Monday, March 31, 2025

Devi Ashtakam Tamil| தேவி அஷ்டகம் தமிழ்

அம்பாளைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அதியற்புதமான துதிப்பாடல் இது. ஆதிசங்கரரால் அருளப்பட்டதாகக் கூறப்படும். இந்தத் துதியை, தேவ்ய இஷ்டகம் எனப்போற்றுவர். குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், சந்திரன், சுக்ரன், ராகு முதலான கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும். நவராத்திரி புண்ணிய காலத்தில் தினமும் இந்த துதிப்பாடலைப் பாராயணம் செய்து அம்பாளை வழிபடுவதால் சகல நன்மைகளும் கைகூடும்.
ஸ்ரீகணேஸாய நம:

தேவியே, மஹாதேவனின் மனைவியும் மிகுந்த சக்தி வாய்ந்தவளும் பவானியும் சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில் ஏற்படும் மனக் கவலையை போக்குகிறவளும் உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.

பக்தர்களிடம் அன்பு கொண்டவளும், பக்தியால் அடைய தகுந்தவளும் பக்தர்களுக்கு கீர்த்தியை வளர்ப்பவளும், பரமசிவனிடம் அன்பு கொண்டவளும், பதிவிரதையும் பக்தர்களிடம் அன்பு கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன்.

நிரம்பிய அன்னம் உள்ளவளும், எப்போதும் போக போக்யங்களால் நிரம்பியவளும், பர்வதராஜனின் புத்திரியும் பவுர்ணமி முதலிய பாவதினங்களில் பூஜிக்கப்பட்டவளும் மஹேஸ்வரனின் மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமான தங்களை வணங்குகிறேன்.

பிரளயகால ராத்திரியாகவும் மிகப்பெரிய ராத்திரியாக இருப்பவளும் (சிவராத்திரி நவ ராத்திரி முதலான புண்ணிய கால ராத்திரியாக இரு ப்பவளும்), மோஹத்தைக் கொடுக்கும் இரவாக இருப்பவளும், ஜனங்களுக்கு ஈஸ்வரியாக இருப்பவளும், பரம சிவனுக்கு சந்தனம், புஷ்பம் ஆகி யவற்றை அளித்து அன்பு காட்டுகிறவளும், பரமசிவனுடைய சக்தியாய் இருப்பவளும், பிரணவத்தின் பொருளுமான தங்களை வணங்குகிறேன்.

ஜகத்தை உண்டு பண்ணுகிறவளும், ஜகத்தை ரக்ஷிப்பவளும் உலகத்தை கடைசியில் சம்ஹரிப்பவளும் மஹரிஷிகளால் ஸ்தோத்திரம் செய் யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும் மோக்ஷத்தைக் கொடுப்பவளுமான தங்களை வணங்குகிறேன்.

தேவர்களின் துயரங்களைப் போக்குபவளும், எப்போதும் தேவர்களுக்கு உதவி புரிப்பவளும், மஹரிஷிகளாலும், தேவதைகளாலும் ஸவிக்கத் தகுந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளுமான தங்களை வணங்குகிறேன்.

முக்கண்கள் கொண்டவளும், பக்தர்களுக்கும் மங்களம் அருள்பவளும், தங்க வர்ணமாய் இருப்பவளும் போகங்களையும் மோக்ஷ ங்களையும் கொடுப்பவளும், மங்கள் ஸ்வரூபமாய் இருப்பவளும், மஹா மாய ஸ்வரூபிணியாக இருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியுமாக இருக்கும் தங்களை வணங்குகிறேன்.

சரணம் அடைந்த ஜனங்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அஷ்ட சம்பத்துகளையும் அளிப்பவளும், உலக இயக்கத்துக்குக் காரணமான சிறந்த பிரகிருதியுமான தங்களை வணங்குகிறேன்.

Namashivaya Mandhiram| நமசிவாய மந்திரம்

நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம் 
நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன் 
வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல் 
பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது 
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது 
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம் 
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம் 
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்

Saturday, March 29, 2025

Rama Naamam Solvadhe | ராம நாமம் சொல்வதே

ராம நாமம் சொல்வதே கலியில் கதியாம்! அதையும் மறந்தால் அதோ கதியாம்!

ராம நாமம் சொல்ல சொல்ல நன்மை பெருகுமே! - நாவும் இனிக்குமே! பாமரன் முதல் பண்டிதன் வரை புனிதம் ஆக்குமே!

சிவனும் பார்வதியும் சொல்லும் நாமமாம்! கவலையை போக்கி சாந்தி நல்குமாம்!

ராம நாமம் சொல்லி அனுமன் கடலைத் தாண்டினான்! - மலையை தூக்கினான்! மலை போன்ற கவலையும் பனி போல் விலகுமாம்!

ராம நாமம் சொல்லி சபரி முக்தி எய்தினாள்! நாமமும் நாமியும் வேறு வேறு இல்லவே இல்லையாம்!

ராம நாமம் சொல்வதற்கு எந்த தடையும் இல்லையாம்! சொல்ல சொல்லச் தடைகள் எல்லாம் தானே விலகுமாம்!

கணபதி பஞ்சகம் தமிழ்| Ganapathi Panchakam Tamil

♦️♦️கணபதி பஞ்சகம் = 1

🚩கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்
கணபதியின் அருள்நினையக் கமலமென மனம்விரியும்
கணபதியின் புகழ்செவியில் கலந்திடவுட் குழைந்துருகும்
கணபதியின் பெயர்மொழியக் கனிவுறுசெங் கவியெழுமே.

🌹பொருள் விளக்கம்:

விநாயகரின் சிலம்புகள் அணிந்த திருவடிகளை வணங்கி தொழுதால் கொடிய வினைகளின் பயன்கள் நம்மை வருத்தாமல் விட்டு அகலும்;
விநாயகரின் திருவருளின் மகிமையை எண்ணித் துதிக்கும்போது தாம ரையைப் போல நம் மனம் மலரும்;
கணேசரின் திருப்புகழானது நம் செவிகளில் நிறைந்திடும் போது மனம் நெகிழ்ந்து உருகும்;
கணநாதரின் திருநாம ங்க ளை ச் சொல்லச் சொல்ல இனிமை மிகுந்த தாகவும் சீராகவும் விளங்கும் கவிதைகள் கணேசரின் திருவருளால் நமக்குள்ளிலிரு ந்து தாமாகவே உருவாகும்.

♦️♦️கணபதி பஞ்சகம் = 2

🚩அலமருமென் உளம்தெளிய அருள்பொழியும் அணிமுகிலாம் 
நலமிகுகற் பகமலராம் நவநிதியத் தொருகுவையாம் 
கலிநலிய வருகதிராம் களிதருமுத் தமிழமுதாம் 
கலைநிலவின் குளிரொளியாம் கணபதியின் கழல்நிழலே. 

🌹பொருள் விளக்கம்:

கவலைச் சுழலில் கிடந்து தவிக்கின்ற எனது மனம் தெளிவடையுமாறு திருவருளைப் பொழியும் அழகிய மேகமாக விளங்கும்;
என்றும் வாடாமல் நலமிக்க கற்பகமரத்தின் மலர் போல மனம் எங்கும் மணம் பரப்பும்; ஒன்பது விதமான செல்வங்க ளின் கொள்ளக்குறையாத குவியல் போன்ற நிறைவைத் தரும்;
துன்பங்கள் ஆகிய இருள் எல்லாம் அழிந்து ஒழியுமாறு சூரியனைப் போல உதிக்கும்; இன்பத்தைத் தருகின்ற இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழாகிய அமுதத்தைப் போன்றது;
கலைக ளாகிய பருவங்கள் விளங்கும் நிலவின் குளிர்ச்சி பொருந்திய ஒளியை வீசிப் பக்தர்களின் மனத்தில் துயர் என்னும் வெம்மையைப் போக்கி அருளும். விநாயகரின் சிலம்பு அணிந்த திருவடிகளின்குளிர்ந்த நிழலானது

♦️♦️கணபதி பஞ்சகம் = 3.

🚩இயற்றரிய திருக்கதையை இயம்பிடுநான் மறைமுனிவற்(கு)
எயிற்றினையன் றெடுத்தெழுதி இரும்பனுவல் அளித்தருள்வான்
நயத்தகுநுண் நுழைபுலனும் நவையறுநன் மனநிறையும்
வியத்தகுசெங் கலையறிவும் விரைந்தருளும் கணபதியே.

🌹பொருள் விளக்கம்:
பண்டொருநாள் யாரும் இயற்றுவ தற்கு அரிய புனிதமான காப்பிய மான மகாபாரதத்தை வாய்மொழியாகச் சொன்ன வேத வியாசருக்காக
தமது தந்தங்களில் ஒன்றை ஒடித்து எடுத்து
அம்முனிவர் சொல்லச் சொல்ல ஏட்டில் எழுதி ஒரு மிகப்பெரிய நூலாக அமையுமாறு அருளினார்.
பக்தர்கள் வேண்டுகின்ற நுண்மையான ஆழ்ந்த அறிவையையும், குற்றம் குறைகள் நீங்கிய மன நிறைவையும்
வியக்கத் தக்க கலைகளில் தேர்ச்சியையும் உடனே அருளுகின்ற ஶ்ரீ கணேசப் பெருமான்

♦️♦️கணபதி பஞ்சகம் = 4.

🚩அனற்படுமோர் புழுவெனவே அழன்றுழலா திமைப்பொழுதும்
இனித்தமுறக் கணபதியின் நினைப்பொழியா திருமனமே,
அனைத்துலகும் வயிற்றொடுங்க அணிமணியோ டெயிறிலங்கத்
தனிப்பெருநல் லருணடஞ்செய் தளிரடிகள் நமக்கரணே.

🌹பதவுரை:
நெருப்பினில் பட்ட ஒரு புழுவைப் போல துன்பத்தால் தவிதவித்து
சுழல்வதைத் தவிர்த்து, நொடிப்பொழுதும்
கணபதியின் நினைப்பு ஒழியாது
ஶ்ரீ கணேசரின் மகிமை யை நினைப்பதை நிறுத்தாமல் அவரது திருவருளின் இனிமை யில் லயித்து இருப்பாயாக…
என் மனமே! எல்லா உலகங்களும்.தம் திருவயிற்றில் அடங்கி இருக்க, அழகிய மணிகளுடன் தந்தமும் ஒளி வீசித் திகழுமாறு
தனிப்பெருமை வாய்ந்த நலம் அருள்கின்ற, நர்த்தனத்தைப் புரிகின்ற (விநாயகரின்) மென்மை பொருந்திய திருவடிகள்.நமக்குக் காப்பாக இருப்பதால்,

♦️♦️கணபதி பஞ்சகம் = 5

🚩எழிலொழுகும் தடவிழியும் தழைந்தசையும் இருசெவியும்
புழையுறுகைக் கயமுகமும் பொழிகருணை 
மழைமதமும்
செழுமலரின் விரைகமழும் திருவடியும் திகழ்வுறுமோர்
பழமறையின் அருளுருவைக் கணபதியைப் பணிமனமே.

🌹பதவுரை:
அழகு விளங்கும் படர்ந்த விழிகளும் நீண்டு தொங்கியவாறு அசைகின்ற இரண்டு திருச்செவிகளும்
துளைகள் கொண்ட துதிக்கை உடைய யானையின் திருமுகமும் கருணை மழையை பொழிகின்ற மதத்தையும்
செழுமை மிக்க மலர்களின் வாசனை எழும்பும் திருவடிகளும் விளங்குகின்ற தனிச்சிறப்பு வாய்ந்த
பழமையான வேதங்களின் அருள் வடிவமாகத் திகழ்பவரை ஶ்ரீ கணேசரை பணிந்து வணங்குவாயாக…என் மனமே…
 
♦️♦️கணபதி பஞ்சகம் = 2

🚩அலமருமென் உளம்தெளிய அருள்பொழியும் அணிமுகிலாம் 
நலமிகுகற் பகமலராம் நவநிதியத் தொருகுவையாம் 
கலிநலிய வருகதிராம் களிதருமுத் தமிழமுதாம் 
கலைநிலவின் குளிரொளியாம் கணபதியின் கழல்நிழலே. 

🌹பொருள் விளக்கம்:
கவலைச் சுழலில் கிடந்து தவிக்கின்ற எனது மனம் தெளிவடையுமாறு திருவருளைப் பொழியும் அழகிய மேகமாக விளங்கும்;
என்றும் வாடாமல் நலமிக்க கற்பகமரத்தின் மலர் போல மனம் எங்கும் மணம் பரப்பும்; ஒன்பது விதமான செல்வங்க ளின் கொள்ளக்குறையாத குவியல் போன்ற நிறைவைத் தரும்;
துன்பங்கள் ஆகிய இருள் எல்லாம் அழிந்து ஒழியுமாறு சூரியனைப் போல உதிக்கும்; இன்பத்தைத் தருகின்ற இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழாகிய அமுதத்தைப் போன்றது;
கலைக ளாகிய பருவங்கள் விளங்கும் நிலவின் குளிர்ச்சி பொருந்திய ஒளியை வீசிப் பக்தர்களின் மனத்தில் துயர் என்னும் வெம்மையைப் போக்கி அருளும்.
விநாயகரின் சிலம்பு அணிந்த திருவடிகளின்குளிர்ந்த நிழலானது


ஸ்ரீஹயக்ரீவ கவசம் தமிழ் | Hayagriva Kavasam Tamil

கல்வியில் சிறக்க ஸ்ரீஹயக்ரீவ கவசம்


தேவதேவனே மஹா தேவனே
கருணைக்கடலான சங்கரனே
வரங்களை தருவதையே இயற்கையாகக் கொண்ட உங்களால்
ஸ்ரீலட்சுமி துணைவரும் திருமாலின் பல அவதாரங்களையும்

வேதங்களையும் பற்றியும் கூறப்பட்டனவே...
மஹா ப்ரபுவே, ஸ்ரீ ஹயக்ரீவ கவசம் பற்றி
எனக்குக் கூறிட வேண்டும் எனவும்
சிவனிடம் பார்வதி வேண்டினாளே

என் உள்ளம் கவர்ந்தவளே தேவி
அன்பே வடிவமாகி பிரியமுடன் பேசுபவளே
எத்தனைதான் இரகசியம் ஆனாலும்
பாற்கடலில் இருந்து எடுத்த

அமுதத்துக்கு நிகரான
ஸ்ரீ ஹயக்ரீவ கவசம்தனை
உனக்குக் "கூறுவேன் எனவும்
சிவனும் சொன்னாரே...

மஹா ப்ரளய முடிவில் இரவுநேரத்தில்
தானே திரிந்தும் ஹயக்ரீவ வடிவமெடுத்தும்
வேதங்களை அபகரித்த ஹயக்ரீவன் என்ற அசுரனை
வதம் செய்து வேதங்களை தன்னுடனே ஆக்கிக்கொண்டாரே

அப்படிப்பட்ட இந்தக் கவசமானது
மகனிடம் கொண்ட பாசத்தினால்
நான்முகன் எனக்கு உபதேசம் செய்தனரே
இந்த ஹயக்ரீவ கவசத்துக்கு

பிரம்மா ரிஷி அனுஷ்டுப் சந்தஸ்
ஹயக்ரீவரே தேவதை ஹ்ரௌஜம் பீஜம்
ஹ்ரீம் சக்தி ஓம் கீலகம் எனவும்
உறக்க உத்கீலகம் ஆகுமே...

ஸ்ரீமஹா லட்சுமியின் தாமரை போன்ற
கரத்தில் உள்ள தங்கக்குடத்தால்
அமுத வெள்ளத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட
சிரசினை உடையவரும்...

சின்முத்திரை அக்ஷமாலை தாமரை
புத்தகம்தனை கரங்களில் கொண்ட
கருணை தெய்வமும் கருணைக்கடலே
ஆன ஸ்ரீஹயக்ரீவரைத் துதிக்கின்றேன்...

அமுதத்தால் நனைக்கப்பட்டவன் சிரசை காக்கட்டும்
சந்திரனைப் போன்ற அழகானவன் நெற்றியைக் காக்கட்டும்
அசுரர்களுக்கு சத்ருவானவன் நயனங்களைக் காக்கட்டும்
வாக்கு வன்மைக்கு கடலான தெய்வம் நாசியைக் காக்கட்டும்

நிலையான சிரோத்திரம் உடையவன் காதுகளைக் காக்கட்டும் கருணைக்கடலானவன் கன்னங்களைக் காக்கட்டும்
வாக்குக்கு தெய்வம் முகத்தைக் காக்கட்டும்
தெய்வங்களின் விரோதியை அழிப்பவன் நாவை காக்கட்டும்

ஹனுமானால் வணங்கப்படுபவன் ஹனுவை காக்கட்டும் வைகுண்டபதியானவர் தொண்டையைக் காக்கட்டும்
ஹயக்ரீவன் என் கழுத்தை காக்கட்டும்
திருமகளுக்கு இருப்பிடமானவன் இதயத்தைக் காக்கட்டும்

புவியைத் தாங்குபவன் வயிற்றை காக்கட்டும்
ப்ரஜாபதி ஆனவன் மேட்ரத்தைக் காக்கட்டும்
கதாயுதம் ஏந்தியவன் துடைகளை காக்கட்டும்
தாமரைக் கண்ணன் நாபியைக் காக்கட்டும்

உலகினை அளந்தவன் முழங்கால்களை காக்கட்டும்
அகிலங்களுக்கே தலைவன் ஆடுதசையைக் காக்கட்டும்
ஹயாசுரனை வதம்செய்தவன் புறங்கால்களை காக்கட்டும்
அறிவுக்கடலான தெய்வம் பாதங்களை காக்கட்டும்
வாக்குக்கு இறைவன் கிழக்குத்திகளில் காக்கட்டும்

மேன்மையான ஆயுதம் ஏந்தியவன் தெற்கில் காக்கட்டும்
பூபாரம் சுமப்பவன் மேல்திசையில் காக்கட்டும்
சிவனால் வணங்கப்படுபவன் வடக்கு திக்கில் காக்கட்டும்
சாட்சாத் நாராயணன் உயரே காக்கட்டும்

நற்செய்கைகளின் இருப்பிடமானவன் கீழ்ப்புறம் காக்கட்டும்
ஹரியானவன் வானில் காக்கட்டும்
புவியை தோற்றுவித்தவன் நாற்புறங்களிலும் காக்கட்டும்
அறிவுடைய எவன் இந்த கவசம்தனை

தன் உடலில் ஒவ்வொரு அங்கமாக தொட்டுக் கொண்டு
இணைத்தபடியே ஜபம் புரிவானோ அவனே
வீண்வாதம் புரிவோர் அரக்கர் குழுக்களால்
எந்நாழிகையும் துயர் காண்பதில்லை.

எவன் இந்த கவசத்தை மூன்று சந்திகளிலும்
பக்தி மேம்பட படித்திடுவானோ
அவன் மூடனாக உள்ளபொழுதிலும்
பிரஹஸ்பதிக்கு மேலாக விளங்குவான்
இது உறுதியான சத்தியவாக்கே.

-ஸ்ரீஹயக்ரீவ கவசம் முற்றிற்று

ஜ்ஞாநாநந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம்
ஹயக்ரீவமுபாஸ்மஹே'

என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்துதி. இதை பாராயணம் செய்துவிட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் பரீட்சை பயம் என்பதே இருக்காது.

இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்:

`ஸ்வரூபத்தில் ஞானமும், ஆனந்தமும் ஆனவரும் ரூபத்தில், சுத்த ஸ்படிகம் போன்ற வெண்மையை உடையவரும், ஞானத்தின் அதிஷ்டான தேவதையுமான ஹயக்ரீவனை உபாசிக்கிறோம்.'

108 Iyappa Saranam| 108 ஐயப்ப சரணம்

ஓம் அய்ங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் அச்சன் கோயில் அரசே சரணம் ஐயப்பா
ஓம் அகில உலக நாயகனே சரணம் ஐயப்பா
ஓம் அனாதை ரட்சகனே சரணம் ஐயப்பா
ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அபிஷேகப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டு பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதா நதியே சரணம் ஐயப்பா
ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஆதி அந்தம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா
ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறை கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இன் தமிழ்ச்சுவையே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் ஈடு இணை இல்லாதவனே சரணம் ஐயப்பா
ஓம் உண்மை பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் உரல் குழித்தீரத்தமே சரணம் ஐயப்பா
ஓம் ஊமையை பேச வைத்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியவர்க்கு எளியவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் எருமேலி தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஏற்றங்கள் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐந்து மலைக்கு அதிபதியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஐயப்பா தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லா மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறை பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்கார தத்துவமே சரணம் ஐயப்பா
ஓம் ஔடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் கணேசன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் கருமாரி மைந்தனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடுங்குன்றே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் காளை கட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் கானக வாசனே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் குளத்ததுப்புழை பாலகனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சிணை அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின்குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் சகல கலை வல்லோனே சரணம் ஐயப்பா
ஓம் சங்கடங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு மோட்சம் தந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் சரண கோஷ பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் சற்ககுரரு நாதனே சரணம் ஐயப்பா
ஓம் சாந்த சொரூபனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்த வனமே சரணம் ஐயப்பா
ஓம் சிவ விஷ்ணு ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் சின்முத்திரை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் திரு ராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா 
ஓம் தீபஜோதி திரு ஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் துளசி மணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் துாய உள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப்பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் நித்திய பிரமச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீல வஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் நெய்யாபிஷேகப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா
ஓம் பந்தளத்தில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மகராஜனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படி கருப்பே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மணிகண்ட பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதாவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகை புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா

நவக்கிரக 108 போற்றி| Navagraha 108 Potri

ஓம் அதிதி புத்திரனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரி தேரோனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் செஞ்சுடர் ஞாயிறே போற்றி
ஓம் சூரியனார்கோவில் அமர்ந்தாய் போற்றிப் போற்றி 
ஓம் அம்புலியே போற்றி
ஓம் அஸ்த நாதனே போற்றி
ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி
ஓம் தாரைப் பிரியனே போற்றி
ஓம் திருமகள் சோதரனே போற்றி
ஓம் திங்களூர்த் தேவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பெண் கிரகமே போற்றி
ஓம் முத்துப் பிரியனே போற்றி
ஓம் வெண் திங்களே போற்றிப் போற்றி 
ஓம் அங்காரகனே போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆடு வாகனனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செண்பகப் பிரியனே போற்றி
ஓம் செவ்வாய் நாதனே போற்றி
ஓம் திருச்சிறுகுடி அருள்பவனே போற்றி
ஓம் மேஷராசி அதிபதியே போற்றி
ஓம் செவ்வாய்த் தேவனே போற்றிப் போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனே போற்றி
ஓம் நட்சத்ரேசனே போற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமே போற்றி
ஓம் பித்தளை உலோகனே போற்றி
ஓம் பொற்கொடியோனே போற்றி
ஓம் ரேவதிக் கதிபதியே போற்றி
ஓம் வடகீழ் திசையனே போற்றி
ஓம் புத பகவானே போற்றிப் போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் குரு பகவானே போற்றி
ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி
ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி
ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி
ஓம் வியாழனே போற்றிப் போற்றி 
ஓம் அசுர குருவே போற்றி
ஓம் அரங்கத்தருள்பவனே போற்றி
ஓம் கலை வளர்ப்போனே போற்றி
ஓம் கருடவாகனனே போற்றி
ஓம் கீழ் திசையனே போற்றி
ஓம் சுக்கிரனே போற்றி
ஓம் திருவெள்ளியங்குடித் தேவனே போற்றி
ஓம் துலாராசி அதிபதியே போற்றி
ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பெண்பால் கிரகமே போற்றி
ஓம் வெள்ளி நாயகனே போற்றிப் போற்றி 
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றிப் போற்றி 
ஓம் அமிர்தம் அருந்திய அரவே போற்றி
ஓம் அரக்கன் தலை கொண்டாய் போற்றி
ஓம் இராகுவே போற்றி
ஓம் கடகம் உகந்த கனலே போற்றி
ஓம் கரிய ஆடை உகந்தாய் போற்றி
ஓம் காளத்தி உகந்த கடவுளே போற்றி
ஓம் சந்திரன் பகையே போற்றி
ஓம் சனியின் நண்பனே போற்றி
ஓம் தென்மேற்குத் திசை நோக்கி நின்றாய் போற்றி
ஓம் புளிப்புச் சுவையில் களிப்பாய் போற்றி
ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் வேதம் உணர்ந்த தேவே போற்றி போற்றி
ஓம் அரவத் தலைவனே போற்றி
ஓம் அசுவதி அதிபதியே போற்றி
ஓம் அறுபரித் தேரனே போற்றி
ஓம் காளத்தியில் அருள்பவனே போற்றி
ஓம் கொள் விரும்பியே போற்றி
ஓம் செவ்வண கிரகமே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் நரம்புக்கதிபதியே போற்றி
ஓம் பன்மலர்ப் பிரியனே போற்றி
ஓம் மகத்துக் கதிபதியே போற்றி
ஓம் தும் பீஜ மந்திரனே போற்றி
ஓம் கேது பகவானே போற்றிப் போற்றி 

Arunachala Aksharamana Malai| அருணாசல அக்ஷரமண மாலை

ஊர் சுற்றும் மனம், இடைவிடாது உன்னைக் கண்டு அடங்கிட உன் பூரண அழகு ரூபத்தைக் காட்டு, அருணாசலா!

என்னை (என் அகங்காரத் தன்மையை) அழித்து இப்போது என்னுடன் இணையாவிட்டால், இது தான் ஆண்மையா, அருணாசலா!

மற்றவர் என்னை இழுக்கும்போது, ஏன் இந்த உறக்கம்? இது தான் உனக்கு அழகோ, அருணாசலா!

ஐம்புலன்கள் என்னும் கள்வர் என் வீட்டில் (உள்ளத்தில்) புகுந்த போது, நீ வீட்டில் இல்லையோ, அருணாசலா!

'ஒருவனான (பரமாத்மாவான) உன்னிடமிருந்து ஒளிந்துக் கொண்டு யார் வர முடியும்? இது உன் சூது தான், அருணாசலா!

"ஓம்" என்ற சொல்லின் பொருளாக ஒப்பற்று விளங்குபவரே! உன்னை யார் தான் உண்மையில் அறிய முடியும், அருணாசலா!

தன் மக்களுக்கு அன்பளிக்கும் தாயைப் போல் எனக்கு அருள் தந்தாய், என்னை ஆளுவது உன் கடன், அருணாசலா!

கண்ணையே பார்க்கும் கண்ணாக இருந்து, கண்ணின்றி எல்லாவற்றையும் காண்கின்ற உன்னை யாரால் காண முடியும்? என்னைப் பார், அருணாசலா!

காந்தம் இரும்பைக் கவர்வது போல், நீயும் என்னை கவர்ந்து, என்னை விடாமல் என்னடன் இணைந்து இருப்பாய், அருணாசலா!

மலை உருவாகிய அருட்கடலே, கருணைக் கடலே! கருணையுடன் விரைவில் எனக்கு அருள்செய்வாய், அருணாசலா!

கீழ் மேல் எங்கும், எல்லா திசையிலும் பிரகாசித்து ஒளிர்கின்ற மணியே! என் இதயத்தில் உள்ள கீழ்மையை அழித்திடுவாய், அருணாசலா!

குற்றங்களை அறவே அறுத்து என்னை குணசாலியாக மாற்றி அருள்வாய், குரு உருவாக ஒளிர், அருணாசலா!

நல்லவர்கள்போல் தோன்றினாலும், உண்மையில் கொடியவராக இருப்பவரிடமிருந்து என்னைக் காத்தருள், விரைவில் என்னை சேர்ந்தருள், அருணாசலா!

21
நான் மிகவும் கெஞ்சியும் நீ ஒரு வஞ்சகன்போல் கொஞ்சமும் இரங்கவில்லை, அஞ்சாதே எனக் கூறி எனக்கு அருள் செய், அருணாசலா!

கேட்பதற்கு முன்பே அளிக்கும், கேடில்லாத புகழ் கொண்ட உனது புகழை கேடு செய்யாமல், எனக்கு அருள் செய்வாய், அருணாசலா!

என் கரத்தில் உன் உண்மை ஸ்வரூபத்தின் மதுவை ஏந்தி அதனால் வெறி கொண்டு இருக்க அருள் செய், அருணாசலா!

கொடியிட்டு அடியாரைக் கொல்லாது கொல்கின்ற உன்னுடன் இணைந்து எப்படி தான் வாழ்வேனோ, அருணாசலா!

கோபமற்ற சாந்தகுணமுள்ளவரே! என்னை உனது குறியாகக் கொள்ள நான் என்ன குறை செய்தேன், அருணாசலா!

கௌதமர் போற்றும் கருணை மாமலையே! எனக்கு உன் கடைக்கண்ணால் அருள் செய்து ஆள்வாய் அருணாசலா!

எல்லாவற்றையும் விழுங்கும் கதிரொளியே, என் மனத் தாமரையை மலர்ச் செய்துவிடு, அருணாசலா!
எனக்கு உணவாக உன்னைக் கருதி, நானே உனக்கு உணவாகி, சாந்தமாக போய் விடுவேன், அருணாசலா!

மனம் குளிர உன் அமுத கதிர்களால் அமுத நிலையை திறப்பாய், அருள் மிகுந்த நிலவே, அருணாசலா!

உருவத்தை அழித்து, 'நிர்வாண" (நிர்குண பரிபூரண/ நிலையில் வைத்து, உன் அருள் உருவை எனக்கு அளித்தருள், அருணாசலா!

31 
இன்பக்கடல் பொங்க, சொற்களும், உணர்வும் அடங்க, சும்மா வீற்றிரு, அருணாசலா!

சூது செய்து என்னை இனிமேல் சோதிக்காதே, உனது சோதி நிறைந்த உருவை காட்டு, அருணாசலா!

மாய வித்தையை உண்மையென்றே கருதி மயங்கும் இவ்வுலக மயக்கத்தை நீக்கி, நிலையான வித்தையைக் காட்டி அருள், அருணாசலா!

என்னுடன் நீ சேராவிட்டால் என் உடல் நீர் போல் உருகி, என் கண்ணீரால் நான் அழிவேன், அருணாசலா!

நீ என்னை இகழ்ந்து தள்ளினால், முன்பு செய்த தீவினை என்னைச் சுடுவதன்றி, எனக்கு வேறு கதியேது, சொல், அருணாசலா!

பேசாமல் சும்மா இரு என்று சொல்லால் சொல்லாமல் மௌனத்தால் சொல்லி நீயும் சும்மா இருந்தாய், அருணாசலா!

ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்து, ஆன்ம சுகம் அனுபவித்து உறங்காவிடில் எனக்கு வேறு கதியென்ன சொல், அருணாசலா!

உனது பராக்கிரமத்தை காட்டினாய், என் மன இருள் ஒழிந்ததென்று நீ கலக்கமின்றி இருந்தாய், அருணாசலா!

நாயை விட கேடா நான்? என் சொந்த உறுதியால் உன்னை நாடி அடைவேன், அருணாசலா!

ஞானம் இல்லாமல் உன்னை அடையவேண்டுமென்ற ஆசை கொண்ட தளர்ச்சி நீங்க, ஞானம் எனக்கு தெரிவித்து அருள் அருணாசலா!

41
நீயும் ஒரு வண்டுபோல நீ இன்னும் மலரவில்லை என்று எண்ணி என்னெதிர் நின்றாய், இதென்ன அருணாசலா!
பொருள்

உண்மைத் தத்துவம் அறியாத என்னை ஆன்ம சொரூபத்தை அடையச் செய்தாய், இந்த தத்துவம் தான் என்ன, அருணாசலா!

தானே தான் தான் என்ற தத்துவத்தை அந்தத் தானாகிய நீயே எனக்குக் காட்டுவாய், அருணாசலா!

உள்ளத்தில் உட்புறம் திரும்பி, தினமும் அகக்கண்ணால் காண், உண்மை தெரியும் என்றாய், அருணாசலா!

எல்லையற்ற அகத்தில் உன்னைத் தேடி நான் திரும்பவும் உன் அருளை அடைந்தேன், அருணாசலா!

விசாரணை செய்யும் அறிவு இல்லாமல் இப்பிறப்பால் என்ன பயன்? எதோடும் இதை ஒப்பிட என்னால் முடியவில்லை, அருணாசலா!

தூய மன மொழி கொண்டவரே உறையும் உன் உண்மையான நிலையில் நானும் உறைய அருள் செய், அருணாசலா!

நான் உன்னைக் கடவுளாகக் கருதி சரணாகதி அடையவே, என்னை சேர என்னை (என் அகங்காரத்தை ஒழித்தாய், அருணாசலா!

தேடாமலே கிடைத்த நல்ல திருவருளே! என் மனத்தின் அறியாமையை தீர்த்து அருள், அருணாசலா!

தைரியத்தோடு உன் உண்மையான நிலையை நாடி அழிந்தேன், அருள் செய் அருணாசலா!

51
உன் அருள் மிகுந்த கையால் தொட்டு என்னை அணைக்காவிடில் நான் ஒழிந்திடுவேன், அருள் அருணாசலா!

குற்றமில்லாமல் நீ என்னோடு ஒன்றாகக் கலந்து, இன்பம் கண்டிட அருள், அருணாசலா!

சிரித்திட இடமில்லை, உன்னை நாடிய எனக்கு புன்னகைப் புரிந்து பார், அருணாசலா!

நான் உன்னை நாடிட நானாக ஒன்றி நீ ஸ்திரமாக நின்றாய், அருணாசலா!

என்னை உன் ஞான நெருப்பால் எரித்துச் சாம்பலாக்கிவிடுவதற்கு முன்பு, உன் அருள் மழை பொழி அருணாசலா!

நீ, நான் என்ற வேறுபாடு விலக, பேரின்பான நிலையை அருள், அருணாசலா!

நுட்பமான சிறந்த உருவுடைய உன்னை நான் என் இதயத்தில் சேர்த்துக்கொள்ள என் எண்ண அலைகள் எப்போது அழியும், அருணாசலா!

கல்வியறிவு அற்ற பேதையான எனது கெட்ட அறிவைக் அழித்து அருள் அருணாசலா!

மிகவும் உருகி நான் சரணடைந்து உன்னை அடைந்ததும், எல்லையற்ற பரம்பொருளாக நீ நின்றாய், அருணாசலா!

நேசமின்றி இருந்த எனக்கு உனது ஆசையைக் காட்டி நீ மோசம் செய்யாமல் அருள், அருணாசலா!

61
நைந்து அழிந்த கனியால் பயனில்லை, நல்ல நிலையில் நான் உள்ளபோதே என்னை நீ நாடி ஏற்றுக்கொண்டு நலம் அருள், அருணாசலா!

நான் வருந்தாமல் உன்னை எனக்குத் தந்து என்னை நீ ஆட்கொள்ளவில்லை, எனக்கு நீ எமன் தான், அருணாசலா!

நோக்கியே, எண்ணியே, ஸ்பரிசம் செய்தே என்னைப் பக்குவப்படுத்தி நீ ஆண்டருள், அருணாசலா!

மாயை என்னும் விஷம் பற்றிக் கொண்டு தலைக்கேறி உறைவதற்கு முன்னால், உன்னைப் பற்றிக் கொள்ள அருள் புரி, அருணாசலா!

என்னைப் பார்த்து, அதன் அருளால் என் மன இருள் அழிய நீ பார்க்கவில்லை எனில், வேறு யார் என்னைப் பார்க்க உனக்கு சொல்வார், அருணாசலா!

பித்தை விட்டு, என்னை உனது உண்மையான பித்தனாக்கி அருள், பித்தம் தெளியும் மருந்தான நீ, அருணாசலா!

பயமற்ற உன்னை சார்ந்த பயமில்லாத என்னைச் சேர உனக்கென்ன பயம், அருணாசலா!

கீழ்மையான பொய்யறிவு எது, நன்மையான மெய்யறிவு எது என்று சொல், அந்த மெய்யறிவை நான் அடைய அருள், அருணாசலா!

பூமியின் (பற்றுதல்) வாசனையுற்ற என்னுள்ளம் பூரண வாசனை கொள்ள, பூரண மணம் கொண்ட குணம் அருள், அருணாசலா!

உன் பெயரை நினைத்தவுடன் என்னைப் பிடுத்து இழுத்தாய் உன் பெருமையை யார் தான் அறிவார், அருணாசலா!

71
எந்தன் பேய்த்தனம் ஒழிவதற்காக என்னைப் பேயாகப் பிடித்து என்னைப் பேயனாக்கி விட்டாய், அருணாசலா!

இளங்கொடியான நான் பற்றிக் கொள்ள ஒன்றுமில்லாது வாடாமல் ஆதரவு தந்து என்னைக் காத்திடு, அருணாசலா!

பொடிபோட்டு என்னை மயக்கி, எனது போதத்தைப் பறித்து உனது போதத்தை காட்டினாய், அருணாசலா!

போக்குவரவு இல்லாத பொது வெளியினில் அருள் போராட்டம் காட்டு, அருணாசலா!

பௌதிகமான உடற்பற்று ஒழிந்து எப்போதும் உன் அழகைக் கண்டவாறு இருக்க அருள், அருணாசலா!

மலை மருந்தை நீ எனக்குப் அளித்ததால் நான் மலைக்க வேண்டுமா? அருள் மலை வடிவான மருந்தாய் ஒளிர், அருணாசலா!

அகங்காரம் கொண்டு உறைபவரின் மானத்தை அழித்து, அபிமானமில்லாது ஒளிர், அருணாசலா!

மிஞ்சினால் கெஞ்சிடும் அறியேன் நான், என்னை வஞ்சிக்காமல் அருள், அருணாசலா!

மாலுமி இல்லாத கப்பல் அலை கடலில் தவிப்பது போல் ஆகாமல் என்னைக் காத்தருள், அருணாசலா!

முடிவும் அடியும் காணாத சிக்கலை நீக்கினாய், எல்லாம் கடந்த நேர் நிலையில் வைத்தாய், அருணாசலா!

81
முகமில்லாத ஓர் மனிதன் முன் காட்டப்படும் முகக் கண்ணாடியாக ஆக்காமல் என்னைத் தூக்கி அணைத்து அருள், அருணாசலா!

உடலென்னும் அகத்தில், மென்மையான உள்ளமென்னும் மலரணையில் நாம் உண்மையில் கலந்திட அருள், அருணாசலா!

மேலும் மேலும் தாழ்ந்திடும் எளியவருடன் சேர்ந்து நீ மேன்மை அடைந்தாய் இதென்ன, அருணாசலா!

மையைப் போன்ற இருளை நீக்கி உன் அருள் மயத்தால் உண்மை நிலையின் வசமாக்கினாய், அருணாசலா!

எனது சிகையை நீக்கி, வெட்ட வெளியில் என்னை வைத்து ஆட்டம் காட்டினாய் என்ன, அருணாசலா!

எனக்குள்ள மோகத்தை அழித்து உன்னிடம் மோகமாய் வைத்தும், என் மோகத்தை தீர்க்க மாட்டாய், இதென்ன அருணாசலா!

மௌனியாக கல் போல இருந்தால், இது தான் மௌனமா, அருணாசலா!

என் வாயில் மண்ணை போட்டு, என் பிழைப்பை ஒழித்தது யார், அருணாசலா!

யாரும் அறியாமல் என் மதியை மருட்டி, என்னைக் கொள்ளை கொண்டது யார், அருணாசலா!

நீ என் இதயத்தில் ரமிப்பவன் என்பதால் இதைச் சொன்னேன், கோபம் கொள்ளாமல் என்னை இன்புறச் செய்வாய், அருணாசலா!

91
இரவு பகல் இல்லாத வெறுவெளி வீட்டில் இன்புற்றிருப்போம், வா அருணாசலா!

உனது அருள் அஸ்திரத்தை என் மேல் குறி வைத்து எய்து விட்டு, என்னை உயிரோடு உண்டாய், அருணாசலா!

லாபமானவான் நீ, இக பர லாபமில்லாத என்னை அடைந்து, என்ன லாபம் உற்றாய், அருணாசலா!

வரும்படி சொன்னாய் அல்லவா? நீ வந்து என்னைப் பராமரி, அதனால் நீ வருந்தினால், அது உன் தலைவிதி, அருணாசலா!

வா என்று அழைத்து, இதய அகத்தில் புகுந்திடச் செய்து வாழ அருளிய அன்றே, என் வாழ்வை இழந்தேன், அருள் அருணாசலா!

நீ என்னை விட்டு விட்டால் கஷ்டமாகும், உன்னை விட்டிடாமல் உயிர் விட்டிட அருள் புரி, அருணாசலா!

வீட்டினின்று என்னை வெளியே இழுத்து இதய வீட்டில் மெதுவாகப் புகுந்து, உனது உண்மை வீட்டைக் காட்டினாய், அருள் அருணாசலா!

உன் செயலை வெளிப்படுத்தி விட்டேன், என்னை வெறுக்காமல், உன் உணமை நிலையை வெளிப்படுத்தி என்னை காத்திடு, அருணாசலா!

வேதாந்தத்திலிருந்து வேறுபடாமல் விளங்கும் வேதப் பொருள் நீ, அருள் அருணாசலா!

நான் உன்னை இகழ்வதைப் வாழ்த்துவதாக வைத்து நின்னருள் குடியாக வைத்து என்னை விடாமல் அருள், அருணாசலா!

101
தண்ணீரில் ஆலி கரைவது போல் உன் உருவில் என்னை அன்பால் கரைத்து அருள், அருணாசலா!

அருணா என்று நினைத்த நான் உன் அருள் பார்வையில் மாட்டிக் கொண்டேன், உன் அருள் வலை தப்புமோ, அருணாசலா!

சிந்தித்து உன் அருளில் உறைய சிலந்தி போல் என்னைக் கட்டி சிறையிட்டு உண்டாய் அருணாசலா!

அன்போடு உன் பெயரைக் கேட்கும் அன்பரின் அன்பருக்கு நான் அன்பனாகிட அருள், அருணாசலா!

என்போன்ற உனது தீனரை இன்புறக் காத்து நீ எந்நாளும் வாழ்ந்தருள், அருணாசலா!

அன்பினால் உருகும் அன்பரின் இன்சொற்களை கேட்கும் உன் செவி, என் புன்சொல்லைக் கேட்க அருள், அருணாசலா!

பொறுமை வடிவான மலையே எனது புன் சொல்லை நன் சொல்லாகப் பொறுத்து அருள், உனது இஷ்டப்படி, அருணாசலா!

உன் மாலையை அளித்து அருணாசல ரமணா என் மாலையை அணிந்தருள், அருணாசலா!

அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா! அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!

அருணாசலம் வாழ்க அன்பர்களும் வாழ்க அசுக்ஷர மணமாலை வாழ்க,

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை| Velundu Vinai illai

விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை


உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் கந்தனே  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

ஆறுபடை வீட்டினிலே
ஆறுமுக வேலவனே
ஆதரித்து எனை ஆளும் ஐயனே முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

திருப்புகழைப் பாடி உந்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

கந்தர நுபூதி பாடி
கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

மந்திரமும் தந்திரமும்
மருந்துமாக நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

தெள்ளு தினை மாவும்
தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

வடிவேலா என்று தினம்
வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே முருகா  
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் முருகா
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே 
கந்தனுண்டு கவலையில்லை மனமே

Sathya Narayanan 108 Potri| சத்திய நாராயணன் 108 போற்றி

ஓம் ஸ்ரீபௌர்ணமி நாதனே போற்றி
ஓம் ஸ்ரீபௌர்ணமி பூஜையை ஏர்ப்பாய் போற்றி
ஓம் அனந்த நாதா போற்றி
ஓம் அயோத்தி ராஜா போற்றி
ஓம் அனந்த சயனா போற்றி
ஓம் அநந்தாயா போற்றி
ஓம் ஆலிலைக் கண்ணா போற்றி
ஓம் ஆதிசேஷா போற்றி
ஓம் ஆதித்யா போற்றி
ஓம் இலட்சுமிவாசா போற்றி
ஓம் கார்வண்ணா போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கமலக்கண்ணா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் கோபாலா போற்றி
ஓம் கோபிநாதா போற்றி
ஓம் கோவர்த்தனா போற்றி
ஓம் கோகுலவாசா போற்றி
ஓம் கோபியர் நேசா போற்றி
ஓம் கேசவா போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் மதுசூதனா போற்றி
ஓம் மதுராநாதா போற்றி
ஓம் மாமலைவாசா போற்றி
ஓம் மலையப்பா போற்றி
ஓம் மணிவண்ணா போற்றி
ஓம் மாயவா போற்றி
ஓம் முகுந்தா போற்றி
ஓம் மோகனசுந்தரா போற்றி
ஓம் பத்மநாபா போற்றி
ஓம் பரமாத்மா போற்றி
ஓம் பரந்தாமா போற்றி
ஓம் பரபிரம்மா போற்றி
ஓம் பக்தவச்சலா போற்றி
ஓம் பார்த்தசாரதி போற்றி
ஓம் பாலச்சந்திரா போற்றி
ஓம் பாற்கடல்வாசா போற்றி
ஓம் நவநீத கிருஷ்ணா போற்றி
ஓம் நந்த கோபால போற்றி
ஓம் நந்த முகுந்தா போற்றி
ஓம் நந்த குமாரா போற்றி
ஓம் நரசிம்மா போற்றி
ஓம் நாராயணா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி
ஓம் திரு நாராயணா போற்றி
ஓம் லட்சுமி நாராயணா போற்றி
ஓம் தேவகி நந்தனா போற்றி
ஓம் தாமோதரா போற்றி
ஓம் திருவிக்கிரமா போற்றி
ஓம் ராமகிருஷ்ணா போற்றி
ஓம் ராஜகோபாலா போற்றி
ஓம் ஸ்ரீராமச்சந்திரா போற்றி
ஓம் ரகுநாதா போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் தீனதயாளா போற்றி
ஓம் சத்திய நாராயணா போற்றி
ஓம் சூரிய நாராயணா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் திருவேங்கடா போற்றி
ஓம் திருமலைவாசா போற்றி
ஓம் முரளீதரா போற்றி
ஓம் வைகுந்தவாசா போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமி நாதா போற்றி
ஓம் வாஸுதேவா போற்றி
ஓம் யஸோத வத்சலா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் திருவரங்க நாதா போற்றி
ஓம் ஹயகிரீவா போற்றி
ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
ஓம் தன்வந்த்ரியே போற்றி
ஓம் ஜெகன்நாதா போற்றி
ஓம் கலியுகவரதா போற்றி
ஓம் வரதராஜா போற்றி
ஓம் சௌந்தரராஜா போற்றி
ஓம் குருவாயூரப்பா போற்றி
ஓம் சாரங்கபாணியே போற்றி
ஓம் யசோதை மைந்தனே போற்றி
ஓம் பலராமா போற்றி
ஓம் பரசுராமா போற்றி
ஓம் ஜெயராமா போற்றி
ஓம் பாலமுகுந்தா போற்றி
ஓம் பாண்டுரங்கா போற்றி
ஓம் பண்டரிநாதா போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பக்த நாதா போற்றி
ஓம் கோகிலநாதா போற்றி
ஓம் பாஸ்கரா போற்றி
ஓம் விஷ்ணவே போற்றி
ஓம் ஸ்ரீரங்கனாதா போற்றி
ஓம் பசுபாலகிருஷ்ணா போற்றி
ஓம் நரநாராயணா போற்றி
ஓம் துளஸீதாசா போற்றி
ஓம் முரளீதரா போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் யஸோத வத்ஸலா போற்றி
ஓம் க்ருக்ஷிகேசா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் வராகா போற்றி
ஓம் நாகராஜனே போற்றி
ஓம் பத்ரி நாராயணா போற்றி
ஓம் ஸத்ய நாராயணா போற்றி
ஓம் ஹரி நாராயணா போற்றி
ஓம் ஸச்சிதானந்தனே போற்றி
ஓம் துஷ்ட ஸம்ஹாரக போற்றி
ஓம் துரித நிவாரண போற்றி
ஓம் ஸ்ரீ வேங்கடேசா போற்றிப் போற்றி!

சிறுவாபுரி பதிகம்| Siruvapuri Pathigam

மானோடு நீகூடி மரகத மயிலோடு மன்னனே விளைவாகினாய் 
மதியோடு வளம் கூட்டி மன்றத்தில் நிலையான மகிமைக்கு அருளாகினாய்.
வானோரின் புகழ்பாடி வையத்தில் வாழ்வோரின் வாழ்க்கைக்குத் துணையாகினாய் 
தேனேன்ன தெளிவென்று தெரியாத பேருக்கும் தெளிவாக்கி நீ காட்டினாய் 
ஊனுக்குப் பக்கத்தில் உறவென்ன பெரிதென்ற உண்மைக்கு ஒளியாகினாய் 
யாருக்கும் புரியாத எவருக்கும் தெரியாத அறிவுக்கு அறிவாகினாய் 
அதமோடு ஆசைகள் அடக்கியே எங்களை அன்போது ஆட்சி செய்யும் 
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும் சிவபால சுப்ரமணியே!

காசென்ன பெரிதென்று காலத்தில் வாழ்வோரும் கவலையை மறக்கிறார்கள் 
மாசற்ற மனதோடு மற்றவரைக் காண்போரும் மனக்குறை தீர்க்கிறார்கள் 
சூழ்வோரும் நலம் பெற சுற்றத்தார் வளம்பெற சுகத்தையே காண்கிறார்கள் 
அமிழ்துவறும் வார்த்தையில் அடக்கமுட னிப்போரும் அன்பாக வாழ்கிறார்கள் 
நாசமுடன் பேசாமல் நல்லதையே செய்வோர் நற்சுகம் பெறுகிறார்கள் 
வாசமலர் போலுதவி பிறருக்கும் வாழ்வோரும் பாசமுடன் வாழ்கிறார்கள். 
கல்லான இதயமுடன் காலத்தில் வாழ்வோரை கரைக்கின்ற தெய்வம் நீயே 
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும் சிவபாலசுப்ரமணியே!

அழகு திருமேனியில் அபிஷேக பால்குடம் ஆனந்த தரிசனம் காண் 
கற்பூர தீபமும் கண்கவரும் தோற்றமும் காட்சியாய் காணும்போது 
மலையாக ஆட்சி செய்யும் மன்னனே உன்னிடம் புகழாட்சி காணுகின்றேன். 
கேட்டவரம் கேட்டபடி கொடுக்கின்ற தெய்வமே கேள்விகள் என்னவென்று 
கேட்கின்ற பேருக்கு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுவரம் ஈண்டளித்தாய் 
பொன்னான மேனியில் பூச்சூடி காண்போர்க்கு புதுமனை நீ கொடுத்தாய் 
மணமகள் வேண்டிவரும் மனதினை நீயறிந்து மணமகளாக்கி வைத்தாய் 
சோலை திருக் குடிக்கொண்ட சிறுவாபுரி வாழும் சிவ பால சுப்பிரமணியே!

நேற்றாகி இன்றாகி நாளையென அறியாது நாளையே கடத்துகின்றோம் 
ஒன்றாகி உருவாகும் கருவாகிப் போனாலும் ஆண்டுக்குள்தான் அறிகிறோம் 
நன்றாகி நலமாகி வளமோடு யிருந்தாலும் சிவலோகம் சேர்வதறியோம் 
கன்றாகிப் போனபின் கனியாத தாயானால் காலத்தில் என்ன செய்வோம் 
என்றாகின்ற இல்வாழ்க்கை நன்றாக வேண்டுமென இறையோடுதான் கூடுவோம் 
அன்றாட வாழ்வினில் அவதியுறும் போதெல்லாம் ஆண்டவன் உனைத்தெடுவோம் 
மன்றாடி மன்றாடி மதிகெட்டுப் போனவரும் மன்னன் உனைத்தான் கூறுவார் 
சோலை திருக்குடிகொண்ட சிறுவாபுரி வாழும் சிவ பால சுப்பிரமணியே! 

எண்ணத்தில் உள்ளதை யென்னென்ன என்றுமே எண்ணியே கூறிவைத்தாய் 
ஏழையின் இதயத்தை ஈசையுடன் நீ தந்து இயலாமை ஆக்கிவைத்தாய்
வண்ணத்தில் விழிபார்க்க வான்கூட்டு வாகைபெற வளமொடு ஆக்கிவைத்தாய்
சொல்லுக்கு சுவை கூட்டின் சொல்லோ அமுதாக சொல்லிலே நடை பழகினாய்
அன்புக்கு அசை போடும் ஆசையை பிறப்பாக்கி கண்ணீரை கதியாக்கினாய் 
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பேர் சொல்ல கந்தனே கருவாக்கினாய் 
மன்றத்தில் விளையாடு மடிமீதில் தவழ்ந்தாடும் மன்னனே மயிலேறுவாய் 
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும் சிவ பால சுப்பிரமணியே.

நெற்றியில் திருநீறு அணிந்திட அனுதினம் நிம்மதி சேர வைத்தாய் 
நெஞ்சத்திலே வைத்து தஞ்சமென கொள்வோரை நீடுழி வாழவைத்தாய் 
மற்றவர்போல் வாழ்ந்து நடைபோட்டு உனைக்கான முடவரும் நடைபழகினாய் 
உற்ற தமிழ் உளதென்று உன் நாம் கூறிவர ஊமையுடன் மொழி பயின்றாய் 
ஒளி வீசும் உன் முகம் காணாத குருடனை விழி தந்து வழிகாட்டினாய் 
உளச்சோர்வு உற்றவுடன் உடற்சோர்வு தானாகி உனைக்கான வழிகாட்டினாய் 
காணுவதில் சுகமாகி கற்பனையில் வளமாகி அழகுத் திருச்சிலையானாய் 
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும் சிவ பாலசுப்பிரமணியே! 

ஐந்திலே எத்தனை அறியாத பருவத்தில் ஆளாக்கி தாலாட்டினாய் 
பூவான எந்தனை காயாகிப் பார்க்காமல் கனியாகி மாற்றிவைத்தாய் 
ஆகாயம் போலுயர அயராதுழைத்தாலும் அளிக்கின்ற எடையாகினாய் 
சூழ்ச்சிகள் புரியாது சூழ்வது தெரியாது சுற்றத்தை மாற்றிவைப்பாய் 
சொந்தங்கள் இதுவெனச் சொல்லி வைப்போர்க்கு சொந்தமோ நீயாகினாய் 
பிறந்தவன் இறப்பதில் பேதமை இல்லாத பெரும்பணி உனதாக்கினாய் 
அரும்பணி உருவாக்கி அடிமையாய் எமையாக்கி அன்றாடம் தேடவைக்கும் 
சோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும் சிவ பாலசுப்பிரமணியே.


மனைவீடு இருகொண்டு மன்றத்தில் வாழ்ந்துவரும் மன்னனே நீ வாழ்கவே 
மனம்போன போக்கில் குடிகொள்ளும் அருள்கூடம் ஒளி வீசும் நலமாகவே 
அணிகலன் நீயூட்ட படைகலம் கொண்ட உன் கைவேலும் சிறந்தோங்கவே 
ஆகாயம் மேலுயர்ந்து அதிரூப சக்திதரும் மனம்போல் மயில்வாழ்கவே 
சேவலொரு பணியாக நாகமொரு இடமாக நாளெல்லாம் வளம் கூட்டவே 
எருக்கோடு பூஜைமலர் என்றைக்கும் நீசூட நந்தவனம் செழித்தோங்கவே 
ஒருகோடி நலமாகவே கந்தனருள் கவிபாடி உனை நாடி வருவோரும் 
சோலை திருக்குடிகொண்ட சிறுவாபுரி வாழும் சிவபால சுப்பிரமணியே!

Hanumath Bhujanga Stotra Tamil| அனுமன் புஜங்க ஸ்தோத்திரம் தமிழ்

பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.


பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.


லஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.


ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.


போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது-ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது -நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது!

பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி

ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே! இதற்கு என்ன தவம் செய்தனை ?

குருவே ஸ்ரீ ஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்று வாழும் மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் நிறைவுற்றது.

Sunday, March 23, 2025

அருணாசல பஞ்சரத்னம் தமிழ் அர்த்தம்| Arunachala Pancharathnam Tamil Meaning

அருள்மயமாக நிறைந்த அமுத சொரூபக் கடலே! விரிந்து பரந்த ஞான ஒளிக்கிரணங்களால் அகில வஸ்துக்களையும், தன்னுள் விழுங்குகின்ற அருணாசலமென்னும் மலைவடிவ பரம்பொருளே! எனது இதயத் தாமரை நன்கு விரிந்து மலரும் வண்ணம், ஞான சூரியனாக எழுந்து அருள்வாயாக.
செம்பொன் சுடராக ஒளிரும் அருணாசலனே! சித்திரமாகத் தோன்றும் மாயா காரியமான நாம-ரூபப் பிரபஞ்சம் எல்லாம் உன்னிடத்தில் தோன்றி, விளங்கி, உன்னிடத்திலேயே மறைந்து விடுகின்றன. நீயோ என்றென்றும் நான்-நான் என்று இதயத்தில் உள்ளுணர்வாக நடம் புரிவதால் உன் பெயர்தான் இதயமென்று உன்னை உணர்ந்த தபோதனர்கள் சொல்லுவார்கள்.


உள்முக நோக்கத்தோடு கூடிய ஏகாக்கிரமான, குற்றமற்ற மனத்தினால், நான் என்ற தற்போதம் எங்கிருந்து உண்டாகிறதென்று நன்கு ஆராய்ந்தால், அந்த நான் என்னும் தன்மை, கடலில் கலந்துவிடும் நதியைப் போல தன்னுருவை உன்னில் இழந்து, அருணாசலா, உன்னிடத்திலேயே ஒடுங்கிவிடும்.

சுயம்பிரகாச சொரூபமாய் விளங்கும் அருணாசலா! வெளிமுக விஷயங்களை நீக்கிவிட்டு, பிராணாயாமாதி யோகாப்பியாசத்தினால், நிச்சலமாக நிற்கக்கூடிய சாத்வீக மனத்தினால் இதயத்தில் பொருந்தி, இடைவிடாமல் உன்னை தியானித்து யோகியானவன் உன்னை சித்சொரூபமாகிய ஜோதி வடிவில் தரிசனம் பெற்று மிக உயர்ந்த ஜீவன் முக்தி நிலையினை அடைகிறான்.

அருள்மிகு அருணாசலா! உன்னையே சரணாகதி யடைந்து, அனைத்தையும் உனக்கே ஒப்படைத்து தூய்மை நிறைந்த உள்ளத்தினால் சதாகாலமும், காணக்கூடிய அனைத்தையும் உன் சொரூபமாகவே கருதி, உன்னிடம் அனன்ய பக்தி செலுத்தும் உத்தம பக்தன், சுக சொரூபமான உன்னில் இரண்டறக் கலந்து பேரின்ப நிலையை எய்துகிறான்.

அருணாசல க்ஷேத்திர பகவான் ரமணன், வடமொழியில் ஆர்யாகீத விருத்தத்தில் இயற்றிய இந்த அருணாசல பஞ்சரத்னம் உபநிஷத்துக்களின் கருத்தேயாகும். இதனை இனிய செந்தமிழ் வெண்பாவாக உலகத்தோருக்கு மகிழ்ச்சியுடன் மீண்டும் அருளினான்.

விஷ்ணு முதலான அனைத்து ஜீவர்களின் இதயத்தாமரை என்னும் குகையில் பிரகாசித்து, ஆத்ம சொரூபமாய் ரமித்துக் கொண்டிருக்கும் பரமாத்மாவே அருணாசல ரமணனாகும். அவனை அடைய வேண்டுமானால் பக்தியினால் நெஞ்சுருகி, இதய குகையை அடைந்து, மெய்யறிவாகிய ஞானக் கண்ணைத் திறந்து நோக்கினால் அவ்வருணாசல ரமணனின் உண்மை சொரூபத்தை உள்ளபடி அறிவாய்.

Thursday, March 20, 2025

வீர மாகாளி விருதணி | Veera Maakaali Viruthani

உலகின் ஆதியே ஊழி அந்தமே அலைகள் ஆர்த்திடும் ஆழிச் சங்கமே மலைகள் போர்த்திய மாரிப் பந்தலே கலைகள் வீரமா காளி அம்மனே!
பெருமை ஊட்டுவாய் பீடு நாட்டுவாய் அருமை வாழ்வினை ஆண்டு காட்டுவாய் திருவின் வானமே தெற்கின் காவலே கருணை வீரமா காளி அம்மனே!

புவியின் அன்னையே பூவின் மென்மையே அவியும் வேள்வியின் ஆற்றல் வன்மையே ரவியும் திங்களும் சேர்ந்து தீட்டிய கவிதை வீரமா காளி அம்மனே!

அருவி போல்வரம் ஆறு போலருள் உருவில் பேரலை ஊற்றில் ரௌத்திரம் பெருகும் மாமழை பேணி வாழ்ந்திடக் கருவி வீரமா காளி அம்மனே!

அழகுப் பூவனம் ஆதி ஐந்தினை உழவின் மண்மணம் ஊறும் சிந்தனை பழகும் பல்கலை பாவை செம்மொழிக் கழகம் வீரமா காளி அம்மனே!

பவள வேல்விழி பால்வெண் பல்லணி புவனம் காத்திடப் பொங்கும் போர்முகம் நவமும் தொன்மையும் நாடி நல்கிடும் கவசம் வீரமா காளி அம்மனே!

வனமும் ஆழியும் வாழும் குன்றமும் புனமும் பாலையும் போற்றும் தாய்மையே தினமும் வேளையும் தேவை தீர்ப்பவள் கனகம் வீரமா காளி அம்மனே!

பழகு நாடகம் பாடும் இன்னிசை அழகுச் சொற்றொடர் ஆளும் செம்மொழி விழவின் நாயகி வீரம் பூத்திடும் கழனி வீரமா காளி அம்மனே!

சுடரின் வீதியாள் சோதி ஆதியாள் நடனப் போதியாள் நாட்டின் நாதியாள் உடலின் பாதியாள் ஊழின் மீதியாள் கடமை வீரமா காளி அம்மனே!

இடியும் மின்னலும் ஏற்ற மாமழை படியும் நன்செயில் பாடு ஏற்பவர் விடியும் காலையாய் வேர்வை நோற்பவர் கடவுள் வீரமா காளி அம்மனே!

Sunday, March 16, 2025

Sandikeswarar 108 Potri Tamil| சண்டிகேஸ்வரர் 108 போற்றி

ஓம் அருள்வடிவே போற்றி
ஓம் அபய வரதனே போற்றி
ஓம் அந்தணனே போற்றி
ஓம் அநுகூலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அகத்துளாழ்ந்தவனே போற்றி
ஓம் அன்பர்க்கெளியவனே போற்றி
ஓம் அரவப்புரியோனே போற்றி
ஓம் ஆதிசிவன் வடிவே போற்றி
ஓம் ஆதிசண்டேசுவரனே போற்றி
ஓம் இடையனே போற்றி
ஓம் இனியவனே போற்றி
ஓம் இடையூறு களைபவனே போற்றி
ஓம் இறையருள் கூட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் ஈசானத்தமர்ந்தவனே போற்றி
ஓம் உத்தமனே போற்றி
ஓம் உபகாரனே போற்றி
ஓம் உறுதுணையே போற்றி
ஓம் உட்பிரகாரத்திருப்போனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எச்சதத்தன் சேயே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
ஓம் கஜவாகனனே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் கலியில் இருகரனே போற்றி
ஓம் கரியுரியணிந்தவனே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் காச்யப கோத்ரனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கிருதயுகத்துபதினாறுகரனே போற்றி
ஓம் கும்பிடுங்கையனே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் கோ ரக்ஷகனே போற்றி
ஓம் சங்கு நிறனே போற்றி
ஓம் சடை முடியனே போற்றி
ஓம் சச்சிதானந்தனே போற்றி
ஓம் சண்டீசன் ஆனவனே போற்றி
ஓம் சாந்த ரூபனே போற்றி
ஓம் சாயுஜ்யம் அளிப்பவனே போற்றி
ஓம் சிவபக்தனே போற்றி
ஓம் சிவகண நாயகனே போற்றி
ஓம் சிவபாலனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிவபூஜைப் பிரியனே போற்றி
ஓம் சிவப்ரசாதம் ஏற்போனே போற்றி
ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
ஓம் சிவாலயத் தேவனே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிவனிடமிட்டுச் செல்வோனே போற்றி
ஓம் சுருதிப்பிரியனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
ஓம் சேய்ஞலூரானே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாலக்காவலே போற்றி
ஓம் தவசியே போற்றி
ஓம் தனித்திருப்போனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி
ஓம் தாதைதாள் தடிந்தவனே போற்றி
ஓம் துவாபரத்து நாற்கரனே போற்றி
ஓம் தியானேஸ்வரனே போற்றி
ஓம் திரேதாயுகத்தெண்கரனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தேஜோ ரூபியே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நாயனாராவனவனே போற்றி
ஓம் நடனன்ரூபனே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நல்வழிப்படுத்துபவனே போற்றி
ஓம் நால் வடிவினனே போற்றி
ஓம் நித்தியனே போற்றி
ஓம் நிர்மலனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் ப்ரம்மசாரியே போற்றி
ஓம் ப்ரம்ம ஞானியே போற்றி
ஓம் ப்ரசண்டனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பவித்ரனே போற்றி
ஓம் பவித்ரை குமாரனே போற்றி
ஓம் பத்மாசனனே போற்றி
ஓம் பதமளிப்பவனே போற்றி
ஓம் புனிதனே போற்றி
ஓம் பூஜைபலன் அருள்வோனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் மண்ணிக்கரைமணியே போற்றி
ஓம் மறையோருள் மாணிக்கமே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முன்னிலையறிந்தோனே போற்றி
ஓம் மோனனே போற்றி
ஓம் மோக்ஷமளிப்பவனே போற்றி
ஓம் ரிஷபவாகனனே போற்றி
ஓம் ரக்ஷிப்பவனே போற்றி
ஓம் ருத்ராம்சனே போற்றி
ஓம் ருத்ராக்ஷமணிந்தவனே போற்றி
ஓம் வழித்துணையே போற்றி
ஓம் வரமருள் தேவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விசாரசர்மனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் வீடளிப்பவனே போற்றி
ஓம் சர்வோபகாரனே போற்றி
ஓம் சண்டிகேசுவரனே போற்றிப் போற்றி!

Friday, March 14, 2025

நரசிம்மர் 108 போற்றி| Narasimha 108 Potri

ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி
ஓம் நாடியருள் தெய்வமே போற்றி
ஓம் அரசு அருள்வோனே போற்றி
ஓம் அறக் காவலனே போற்றி
ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி
ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி
ஓம் அழகிய சிம்மனே போற்றி
ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
ஓம் அருள் அபயகரனே போற்றி
ஓம் அகோபில நரசிம்மனே போற்றி
ஓம் அரவப் புரியோனே போற்றி
ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி
ஓம் அகோர ரூபனே போற்றி
ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி
ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி
ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி
ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி
ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி
ஓம் ஈரெண் கரனே போற்றி
ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி
ஓம் உக்ர நரசிம்மனே போற்றி
ஓம் உடனே காப்பவனே போற்றி
ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி
ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி
ஓம் கதிர் நரசிம்மனே போற்றி
ஓம் கதலி நரசிம்மனே போற்றி
ஓம் கர்ஜிப்பவனே போற்றி
ஓம் கம்பப் பெருமானே போற்றி
ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி
ஓம் கருடாத்ரி நாதனே போற்றி
ஓம் கனககிரி நாதனே போற்றி
ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி
ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி
ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி
ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி
ஓம் கும்பி நரசிம்மனே போற்றி
ஓம் கோல நரசிம்மனே போற்றி
ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி
ஓம் கோர நரசிம்மனே போற்றி
ஓம் சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சர்வாபரணனே போற்றி
ஓம் சக்ர நரசிம்மனே போற்றி
ஓம் சத்ர நரசிம்மனே போற்றி
ஓம் சண்ட நரசிம்மனே போற்றி
ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி
ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி
ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி
ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி
ஓம் சாந்த நரசிம்மனே போற்றி
ஓம் சிம்மாசனனே போற்றி
ஓம் சிம்மாசலனே போற்றி
ஓம் சுடர் விழியனே போற்றி
ஓம் சுந்தர சிம்மனே போற்றி
ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி
ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்தௌண நரசிம்மனே போற்றி
ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி
ஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றி
ஓம் நவ நரசிம்மனே போற்றி
ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி
ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி
ஓம் நின்றும் அருள்வோனே போற்றி
ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி
ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி
ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
ஓம் பகையழித்தவனே போற்றி
ஓம் பஞ்ச முகனே போற்றி
ஓம் பத்மாசனனே போற்றி
ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி
ஓம் பாவக நரசிம்மனே போற்றி
ஓம் பானக நரசிம்மனே போற்றி
ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி
ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி
ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி
ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி
ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி
ஓம் புராண நாயகனே போற்றி
ஓம் புச்ச நரசிம்மனே போற்றி
ஓம் பூவராக நரசிம்மனே போற்றி
ஓம் மால் அவதாரமே போற்றி
ஓம் மாலோல நரசிம்மனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் மலையன்ன தேகனே போற்றி
ஓம் முக்கிய அவதாரனே போற்றி
ஓம் முப்பத்திரு ÷க்ஷத்ரனே போற்றி
ஓம் யோக நரசிம்மனே போற்றி
ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி
ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி
ஓம் ருண விமோசனனே போற்றி
ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் லோக ரக்ஷகனே போற்றி
ஓம் வஜ்ர தேகனே போற்றி
ஓம் வராக நரசிம்மனே போற்றி
ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி
ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி
ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி
ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி
ஓம் விசுவரூபனே போற்றி
ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி
ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றிப் போற்றி!!

Thursday, March 13, 2025

Prathyangira Ashtakam| மகா ப்ரத்யங்கிரா அஷ்டகம் தமிழ்

பல்லாயிரம் கண்ணால் கருணை மழை பொழியும் அதர்வணக் காளி நீயே 
சொல்லியரத்தா லுன்னைத் துதித்திடவே மகிழும் பரசிவா னந்த வடிவே
எல்லோரும் எப்போதும் ஏற்றங்கள் பல பெறவே எங்கும் நிறைந்து வாழ்
நல்லவள நாயகியே வல்வினைகள் தீர்க்கு
மெங்கள் அன்னயே ப்ரத்யங்கிரா!
சின்னக் குழந்தை ப்ரகலாதனைக் காக்க சீறிய சிங்க வடிவாய்
சொன்ன வண்ணமே தூணில் வெளிவந்த நரசிம்மன் அசுரனை வதை உக்கிரம்
முன்னம்நீ சரபரின் இறக்கையாய் வந்தணைத்து சினம் தணித்திட்ட தாயே
சன்னிதியால் சஞ்சலங்கள் வல்வினைகள் தீர்க்குமெங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!

மதிசூடி விரிசடையாள் துணையாய் காத்யாயனி சாமுண்டா முண்ட மர்தினி
துதிகாளி சாந்தா த்வரிதா வைஷ்ணவீ பத்ரா கருஉருக் கொண்ட சூலி
அதிநீல ஆடையாளே பாச முண்ட சூலமுடன் டமருகச ஸர்ப்ப பாணியும் நீ
கதியாகவே வந்து வல்வினைகளைத் தீர்க்கும் எங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!

நெடுநாவில் உதிரம் சிந்தும் நெஞ்சில் நீள கபால மாலை மின்னல் உன்கண் ணாகுமே
படுத்தும் பில்லிசூன்யமகல ராஜசிம்ம வாஹினி நீயே ஏகாந்த யோகினி
துடிப்பான செம்பூவும் படையலுக்குச் செம்பழமும் ஏற்கும் பைரவ பத்னியே
அடுத்துக் கொடுக்கும் வல்வினைகள் தீர்க்குமெங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!

ஒரு ஆணி வேராய் விளங்கும் மந்திர பீஜமான க்ஷம் அவளுக்கே உவப்பே
இருடியர் அங்கிரஸர் ப்ரத்யங்கிரஸர் எனும் இரு முனிவர் நாம வடிவே
திருப்பாதம் ஆணவத்தைச் சவமாக்கி மேல்நிற்கும் தேவி உபாசகர் காவல்நீ
உருவாக்கும் குரோதங்கள் வல்வினைகள் தீர்க்குமெங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!

பக்தர் மனங்குளிரப் பார்த்து அருள் பொழியும் உன்கண்கள் ஈராயிரம்
கத்தும் கடலலையாய் கதறும்எம் குறை கேட்கும் உன்செவிகள் ஈராயிரம்
புத்தி பிறழாமலே நாம் வாழவே உதவும் உன் கைகள் ஈராயிரம்
சித்தமலம் அறுத்து வல்வினைகள் தீர்க்குமெங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!

குண்டலினி சக்திதனை ஆக்ஞையிலே ஏற்றுவிக்கும் அனந்தா வாக்தே வியும் நீ
கண்டார்க் கெல்லாம் களிப்பே ஆவரண பூசைதனில் அணங்க மாலினி யும்நீயே
கொண்டசஞ்சலம் பீதி ஆயாசம் யாவையுமே தீர்க்கும் மாதா கௌலினீ
அண்டங்கள் அனைத்திலும் வல்வினைகள் தீர்க்கும் எங்கள் அன்னையே ப்ரத்யங்கிரா!

சத்ருபய சங்கட ஸர்ப்ப தோஷ நாசினீ ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்யங்கிரா!
சித்தசுத்தி நல்கிடும் துரிதவர தாயினீ ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்யங்கிரா!
சுத்த ஏழுகோடி தன்னில் ஸ்ரேஷ்ட மந்த்ர ரூபிணி ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்யங்கிரா!
உத்தம இகபரச் சுகங்கள் யாவும் நல்குவாய் ஜெய ஜெய ஸ்ரீ ப்ரத்யங்கிரா!

Tuesday, March 11, 2025

Sivavakiyar Padal | சிவவாக்கியர் பாடல்

ஓம் நம: சிவாய ஓம்

ஓம் நம: சிவாய

ஓம் நம: சிவாய ஓம்

ஓம் நம: சிவாய


1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே 

3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம் ஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே 

4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே.


5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே

6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே 

7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார் நண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் எண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே 

8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே 

9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே 

10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை மிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை

11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ இன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ செம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே

12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய் உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே 

13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும் நான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம் ஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம் தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே

14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும் நமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே நமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே 

15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள் இல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை எல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே 

16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன் போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் மார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ ராம ராம ராம ராம ராம என்னும் நாமமே 

17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் கண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான் மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின் அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே 

18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே 

19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் தண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே வெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே 

20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே

Sunday, March 2, 2025

Guru Thuthi| குரு துதி

கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார் 

தேவகுருவும் இரக்க சுபாவம் உள்ளவரும் உலகை ரட்சிப்பவரும் சகலகலைகளையும் அறிந்தவருமாகத் திகழ்பவர் பிரஹஸ்பதி.
எக்காலத்திலும் எல்லோருடைய விருப்பங்களையும் ஈடேற்றுபவரும், அனைத்தையும் வென்றவரும், சகலராலும் பூஜிக்கத்தக்கவரும், விருப்பு வெறுப்பற்றவரும், முனிவர்களுள் மேலானவரும், தர்மத்தைப் பாதுகாப்பவரும் தந்தைக்கு நிகரான குருவுமாகத் திகழ்பவர் பிரஹஸ்பதி.

வியாழ பகவானே உலகின் உற்பத்திக்கு காரணமானவரும், சகல உயிர்களின் பிறப்புக்கு காரணமானவரும் மூவுலகிற்கும் தலைமை ஏற்பவரும், மிகுந்த பராக்ரமம் உள்ளவருமாகத் திகழ்கிறார்.

இருபத்து நான்கு புண்யகார்ய தத்துவங்களையும் நியமமாகக் கடைப்பிடிப்பவரும் புண்ணியங்களை அளிப்பவரும் நந்தகோபரின் மகனாக அவதரித்தவருமான மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட இந்தத் துதியினை...

தினமும் விடியற்காலையில் சொல்பவர் எல்லா வளமும் நலமும் பெறுவர். பகவான் விஷ்ணுவின் அருளுக்கும், குருபகவானின் அருளுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள். மனதில் பக்தியுடன் இதனை அதிசிரத்தையாகச் சொல்பவர். ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைப் பெற்று குரு அருளால் சகல செல்வமும் பெற்று வாழ்ந்து, முடிவில் விஷ்ணுலோகத்தை அடைவர்.

விஷ்ணு தர்மோத்ர புராணத்தில் உள்ள பிரகஸ்பதி துதி நிறைவுற்றது.

Saturday, March 1, 2025

தோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி| Thorana Ganapathi Prasanna Sthuthi

தோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி

கோயில்களுக்குச் சென்று வழிபட இயலாத நிலையில், வீட்டிலேயே ஸ்ரீதோரண கணபதியை மனதால் தியானித்து, அகஸ்தியர் நாடி நூலில், ப்ரசன்ன காண்டம் பகுதியில் உள்ள ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதியை தினமும் மூன்றுமுறை படித்துவர, கடன் பிரச்னைகள் யாவும் நீங்கும். வாழ்வில் வறுமைகள் அகன்று வளம் பெருகும்.
சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும் முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய் காரணணே புகழ்பொருளே கடன்தீர வீரனே! தோரண கணபதியே! தோன்றிடுக என் முன்னே!

திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல் திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளி இன்றி நிற்கின்றோம் கடன்பட்டுக் கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே உடன் வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும் கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய் விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக!

மாதுளை மாங்கனியும் கொவ்வை என ஐங்கனியும் காதினிலே சேதி சொல்லி செவ்வாய் மதிசதுர்த்தியிலும் சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம் தோரணணே! செவ்வேளின் மூத்தவனே! செவி சாய்ப்பாய்!

பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா தோரண வாயில் அமர்ந்து துவள்வோரைக் காப்பவரே சக்தியின் மேகலையில் புத்தி தரும் புகழ்மகவே! எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே!

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல் இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே! குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க் கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்!! தோரண கணபதியே தோன்றிடுக என்முன்னே!!!

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...