்புலி நாயனாரே போற்றி
ஓம் சுந்தரரே போற்றி
ஓம் செருத்துணையாரே போற்றி
ஓம் சோமாசிமாறரே போற்றி
ஓம் தண்டியடிகளே போற்றி
ஓம் திருக்குறிப்புத்தொண்டரே போற்றி
ஓம் திருஞானசம்பந்தரே போற்றி
ஓம் திருநாவுக்கரசரே போற்றி
ஓம் திருநாளைப்போவாரே போற்றி
ஓம் திருநீலகண்டரே போற்றி
ஓம் திருநிலநக்கரே போற்றி
ஓம் திருநீலகண்டயாழ்ப்பாணரே போற்றி
ஓம் திருமூலரே போற்றி
ஓம் நமீநந்தியடிகளே போற்றி
ஓம் நரசிங்கமுனையரையரே போற்றி
ஓம் நேச நாயனாரே போற்றி
ஓம் நின்றசீர்நெடுமாறரே போற்றி
ஓம் புகழ்ச்சோழரே போற்றி
ஓம் புகழ்த்துணை நாயனாரே போற்றி
ஓம் பூசலார் நாயனாரே போற்றி
ஓம் பெருமிழலைக்குறும்பரே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியாரே போற்றி
ஓம் மானக்கஞ்சாறரே போற்றி
ஓம் முருக நாயனாரே போற்றி
ஓம் முனையடுவார் நாயனாரே போற்றி
ஓம் மூர்த்தியாரே போற்றி
ஓம் மூர்க்க நாயனாரே போற்றி
ஓம் மெய்ப்பொருள் நாயனாரே போற்றி
ஓம் ருத்ரபசுபதியாரே போற்றி
ஓம் வாயிலார் நாயனாரே போற்றி
ஓம் விறன்மிண்ட நாயனாரே போற்றி
ஓம் அறுபத்து மூவரே போற்றி
ஓம் அன்பரே போற்றி
ஓம் அளத்தற்கரியவரே போற்றி
ஓம் அரனடிமையானோரே போற்றி
ஓம் அவனோடிணைந்தவரே போற்றி
ஓம் அரும்சக்தி படைத்தோரே போற்றி
ஓம் அழிவை வென்றோரே போற்றி
ஓம் ஊனுடம்பைக் கருதாரே போற்றி
ஓம் ஊழ்வினையே வென்றோரே போற்றி
ஓம் எளியோரே போற்றி
ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
ஓம் சிவபூஜைப் பிரியரே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போரே போற்றி
ஓம் சிவன்பெருமைபகர்ந்தோரே போற்றி
ஓம் சிவனடியார்க்கருள்வோரே போற்றி
ஓம் சைவம் தழைப்பித்தோரே போற்றி
ஓம் சைவரே போற்றி
ஓம் ஞானியரே போற்றி
ஓம் ஞாலம் வென்றோரே போற்றி
ஓம் திருத்தொண்டரே போற்றி
ஓம் திருமுறைகள் செய்தோரே போற்றி
ஓம் நல்லோரே போற்றி
ஓம் நல்வழிப்படுத்துவோரே போற்றி
ஓம் நீறணிந்தவரே போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகரே போற்றி
ஓம் பல் குலத்தோரே போற்றி
ஓம் பல்வகையில் பூசித்தோரே போற்றி
ஓம் பல்லூரில் பணிந்தோரே போற்றி
ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
ஓம் பசுபாசம் கடந்தோரே போற்றி
ஓம் பரமனைப் பரவியோரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புருஷோத்தமரே போற்றி
ஓம் புறசமயம் வென்றோரே போற்றி
ஓம் புகழ்பெருமையடைந்தோரே போற்றி
ஓம் பிறவி கடந்தோரே போற்றி
ஓம் பெரியபுராண நாயகரே போற்றி
ஓம் பேதம் கடந்தவரே போற்றி
ஓம் போற்றற்குரியோரே போற்றி
ஓம் மறைபொருள் உணர்ந்தோரே போற்றி
ஓம் மயிலையில் தேவரே போற்றி
ஓம் மாயை கடந்தோரே போற்றி
ஓம் மயங்குவோர் துணைவரே போற்றி
ஓம் மும்மலமும் வென்றோர் போற்றி
ஓம் 63 நாயன்மார்களே போற்றிப் போற்றி!

செந்தூர் கந்தன் கவசம்| Senthur Kandhan Kavasam

காப்பு

ஆனை முகனே அன்னையே பாகம் பகிர்ந்து கொடுத்தோனே அடி தொழுது கந்தன் கவசம் பாடுகின்றேன் ஏறுமயில் வேலவா அல்லல் கொடுநோய் ஊழ்வினை அணுகாமல் அருள்வாய் காப்பு!

கவசம்

சரவணபவ என்னும் மந்திரம் சொல்லி சண்முக வேலனை மனதில் வேண்டி தொடங்கிடும் காரியம் அனைத்திலும் வெற்றி கிடைத்திட முருகா அருள்வாய் போற்றி
அழகிய காலை நண்பகல் இரவு கந்தனின் அருளை பெறுவோம் தினமே அன்பெனும் மலரால் அவனடி போற்றி அறிவென்னும் சுடரினை பெறுவாய் மனமே

சந்திரன் இந்திரன் சகலரும் போற்றும் சந்தன மார்பன் எங்கள் வேலன் சக்கர மெனவே சுற்றிடும் வாழ்வில் சங்கடம் தீர்ப்பான் சகலமும் தருவான்

செந்தில் நாதா சிங்கார வேலா கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்

சரவணப் பொய்கை தாமரை மலரில் சங்கரன் நெற்றி நெருப்பென விழுந்தான் கார்த்திகை பெண்கள் கண்ணென வளர்ந்தான் கையில் வேலுடன் சூரனை வென்றான்

கடலெனப் பொங்கும் பெருஞ்சினம் அழித்து உடல் பொருள் ஆவி உள்ளத்தை காப்பான் கடன்சுமை நீங்கி களிப்புடன் வாழ கந்தன் முருகன் கடம்பன் அருள்வான்

ஆறு முகமும் அழகிய சிரிப்பும் அஞ்சன விழியில் பொங்கிடும் அருளும் ஐம்புலன் காத்து ஆறுதல் தருமே வேலும் மயிலும் துணையாய் வருமே

செந்தில் நாதா சிங்கார வேலா கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்

திருப்பரங் குன்றத்தில் ஒருமுகம் அருளும் விருப்பங்கள் யாவும் விரைந்தே நடக்கும் திருச்செந்தூரில் ஒருமுகம் அருளும் சூழ்ந்திடும் பகையை வேருடன் அறுக்கும்

பழனி மலையில் ஒருமுகம் அருளும் பக்தர்கள் வாழ்வில் அதிசயம் நிகழும் சுவாமி மலையில் ஒருமுகம் அருளும் சுடரென இருளைப் போக்கித் துலங்கும்

தணிகை மலையில் ஒருமுகம் அருளும் தரணியின் இன்பம் அனைத்தையும் கொடுக்கும் பழமுதிர் சோலையில் ஒருமுகம் அருளும் நறுமண மலரென அறிவினை விரிக்கும்

செந்தில் நாதா சிங்கார வேலா கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்

அறுபடை வீட்டில் அருள்கின்ற முகங்கள் அமுத மழையினை பொழியும் முகில்கள் தொழுது பணிந்தால் துயரங்கள் விலகும் பழுதுகள் நீங்கி வாழ்க்கை துலங்கும்

நெற்றியில் நீறும் புத்தியில் வேலும் தரித்தவர் வாழ்வில் பெருத்திடும் யோகம் நெஞ்சினில் கந்தன் நினைப்பை வளர்த்திட அருகினில் வரவே அஞ்சிடும் பேய்கள்

அலையும் மனது அடங்கிட வேண்டும் தீரா மோகம் தீர்ந்திட வேண்டும் தீந்தமிழ் தந்த திருவே முருகா திருவருள் தந்து காத்திட வேண்டும்

செந்தில் நாதா சிங்கார வேலா கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்

உச்சி பாதம் உந்தி உதிரம் உள்ளும் புறமும் உறுப்புகள் யாவும் வேதம் நான்கையும் விளம்பிடும் முருகா நன்றாய் இயங்க நல்லருள் செய்வாய்

கொல்லும் கொடுநோய் பஞ்சம் பட்டினி இயல்பை மாற்றும் இயற்கை சீற்றம் காத்து கருப்பு அண்டா வண்ணம் காக்கும் காக்கும் கந்தவேல் காக்கும்

காசம் காய்ச்சல் கரப்பான் அம்மை வாதம் பித்தம் கபநோய் தீர்த்து உடலெனும் சோலையில் உயிரென்னும் மலரை வாழ்விக்கும் மருந்தே வடிவேல் முருகா

செந்தில் நாதா சிங்கார வேலா கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்

சூழும் பகையினை சுடர்வேல் தடுக்கும் வாழும் வழியினை வடிவேல் கொடுக்கும் பன்னிரு கரங்கள் பாய்ந்தென்னை காக்கும் பண்ணிய பாவத்தை பொடிப்பொடி யாக்கும்

உயிரால் உணர்ந்து அறியா தவையும் உணர்வால் விளங்க முடியா தவையும் உணர்ந்திடச் செய்யும் அறிவின் சுடரே ஆறு முகனே அருட்பெரும் வடிவே

மாய மனதில் தெளிவினை தருவாய் மர்மங்கள் யாவும் புரிந்திடச் செய்வாய் உள்ளொளி தந்து நல்வழி காட்டி அபயம் அளித்து ஆட்கொள்ளும் அரசே

செந்தில் நாதா சிங்கார வேலா கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்

சக்தியின் மகனே சண்முக வேலா என்னால் இயல்வது எதுவும் இல்லை நிற்பதும் நடப்பதும் நிகழ்வதும் நீயே நிம்மதி தந்தென்னை காப்பதும் நீயே

எல்லாம் நீயே எனக்குள் நீயே இயக்கமும் விளக்கமும் இன்பமும் நீயே ஆக்கல் அழித்தல் காத்தல் நீயே அருளல் மறைத்தல் அனைத்தும் நீயே

சிக்கலும் நீயே தீர்வும் நீயே கர்ம வினைப்படி விதிப்பதும் நீயே நீயே கதியென நின்றவர் விதியை மாற்றிடும் வல்லமை கொண்டஎன் குமரா

செந்தில் நாதா சிங்கார வேலா கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்


திருமணத் தடைகள் நீங்கிட வேண்டும் குழந்தை பேறு வாய்த்திட வேண்டும் விரும்பிய கல்வி வேலை வாய்ப்பு பொன்பொருள் யோகம் வசப்பட வேண்டும்

உலகியல் இன்பம் பெரிதென எண்ணும் உள்ளத்தில் மாற்றம் நிகழ்ந்திட வேண்டும் எல்லை யில்லா ஆனந்தம் தருவது நின் திருவடி என்பதை உணர்ந்திட வேண்டும்

வழங்கிடும் வானம் பொய்த்திடும் போதும் வாடிய பயிர்களை காத்திட வேண்டும் வடிவேல் முருகன் நாமம் சொன்னால் வரமாய் சாபமும் மாறிட வேண்டும்


செந்தில் நாதா சிங்கார வேலா கந்தா கடம்பா காத்தருள் செய்வாய்

ஏழரை சனியின் தாக்கத்தை போக்கி எழிலுடன் வாழ வைப்பாய் சரணம் ராகு கேது பாம்பின் பிடியில் தீது இன்றி காப்பாய் சரணம்

வியாதிகள் தருகின்ற வஞ்சித தோஷம் துரோகத்தால் விளையும் கல்பித தோஷம் இன்னும் இருக்கின்ற தோஷங்கள் யாவும் யோகங்கள் ஆகிட அருள்வாய் சரணம்

விதிவழி வினைதரும் அல்லல்கள் நீங்க இனியொரு பிறவி இல்லா நிலையும் பிறந்தால் உன்னை மறவா நிலையும் தந்தருள் செய்வாய் கந்தா சரணம்

Wednesday, February 19, 2025

Saptha Mathar Dhyanam | சப்த மாதர் தியானம்

பிராம்மி தியானம்

நான்கு முகங்களையும் நான்கு கைகளையும் உடையவளும், மஞ்சள் நிற ஆடை, மாலை இவற்றால் மிகவும் பிரகாசிக்கின்றவளாயும், வரத, அபய முத்திரைகளைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், உத்திராக்க மாலையை அணிந்திருப்பவளும், கையில் மணியைத் தரித்திருப்பவளும் ஜடா மகுடத்தைக் கொண்டவளும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவளுமான பிராம்மி தேவியைத் தியானம் செய்து பூஜிக்கிறேன்.
மாகேசுவரி தியானம்

ஒரு முகம், மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவளும், ஜடாமகுடத்தைத் தரித்திருப்பவளும், வெண்மை நிறத்துடன் மிக அழகாக ஒளிர்பவளும், வரத, அபய முத்திரைகளைக் கொண்டவளும், மான், உடுக்கை இவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், வ்ருஷப வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், மகாதேவியும் மங்கள வடிவினளும் ஆன மாகேஸ்வரியை தியானம் செய்து பூஜிக்கிறேன்.

கௌமாரி தியானம்

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் உடையவளும், ஜடாமகுடத்தை அணிந்திருப்பவளும், நீலநிற மேனியை உடையவளும், இளம் வயதுடையவளும், வரத, அபய முத்திரைகளுடன் வஜ்ராயுதம், சக்தி வேல் ஆயுதம் இவற்றைக் கைகளில் கொண்டவளும், சாமுத்ரிகா லக்ஷணங்கள் யாவும் ஒருங்கே அமையப் பெற்றவளுமான கௌமாரி தேவியை தியானிக்கிறேன்.

வைஷ்ணவி தியானம்

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் உடையவளும், அபய, வரத முத்திரை, சங்கம் (சங்கு), சக்கரம் இவற்றைக் கைகளில் ஏந்தியவளும், இளம் வயதுடையவளும், கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், சாமுத்ரிகா லக்ஷணங்களை ஒருங்கே அமையப் பெற்ற வைஷ்ணவீ தேவியை வணங்குகிறேன்.

வாராகி தியானம்

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் இவற்றைப் பெற்றிருப்பவளும், கருப்பு நிற ஆடையை உடுத்தியவளும், வஜ்ரம், சக்கரத்தை ஏந்தியிருப்பவளும், உலக்கை, தடி ஏந்தியவளும், வரத அபய முத்திரைகளைத் தனது தாமரைப் போன்ற கைகளில் தாங்கியவளும், சிம்மவாஹனத்தில் பவனி வருபவளும், கிரீட மகுடத்தை அணிந்து ஒளிர்பவளும், சகல அலங்காரங்களுடன் விளங்குபவளும் சான்றோர்களால் பூஜிக்கப்படும் வாராகி தேவியை பூஜிக்கிறேன்.

இந்திராணி தியானம்

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகளை உடையவளும், ரத்தினங்களால் ஆன மகுடத்தை அணிந்திருப்பவளும், பொன்னிற மேனியை உடையவளும், வரத அபய முத்திரைகளைத் தனது தாமரைப் போன்ற கைகளில் தாங்கியவளும், வஜ்ராயுதம், சக்தி ஆகியவற்றைக் கரங்களில் கொண்டவளும், யானை வாகனத்தின் மீது வீற்றிருப்பவளுமான மாகேந்திரி தாயை இந்திராணியை) பூஜிக்கிறேன்.

சாமுண்டா (சாமுண்டி)

நான்கு கைகள், மூன்று கண்கள் ஆகியவற்றை உடையவளும், கருத்த மேகம் போன்ற மேனியை உடையவளும், கடைவாய்ப் பல் நீட்டிக் கொண்டிருக்கும் முகமுடையவளும், புலித்தோலை ஆடையாகக் கொண்டு ஒளிர்பவளும், கத்தி, சூலம், கபாலம், அபய முத்திரை இவற்றைக் கைகளில் பெற்றிருப்பவளும், கரண்ட மகுடத்தைத் தரித்திருப்பவளும், சிறிய மணிகள் மற்றும் தலைகளால் ஆன மாலையை அணிந்திருப்பவளும், ப்ரேத (சவம்) வாகனத்தின் மீது வீற்றிருப்பவளும், பருத்த முலைகளும் இளைய வயதுடையவளுமான சாமுண்டியை எப்போதும் தியானிக்கிறேன்.

Sunday, February 16, 2025

சீரடி சாய்பாபா நட்சத்திர மாலை| Shirdi Sai Baba Nakshatra Malai

சீரடி வாசனே! ஸ்ரீ சாயிநாதனே! அரியவரம் அருளும் அழகு முகத்தோனே! உலகை உருவாக்கிய வெற்றிச் செல்வனே உனை நினைந்திருப்பதுவே ஓர் இனிய சுகம்!
தலையைச் சுற்றி துணிப்பின்ன லிட்டாய் அணிந்தாய் மேனியில் கிழிந்தவோர் அங்கி வறியவன் போல் வெளித் தோற்றம் ஏற்பினும் இறைவனே நீயென உலகுணர வைத்தாய்

தொலைந்த தன் குதிரையை இருமாதமாய் தேடி
அலைந்த சாந்த படேலதை மீட்க அருளினாய் 
சீரடிமண்ணில் வருகசாயி என்றுனை 
வரவேற்ற பரிவினில் மகல்சாபதிக்குப் பதிலும் உரைத்தாய்

கோதுமை மாவை ஊரெல்லையில் கொட்டி காலரா நோயை கடுகவே விரட்டினாய் புயல் மழை தீ சீற்றங்களை அடக்கி பயந்த மக்களின் துயரையும் போக்கினாய்

ஐவர்தம் வீட்டில் உணவை இரந்தாய் அவர்முந்தைய வினைகள் முற்றும் அழித்தாய் பயஜா அன்னையின் சேவையை மெச்சியே பரகதி அவள்பெற பரிவுடன் அருளினாய்

நீரை எண்ணெயாக மாற்றி வைத்தாய் தீபங்கள் முழுஇரவிலும் ஒளிரவைத்தாய் பன்றியின் செய்கையைச் சுட்டிக்காட்டி பழிதூற்றும் இழிகுணம் தவிர்க்க வைத்தாய்

உதியைக் கொடுத்து நல்வைத்தியம் செய்தாய்
தொலையாப் பிணிகளைத் தொலைத்திடச் செய்தாய் இறைநாம சங்கீர்த்தனம் இடையறாது செய்யச் சொல்லி குறைவற்ற மன அமைதி அவர்கட்குக் கூட்டினாய்

குட்க ரோகியையும் அணைத்துக் கொண்டாய் அடைக்கலம் தந்துநல் ஆதரவு அளித்தாய் மனிதகுலப் பண்பின் மாண்பினை உணர்த்தி புனித மகாத்மாவென புவிபோற்ற நின்றாய்

எரியும் தீயினுள் உன்கையை நுழைத்தாய் எங்கோ ஓர் கொல்லன் குழந்தையைக் காத்தாய் பாம்பின் கடியால் பரிதவித்த சாமாவின் பயத்தைப் போக்கி விஷம் இறங்க வைத்தாய்

உயரே தொங்கும் சாண் அகலப் பலகையில் வியத்தகு வண்ணமே படுத்து உறங்கினாய் பல்லி ஒன்றின் வரவை முன்னமே சொல்லி எல்லையற்ற உன் திருஷ்டியை எடுத்துக் காட்டினாய்

லெண்டியில் நன்மலரத் தோட்டம் வளர்த்தாய் பொங்கும் இனிமையை எங்கும் பரப்பினாய் மனிதர் தம் கடமையில் மாறாதிருக்கச் சொல்லி சோம்பற் குணத்தை மக்கள் துறக்கச் செய்தாய்

நாய்பெற்ற அடியால் நெஞ்சம் வெதும்பினாய் அடியின் தழும்பை உன் உ<டம்பில் காட்டினாய் எவ்வுயிராயினும் நம் அன்பிற்குரியதென்று எல்லையற்ற கருணையை எடுத்துக் காட்டினாய்

அனைத்து உயிர்களிலும் அணுவாய் நின்றாய் அளப்பரிய ஆகாயத்தையும் விஞ்சியே உயர்ந்தாய் தீய குணமுடையோர் திருந்தவே வழிநடத்தித் தூய மனத்தவரிடையே அவர்சேரக் கூட்டினாய்

அடியவன் மகல்சாபதி மடியில் கிடந்து துடிக்கும் நாடித்துடிப்பை நிறுத்தினாய் மூன்றாம் நாளிலே மீண்டும் எழுந்தாய் மரணத்தை வென்றவனென மாநிலம் போற்றவே

சலங்கையைக் கால்களில் அணிந்து கொண்டாய் சந்தங்களுக் கொப்பவே நர்த்தனம் புரிந்தாய் மதுரக் குரலால் கீர்த்தனங்கள் இசைத்து மகா ஆனந்தம் எங்கும் பெருக வைத்தாய்

தற்பெருமை செருக்கு அகந்தைகளை வெறுத்தாய் சற்றேஉனை நகரச்சொன்ன நானாவலியையும் மதித்தாய் மனிதகுல மேன்மைக்கே மாளாது நிதம் உழைத்தாய் மேம்பட்டதோர் ஆத்மாவென்று மேதினியில் உலவினாய்

அண்ணா தாமுவின் பக்தியில் மகிழ்ந்து அவர் வேண்டிய மக்கட்பேறு வரமும் ஈந்தாய் தாஸ்கணு மேல் நீ கொண்ட கருணையினாலே கால் விரலில் காட்டினாய் கங்கையோடு யமுனையை

வேதாந்த சாரத்தை விரிபட உரைத்து நானாவின் நெஞ்சத்தை மிகநெகிழ வைத்தாய் காகா தீட்சித் பக்தியைச் சோதித்து அதை மேற்கொள் காட்டினாய் குருபக்தியின் மேன்மைக்கே

கொதிக்கும் உலையில் கைவிட்டுக் கிளறி அதிருசி அமுது ஆக்கிப் படைத்தாய் பசியால் வாடிய மக்களை கூட்டி அவர் பசியின் வாட்டம் முற்றும் போக்கினாய்

ஏமதுவின் கோரிக்கையை ஏற்று ஆசி கூறினாய் உந்தன் அருஞ் சரிதையை அவர் வரையச் செய்தாய் எழுதிய சரிதையைப் பாராயணம் செய்யச் சொல்லி ஏக்க தாபங்களை அவர் மனத்தே போக்கினாய்

அன்னை லட்சுமிபாயை அருகே அழைத்து ஐந்தும் நான்குமாய் நாணயங்களை அளித்தாய் நவவித பக்தியைக் குறிப்பால் உணர்த்தி பரகதி நாம்பெறும் பாதையைக் காட்டினாய்

பூட்டியின் கனவில் ஒருநாள் தோன்றி கோவில் ஒன்றினை அவர்கட்டவே செய்தாய் தாத்யாவின் மரணத்தைத் தடுத்து நிறுத்தித் தானே பதிலுக்கு மகாசமாதி அடைந்தாய்

பூத உடலை நீத்தபின்னும் சமாதியினின்று குரல் கொடுத்தாய் பூசை ஆரத்தி நிவேதனம் தொடர்ந்து கொடுக்கவும் கூறினாய் முரளீதரனின் சிலைக்குப் பதிலாக நீயே அங்கு நிலை நின்றாய் கர்ணாமிர்தத்தின் மாற்றாக கருணை அமுதம் பொழியவே

சொன்னவழியே உலகில் வாழ்ந்து காட்டியவன் நீ
உன் வாழ்க்கை நெறியையே உபதேச மாக்கினாய்
அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டாய் அனைத்துலகம் தொழ புகழேந்தி நின்றாய்

வணங்கும் தெய்வங்கள் யாவும் நீயே வளங்கள் அனைத்தும் எமக்கு அருள்வாயே சற்றும் மறவாமல் உனை நினைத்து நிற்போம் சற்குருவாய் எம்நெஞ்சை வழிநடத்து

பக்தியில் தொடுத்த சாயி நட்சத்திர மாலையிது
புவியில் பாவப்பிணிகளை முறிக்க அருமருந்து பன்முறைப் பகன்றிடப் பாராயணத்திற்கே எளியது
நன்வரம் நல்கும் சாயிநாமாவளிகளில் சிறந்தது.

பழநி ஆண்டவர் திருப்பதிகம்| Pazhani Andavar Thirupathigam

மோதகம் நிவேதனம், மூஷிகம் உன் வாகனம்? முறங்கள்போல் செவித்தலம், வரம் கொடுக்கும் ஐங்கரம், போதகம், கஜானனம், புராணஞான வாரணம், போற்றி, போற்றி உன்பதம் காக்க வேண்டும் என்குலம்.
வேல்பிடித்த கையிலே செங்கோல் பிடித்து நின்றவா? வேண்டி வந்த யாவையும் விரைந்தளிக்கும் மன்னவா? கால்பிடித்தேன், என் மனக் கலக்கம் நான் உரைக்காகவா? கண்திறக்க வேண்டும் தென்பழநி ஆண்டவா!

எனது பக்கம் நீயிருக்கக் எங்கிருந்து பகைவரும்? யானிருந்த மனை நடுங்க எவ்விதம் துயர் வரும? மனது நொந்து நொந்து வந்த மைந்தனை நீ தாங்கவா வாழி வாழி தென்பழநி கோயில் கொண்ட ஆண்டவா!

ஆதிநாளில் சூரனை அழித்த தெய்வம் நீயெனில் அடுத்து வந்த பகையெலாம் முடித்த துண்மை தானெனில் மோதி நிற்கும் என் பகை முடிக்க வேல் எடுத்து வா முருகனேதென் பழநி கொண்ட அழகனே என் ஆண்டவா!

பன்னிரெண்டு கைத்தலத்தில் பளபளக்கும் ஆயுதம்! பாய்ந்து செல்லத் துடிதுடிக்கும் பச்சை மயில் வாகனம்! இன்னல் செய்யும் பகை முடிக்க இன்னும் என்ன தாமதம் என்னையாளும் மன்னனான தென்பழனி ஆண்டவா!

ஈசனே உன் மனைவி பேரும் தேவசேனை என்கிறார்! இன்னொருத்தி விழியிரண்டும் ஈட்டியென்று சொல்கிறார்! வாசம் செய்யும் இடமெலாம் பாசறைகள் அல்லவா? மைந்ததெனன் பகைமுடிப்பாய் தென்பழநி ஆண்டவா!

ஆறுபடை வீடிருக்க வேறுபடை ஏனடா? அழிக்ககொணாத கோட்டைநின் சடாக்காஷரங்கள் தாமடா? மாறிலாத கவசமாய் வரும் கழன்று வேலடா? வல்வினை பகைமுடிப்பாய் தென் பழனி ஆண்டவா!

ஆரவார மாய் எழும் அகப்பகை: புறப்பகை: அறியொனாத மந்திர யந்திர தந்திரமாய் வரும்பகை வேர் விடும் குலப்பகை; வினைப்பகை; கிரகப்பகை வேறுபல் பகைமுடிப்பாய் வேல் பழநி ஆண்டவா!

எந்த வேளையான போதும் கந்தவேலைப் பாடுவேன்! இந்த வேளை உன்னையன்றி எந்த ஆளை நாடுவேன்!
வல்வினை பகைமுடிப்பாய் தென் பழனி ஆண்டவா!
வாழி வாழி தென்பழநி கோயில் கொண்ட ஆண்டவா!


Saturday, February 15, 2025

சிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்| Nakshatra Mala Stotra| 27 நட்சத்திரங்களுக்கும் நன்மை தரும்

அஸ்வினி

ஐஸ்வர்யம் மிகுந்தவரும், குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியையும் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும், ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.
பரணி

யமனுக்குப் பயந்திருந்த குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும், அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமானவருமாக விளங்கும் சிவபெருமானே, நமஸ்காரம்.

கிருத்திகை

இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் கருணையுள்ள வரும், முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி, ஆகாயம், நீர், அக்னி, காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவபெருமானே நமஸ்காரம்.

ரோஹிணி

மலைபோல வரும் ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் தரித்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவநதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவபெருமானே நமஸ்காரம்.

மிருகசீர்ஷம்
ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், சிவ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் உடையவரால் அடையமுடியாதவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

திருவாதிரை

ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாக அணிந்தவரும், வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

புனர்பூசம்

தன்னலம் கருதாது செய்யப் படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு, ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் ஸௌக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் ஸௌக்கியமுற்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

பூசம்

பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானமனைத்தும் ஒரே உருவமாயுடைய வரும், மன விருப்பத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவபெருமானே நமஸ்காரம்.

ஆயில்யம்
யட்சர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயை மிகுந்தவரும், பொன் மயமான வில்லை வலக்கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக் கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

மகம்

பொருள். வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், அட்சரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாட்சர தீட்சை பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

பூரம்

வெள்ளி மலை என்று பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சிபோன்று சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழனாக விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திரம்

ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேருமலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குப் பிரகாசமான கதிரவன் போன்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

ஹஸ்தம்
'ஸர்வமங்களை' எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

சித்திரை

குறைந்த அளவே பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வதளத்தை அர்ப்பணித்தாலேயே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

ஸ்வாதி

எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களை அரவணைத்துக் காப்பவரும், தவறான செயல்களில் ஈடுபடும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடைய வரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

விசாகம்

உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பரே, ஈசனே, எனக்கு வரம் அருளும். மஹரிஷிகளின் மனைவியரை மோகிக்கச் செய்தவரும், உம்மிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

அனுஷம்
மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் தரித்தவரும், போரில் சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்குப் பகையானவரும், கையில் மானை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

கேட்டை

பக்தர்கள் கோருவதைக் கொடுப்பவரும், யாகம் இயற்றுபவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் பேரொளி மிக்க உடலை உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

மூலம்

முக்கண்ணரும், எளியவர்களிடத்தில் கருணையுடையவரும், தட்ச ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் செய்தவரும், சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரும், வணங்கிய பக்தர்களை தாமதமில்லாமல் காப்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

பூராடம்

மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்கவைப்பதில் மிகச் சிறந்த படைவீரன் போன்றவரும், சம்சாரக் கடலுக்கு பயந்தவர்களின் அச்சத்தைப் போக்கடிப்பவரும், தாமரைக் கண்ணரும், சுகத்தை அருள்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திராடம்
கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரும், சுகத்தைக் கொடுப்பவரும், சிறந்த திருநீற்றை கழுத்தில் தரித்தவரும், தன்னுடையது எனும் எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை அருகில் கொண்டவரும், விஷ்ணுவால் வணங்கப்பட்டவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

திருவோணம்

சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் போற்றப்பட்டவரும், ஒழுக்கமுள்ள பக்தர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரம்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவரும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

அவிட்டம்

அளவிடமுடியாத தெய்வீக மகிமை பொருந்தியவரும், தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதில் நாட்டமுற்றவரும், தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரும், மார்க்கண்டேயருக்குத் தன் அன்பைக் காட்டியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சதயம்

பரமேஸ்வரா! உம்முடைய வேலைக்காரனான என்னிடம் கருணை காட்டும். இதயத்தில் பாவனை செய்யும் அளவுக்கு அருள்புரிபவரும், நெருப்பைக் கண்ணாக உடையவரும், தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரும். தன்னுடைய திருவடியைச் சரணடையும் பக்தர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

பூரட்டாதி
இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் ஆழ்ந்த கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனத் தாமரையில் வசிக்கும் யோகியுமான சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திரட்டாதி

காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய ஸௌக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

ரேவதி

சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரும், தம்மை வணங்கும் ஜீவர்களைக் காப்பவரும், பிரம்மாவின் கபாலத்தை உடையவரும், ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும், நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடிய வருமான சிவபெருமானே நமஸ்காரம்.

விநாயகர் சரண மாலை| Vinayagar Sarana Malai

விநாயகர் சரண மாலை

அருளே சரணம்! அன்பே சரணம்! அன்னை மீனாள் மகனே சரணம்! இருளைப் போக்கி ஒளியைச் சேர்க்கும் ஈசன் மகனே சரணம்! சரணம்! உருகிப் பணியும் அடியார் மனதில் ஒளிரும் ஞானச் சுடரே சரணம்! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம்! சரணம்! 
திருவே சரணம்! தெளிவே சரணம்! திகழும் யோக வடிவே சரணம்! கருவாய் விளங்கிக் கவிஞர் மனதில் கவியாய்ச் சுரக்கும் தமிழே சரணம்! அருவம் உருவம் இவைகள் கடந்த அருளே உயிரே சரணம்! சரணம்! அருகப் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம்! சரணம்!

அழகன் மருகன் முருகன் போற்றும் ஆனை முகனே சரணம்! சரணம்! கழல்கள் அதிரக் களித்தே ஆடும் காளித் தாயின் சுதனே சரணம்! திருவாம் ஈசன் பாதம் பணியும் தெய்வக் களிறே சரணம்! சரணம்! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம்! சரணம்!

உழலும் மனிதர் நலமாய் வாழ உன்னத அருளைத் தருவாய் சரணம்! மழையைப் போல கருணைப் பொழிந்து மங்களம் அருள்வாய் சரணம்! சரணம்! தருவாய் உந்தன் அருளை என்றுன் தாள்கள் பணிந்தேன் சரணம்! சரணம்! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம்! சரணம்!

ஊழின் வினையும் உலகத் துயரும் ஒருங்கே ஒழிய அருள்வாய் சரணம்! வாழி என்றுன் பதங்கள் பணிந்தோம்! வந்தே நலங்கள் தருவாய் சரணம்! தருமி போலத் திரியும் எனக்கும் தமிழைத் தருவாய் சரணம்! சரணம்! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம் சரணம்!

மலரே! மணமே! மனதுள் அருளே! மலையே! மடுவே! மகிமை ஒளியே! அலையே! கடலே! அடங்காப் புயலே! அன்பில் தாயே! அருமைச் சேயே! நிலையாய் விளங்கும் நீதிக் கனலே! நெகிழும் பக்தர் விழியின் நீரே! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்பே அருளே சரணம்! சரணம்!

Sunday, February 9, 2025

இடரினும் தளரினும் அர்த்தத்துடன்| Idarinum Thalarinum with meaning

இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.


பொருள் / விளக்கம் :

திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே  தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?

வாழினும் சாவினும் வருந்தினும்போய்

வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்

தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்

போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும், பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?

நனவினும் கனவினும் நம்பாஉன்னை

மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்

புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த

கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில், அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்

அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்

கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்

மும்மதிள் எரிஎழ முனிந்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

கையது வீழினும் கழிவுறினும்

செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்

கொய்யணி நறுமலர் குலாயசென்னி

மையணி மிடறுடை மறையவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல், வேறெதனையும் நான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்

எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா

ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த

சந்தவெண் பொடியணி சங்கரனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே ! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ. தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

வெப்பொடு விரவியோர் வினைவரினும்

அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா

ஒப்புடை ஒருவனை உருவழிய

அப்படி அழலெழ விழித்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்

சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்

ஏருடை மணிமுடி யிராவணனை

ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்

ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்

கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்

அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும், பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்

அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்

புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்

பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்

அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பொருள் / விளக்கம் :

புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும், தலைவா ! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த

இலைநுனை வேற்படை யெம்இறையை

நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன

விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்

நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

பொருள் / விளக்கம் :

அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.


Thursday, February 6, 2025

அலைமகள் 108 போற்றி தமிழில்| Alaimagal 108 Potri Tamil

ஓம் திருமா மகளே செல்வி போற்றி
ஓம் திருமால் உளத்தில் திகழ்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடல்வரு தேவே போற்றி
ஓம் இருநில மக்கள் இறைவீ போற்றி
ஓம் அருளே உருவாய் அமைந்தாய் போற்றி
ஓம் மருநிறை மலரில் வாழ்வாய் போற்றி
ஓம் குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
ஓம் இருளொழித் தின்பம் ஈவோய் போற்றி
ஓம் அருள்பொழிந் தெம்மை ஆள்வாய் போற்றி
ஓம் ஆறுதல் எமக்கிங் களிப்பாய் போற்றி
ஓம் சீறுதல் கொள்ளாத் திருவே போற்றி
ஓம் ஊக்கம தளிக்கும் உருவே போற்றி
ஓம் ஆக்கமும் ஈயும் அன்னாய் போற்றி
ஓம் இறைவி வலப்பால் இருப்போய் போற்றி
ஓம் பொறையுடன் உயிரைப் புணர்ப்போய் போற்றி
ஓம் அன்பினைக் காட்டும் ஆயே போற்றி
ஓம் வன்பினை என்றும் வழங்காய் போற்றி
ஓம் பனிமதி உடன் வருவாய் போற்றி
ஓம் கனியிலும் இனிய கமலை போற்றி
ஓம் நிமலனை என்றும் நீங்காய் போற்றி
ஓம் கமலம் துதித்த கன்னி போற்றி
ஓம் குற்றம் ஓராக் குன்றே போற்றி
ஓம் செற்றம் கொள்ளாச் சிறப்போய் போற்றி
ஓம் அன்னை யென்ன அணைப்போய் போற்றி
ஓம் தன்னிகர் தாளைத் தருவோய் போற்றி
ஓம் மாயனாம் மலர்க்கு மணமே போற்றி
ஓம் நேயமுற் றவனை நீங்காய் போற்றி
ஓம் இறைவியாய் எங்கணும் இருப்போய் போற்றி
ஓம் மறைமொழி வழங்கும் மாண்யே போற்றி
ஓம் மாலினைக் கதியாய் மதித்தோய் போற்றி
ஓம் சீலஞ் செறிந்த சீதா போற்றி
ஓம் அன்பருக் கருள்புரி அருட்கடல் போற்றி
ஓம் இன்பம் அருளும் எந்தாய் போற்றி
ஓம் அச்சுதன் காதல் ஆர்வோய் போற்றி
ஓம் எச்சுவை தனையும் ஈவோய் போற்றி
ஓம் பூதலத் தன்று போந்தாய் போற்றி
ஓம் தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி
ஓம் இலங்கை யிற்சிறை இருந்தோய் போற்றி
ஓம் நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி
ஓம் திரிசடை நட்பைத் தேர்ந்தோய் போற்றி
ஓம் பரிவுடையவர்பால் பரிவினாய் போற்றி
ஓம் குரங்கினைக் கண்டு குளிர்ந்தோய் போற்றி
ஓம் வரங்கள் அவர்க்கு வழங்கினை போற்றி
ஓம் அரக்கியர்க் கபயம் அளித்தோய் போற்றி
ஓம் இரக்கமாய் ஒன்றிற் கிருப்பிடம் போற்றி
ஓம் இராவணற் கிதமே இசைத்தோய் போற்றி
ஓம் இராமருக் குரிய இன்பே போற்றி
ஓம் கணவனை அடைந்து களித்தோய் போற்றி
ஓம் குணநிதி யாகக் குலவினாய் போற்றி
ஓம் அரசியாய் அயோத்திக் கானாய் போற்றி
ஓம் முரசொலி அந்நகர் முதல்வி போற்றி
ஓம் உருக்கு மணியாய் உதித்தோய் போற்றி
ஓம் செருக்கொழித் தொளிரும் செய்யாய் போற்றி
ஓம் சிசுபா லன்தனைச் செற்றோய் போற்றி
ஓம் பசுநிரை மேய்ப்போன் பாரியே போற்றி
ஓம் பத்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
ஓம் எத்திக் குந்துதி எந்தாய் போற்றி
ஓம் மாலின் சினத்தை மறைப்போய் போற்றி
ஓம் மேலருள் புரிய விளம்புவோய் போற்றி
ஓம் மாதவ னோடு வாழ்வோய் போற்றி
ஓம் ஆதவன் ஒளிபோன் றமைந்தோய் போற்றி
ஓம் சேதனர் பொருட்டுச் சேர்வோய் போற்றி
ஓம் பாதகம் தீர்க்கப் பகர்வோய் போற்றி
ஓம் நாதனுக் கருஞ்சொல் நவில்வோய் போற்றி
ஓம் ஏதமில் பொன்னென இலங்குவோய் போற்றி
ஓம் தக்கென ஓதும் தாயே போற்றி
ஓம் மக்களின் இன்னலை மாய்ப்போய் போற்றி
ஓம் பக்கலின் இருக்கும் பணி மொழி போற்றி
ஓம் துக்கம் ஒழியச் சொல்வோய் போற்றி
ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
ஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
ஓம் பங்கயத் துறையும் பாவாய் போற்றி
ஓம் செங்கண்ணன் மார்பில் திகழ்வோய் போற்றி
ஓம் தண்ணருள் கொண்டுயிர் காப்போய் போற்றி
ஓம் எண்ணறு நலந்தரும் எம்மன்னை போற்றி
ஓம் நான்கிரு நாமம் நயந்தோய் போற்றி
ஓம் வான்மிகு பெருமை வாய்ந்தோய் போற்றி
ஓம் வெற்றியைத் தருமோர் விமலை போற்றி
ஓம் அற்றவர் அடையும் அரும்பொருள் போற்றி
ஓம் வரமளித் தூக்கும் வாழ்வே போற்றி
ஓம் உரமதை ஊட்டும் உறவே போற்றி
ஓம் செல்வமிக் காக்கும் தேவி போற்றி
ஓம் அல்லலை ஒழிக்கும் அருளே போற்றி
ஓம் வீரம் விளைக்கும் வித்தே போற்றி
ஓம் காரண பூதன் கருத்தே போற்றி
ஓம் பண்பினை வளர்க்கும் பயனே போற்றி
ஓம் நண்பாய் அறிஞர்பால் நண்ணுவோய் போற்றி
ஓம் எண்ணினுள் எண்ணே இசையே போற்றி
ஓம் கண்ணினுள் மணியே கருத்தே போற்றி
ஓம் அறிவினுள் அறிவாம் அன்னே போற்றி
ஓம் நெறியினுள் நெறியாம் நிலையே போற்றி
ஓம் உணர்வினுள் உணர்வாம் உருவே போற்றி
ஓம் குணத்தினுள் குணமாம் குன்றே போற்றி
ஓம் கருத்தினுள் கருத்தாய்க் கலந்தோய் போற்றி
ஓம் அருத்தியை ஆக்கும் அறிவே போற்றி
ஓம் தமிழினுக் கினிமை தருவோய் போற்றி
ஓம் அமிழ்தினும் இனிய ஆயே போற்றி
ஓம் பதின்மர் பாடலில் புதிவோய் போற்றி
ஓம் துதியாய் நூலினுள் துதைந்தோய் போற்றி
ஓம் தொண்டரின் தொண்டுளம் சேர்ப்போய் போற்றி
ஓம் அண்டர் போற்றும் அமலை போற்றி
ஓம் நாரணர்க் கினிய நல்லோய் போற்றி
ஓம் மாரனைப் பெற்ற மாதே போற்றி
ஓம் உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
ஓம் நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
ஓம் எங்களுக் கின்னருள் ஈந்தருள் போற்றி
ஓம் அண்டர் போற்றும் அலைமகள் போற்றி
ஓம் மங்கலத் திருநின் மலரடி போற்றிப் போற்றி!

Wednesday, February 5, 2025

அவனிதனிலே பழநி திருப்புகழ்| Pazhani Thirupugazh Meaning Lyrical

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

அர்த்தம் 

இந்த பூமியிலே பிறந்து
குழந்தை எனத் தவழ்ந்து
அழகு பெறும் வகையில் நடை பழகி
இளைஞனாய்
அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர
குதலை மொழிகளே பேசி
அதிக விதமாக வயதுக்கு ஒப்ப
வளர்ந்து
வயதும் பதினாறு ஆகி,
சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,
மிக்க வேதங்களை ஓதும்
அன்பர்களுடைய
திருவடிகளையே நினைந்து
துதிக்காமல்,
மாதர்களின் மீது ஆசை மிகுந்து
அதன் காரணமாக மிக்க கவலையுடன்
அலைந்து
திரிகின்ற அடியேனை,
உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?
சும்மா இரு என்ற மெளன உபதேசம்
செய்த சம்பு,
பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,
தும்பைப்பூ
தன் மணி முடியின்
மேலணிந்த மகாதேவர்,
மனமகிழும்படி அவரை
அணைத்துக்கொண்டு
அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த
பார்வதியின் குமாரனே
பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை
உடையவனே
இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு
மயிலின் மேல் ஏறி விளங்கி
பூமி அதிரவே வலம் வந்த
வீரக் கழல் அணிந்த வீரனே
மோட்ச வீட்டில் பொருந்தி நின்று
முருகன் என விளங்கி
பழனிமலையில்
வீற்ற பெருமாளே.

Suriyan Malai| சூரியன் மாலை

கடலில் உதித்துவரும் கதிரவனை ஸ்தோத்தரிக்க அலைகடலின் மேலெழுந்த ஆதியைப் பூஜை பண்ண

ஆனைமுகவா ஆறுமுகவா முன்வருவீர் திவாகரனார் கீர்த்திகளைச் சற்றே தெரிந்துரைக்க

நான்முகனார் தேவியரே நாவில் வரவேண்டுமம்மா புகழுடைய பாரதியே புஸ்தகத்தில் வாழ்பவளே

சதுர்வேத சாஸ்த்திரத்தின் தத்துவத்தின் உள்பொருளே தத்துவத்தின் மெய்பொருளே ஸரஸ்வதியே முன் வருவீர்
கிழக்கில் உதித்துவரும் கீர்த்தியுள்ள மெய்ப்பொருளே
அடியேன் வினையகற்றி ஆட்கொள்ள வேணுமையா

தொட்டிலின் பிள்ளை சிசுக்கள் பிழை செய்துவிட்டால் பிழையாகவெண்ணிப் பெற்றதாய் தள்ளுவளோ

அப்படிப்போலெண்ணி அடியேன் வினையகற்றி அஞ்சாமல் காத்தெனக்கு ஐக்கியபதம் தாருமையா

கதிரவனே மெய்ஞ்ஞானக் கண்கள் தரவேணுமையா ஜோதிசுயம்வடிவே சுத்த வெளியானவரே

சித்தவெளியானவரே என்ஜோதி வெளியாக்குமையா சிஷ்யான் மனதில் உதிக்கும் திவாகரரே

உன்டென்றார் பங்கில் உரையும் பரஞ்சோதி இல்லையென்ற பாமரர்க்கு எட்டாத வஸ்துவே

ஜகத்திற்கதிபதியே சூரியநாராயணரே உலகிற்கொருவரென்று உம்மையன்றோ சொல்லிடுவார்

பிருதிவி ஏழுகடலும் பிரத்யக்ஷமாய் விளங்கும் பிரத்யக்ஷ தேவதையே (உம்)பாதஞ் சரணமையா

இரக்ஷிக்கும் தேவதையே (உம்ம) இணையடியைப் போற்றி செய்தேன் என்னுடைய ஜன்மத்தை ஈடேற்ற வேணுமையா

(நான்) மாயை வலையில் மறித்துவந்து சிக்காமல் பிறவாத மோக்ஷபதம் தாரீர் பெருமாளே

உலகிலுள்ள மானிடர்கள் உய்யும் வழி காட்டவென்று கதிரவனைப் பூஜித்து கடைத்தேற வேணுமென்று
சூரியனைப் பூஜித்தார் ஸுந்தரிகள் மூலவருமாய் அன்னையெனும் பார்வதியும் அதிகாலையிலெழுந்து

ஈஸ்வரியாள் வந்தாள் இலக்ஷப்மியின் தன் மனைக்கு பார்வதியாள் நல்வரவைப் பார்த்து மகாலக்ஷப்மியும்

(தன்) வண்டார்குழலசைய மாலை புரண்டசைய சீரார்ச்சிலம்பார்க்கச் செங்கைவளை ஜோதிவிட

கழுத்துப் பதக்கமின்னக் கங்கணங்கள் ஜோதிவிட மங்கை உமையவளின் மலரடியிலே பணிந்தாள்

தண்டனிட்ட லக்ஷப்மியை தேவிகண்டு அன்புடனே மாதவனார் மார்பில் பிரியாமல் நீ வஸித்து

வாழ்ந்திருக்கவென்று மங்கை உமை வாழ்த்திவிட்டு காலையில் சென்றே நாம் கங்கை தன்னில் நீராடி

இமயகிரிமேலெழுந்த இளங்கதிரைப் பூஜை பண்ணி வருவோம் நாமென்றழைக்கும் மாதுமையாள் சொற்படிக்கு

மகாலக்ஷ்மி தேவியரும் வாணி சரஸ்வதியும் ஸுர லோகமங்கையரும் ஸுந்தரி இந்திராணியுடன்

சங்கரி தேவியுடன் சேர்ந்து வந்தார் கூட்டமதாய் வான நதிக் கங்கை தன்னில் மங்கையர்கள் வந்திறங்கி

மஞ்சள் நீராடி வெண்பட்டால் ஈரமொற்றி கோதிமயிராற்றி குழலுக்குப் பூ முடித்து

ஈரத்துயிலவிழ்த்து ஏற்றமுள்ள பட்டுடுத்தி பத்தினிமார்களெல்லாம் பூஞ்சோலையில் புகுந்து

மல்லிகை முல்லை அரளி இருவாக்ஷியுடன் செந்தாமரைப் பூவும் செங்கழுநீர் புஷ்பமுடன்

ஆனமலர்களெல்லாம் ஆராய்ந்து தானெடுத்து தேனுடனே முப்பழமும் செவ்விளநீர்க்குலையும்

தாம்பூலம் கந்தவகை தட்டினிலே கொண்டுவந்து எட்டாப்பரம்பொருளின் கிட்டவேவந்து நின்றார்

பருவதம்போல் விளங்கும் பசும்பொன்னால் தேர்விளங்க

முத்தால் அலங்கரித்து மாலைகளும் தொங்கவிட்டு

பவழக் கொடுங்கையுடன் பக்கத்தின் சக்கரமும் தங்கத்தினாலமைந்த தட்டுக்களாயிரமும்

குந்தனப் பொன்னாலமைந்த குடைகொடிகள் தான்பிடிக்க தங்கரத்தினத் தாலிழைத்த சாமரைகள் வீசிவர

அருணனென்னுஞ் சாரதியும் ரதமுகப்பிலே அமர்ந்து பச்சைக் குதிரை கட்டிப் பெரியதேர் தான் செலுத்த

சப்த மா தான்பூட்டித் தடந்தேரை ஓட்டிவர அழகான தேர்நடுவில் ஆதித்தன் ஜோதிவிட

ஆயிரம் கிரணங்கள் ஜோதிட ஆதித்தன் வஜ்ஜிரமணிமகுடம் முடியின் மேலேவிளங்க

மகாமேரு பருவதத்தை வளைய வந்து பாஸ்கரனார் உலகத்தோருய்ய உதயகிரி மேலெழுந்தார்

பவனிவரும் சூரியரைப் பத்தினிமார் கண்டுகந்து அதிகபிரியத்துடனே அர்க்கியமுந்தான் கொடுத்தார்

பாதமலம்பி நல்ல பட்டினால் ஈரமொற்றி ஈரமுலரவென்றே இணைகவரியால் விசிறி

புஷ்பத்தால் அர்ச்சித்து போற்றியந்தப் புண்ணியரை கனிந்த பழங்களையும் கதிரவனுக்கர்ப்பிதமாய்

நைவேத்தியம் பண்ணியவாள் நெய்விளக்குத் தானேற்றி பன்னிரு நாமத்தால் பகலவனைத் தான் துதித்தார்

கிருபையுடனே சூரியரும் பூஜை தன்னைத் தான் கிரகித்து புவனேஸ்வரிகளையும் போற்றமன மகிழ்ந்தார்

அவரவர்க்கு ஏற்றவரம் ஆதித்தனைக் கேட்டார் ஈசரிடப்பாகத்தை என்றும் பிரியாமல்

உடனாக வாழ்ந்திருக்க உமையவளும் கேட்டிருந்தாள் இலக்ஷப்மி தேவி இச்சையுடனே யுரைப்பாள்

மாதவனார் தம்முடைய மார்பைவிட்டு நீங்காத வரமெனக்குவேணுமென்று மகாலக்ஷப்மி கேட்டிருந்தாள்

ஸரஸ்வதி தேவியுந்தான் சதுர்முகனார் தம்முடைய நாவைவிட்டு நீங்காத நன்மைகளைத் தாருமென்றாள்.

சாவித்திரி சந்தியை காயத்திரி பிரம்மனுட சிரஸைவிட்டு நீங்காத சிலாக்கியத்தைக் கேட்டிருந்தாள்

அயிராணியப்போ அமரர்கோன் தன்னுடனே சபையைவிட்டு நீங்காத சுகந்தையுங் கேட்டிருந்தாள்

அரிவையர்கள் கேட்டவரம் அப்படியே ஆகவென்று கிருபையுடனே வாழ்த்தி கதிரவனும் வாக்களித்தார்

அழகான தேர்நடத்தி ஆதித்தன் சென்றிடவே ஸுந்தரிமார்களெல்லாம் தங்கள் கிரகத்தையடைந்தார்

சூரியமாலையைச் சொன்னவரும் கேட்டவரும் சொல்லிக் கொடுத்தவரும் சொல்லுவதைக் கேட்பவரும்

மைந்தர்களைப் பெற்றிடுவார் மகிமையுடன் வாழ்ந்திடுவர் இவ்வுலகுக் காட்சிகளும் இகபோகந்தானடைந்து

பக்திமனதுடனே பரதேவி தன் கிருபையால் முக்திபதமான மோக்ஷத்தைத் தானடைவார்

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...