கருநிறக் காகம் ஏறி காசினி தன்னை காக்கும் ஒரு பெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன் ஆதரித் தெம்மை காப்பாய்! பொருளோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்! - (1)
ஏழரை சனியாய் வந்தும். எட்டினில் இடம் பிடித்தும். கோளாறு நான்கில் தந்தும். கொண்டதோர் கண்ட கத்தில் ஏழினில் நின்ற போதும் இன்னல்கள் தாரா வண்ணம் ஞாலட்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்! - (2)
பன்னிறு ராசி கட்கும் பாரினில் நன்மை கிட்ட எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறி வழிகள் காட்ட எண்ணெயில் குளிக்கும் நல்ல ஈசனே உனைத்துதித்தேன் புண்ணியம் எனக்கு தந்தே புகழ்கூட்ட வேண்டும் நீயே! - (3)
கருப்பினில் ஆடை ஏற்றாய்! காகத்தில் ஏறி நின்றாய்! இரும்பினை உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்! அரும்பினில் நீல வண்ணம் அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்! பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே! - (4)
குளிகனை மகனாய் பெற்றாய்! குறைகளை அகல வைப்பாய்! எழிலான சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார் விழிபார்த்து பிடித்து கொள்வாய்! விநாயகர், அனுமன் தன்னை தொழுதாலோ விலகிச் செல்வாய் துணையாகி அருளை தாராய்! - (6)
அன்னதானத்தின் மீது அளவிலா பிரியம் வைத்த மன்னனே! சனியே! உன்னை மனதார போற்றுகின்றோம்! உன்னையே சரணடைந்தோம்! உயர்வெல்லாம் எமக்குத்தந்தே. மன்னர் போல் வாழ்வதற்கே மணியான வழிவகுப்பாய்! - (7)
மந்தனாம் காரி , நீலா மணியான மகர வாசா! தந்ததோர் கவசம் கேட்டே சனியென்னும் எங்கள் ஈசா வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு! எந்த நாள் வந்த போதும் இனிய நாள் ஆக மாற்று! - (8)
1. ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் எல்லா விதமான ஆசைகளையும் தவிர்த்தவரும், பக்திப் பரவசத்தால் உண்டாகும் ஆனந்தத்தால் கண்ணீர்-மயிர்க்கூச்சல் முதலியவற்றை உடையவரும், மிகவும் தூய மனம் படைத்தவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், வாயு புத்திரருமாகிய ஹனுமாரை இப்போது தியானம் செய்கிறேன்.
2.உதயசூரியனுக்கு நிகரான சிவந்த தாமரை போன்ற முகத்தை உடையவரும், கருணையால் கண்ணீர் வழியும் கண் பார்வையை உடையவரும், சஞ்சீவி மலையைக்கொண்டு வந்து போரில் இறந்த வானரர்களை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தவரும், மனதை ஈர்க்கும் மகிமை படைத்தவரும், அஞ்சனாதேவியின் புண்ணியத்தின் பலனாகத் தோன்றியவருமாகிய ஹனுமாரை தரிசிக்க விரும்புகிறேன்.
3. காமத்தை வென்றவரும், தாமரை இதழ்போன்ற பரந்த கண்களால் அழகு வாய்ந்தவரும், சங்கு போன்ற கழுத்தை உடையவரும், கோவைப்பழம் போல் சிவந்து பிரகாசிக்கும் உதடு உடையவரும், வாயு புத்திரருமாகிய ஹனுமாரை ஒரே ஆதாரம் என்று சரணடைகிறேன்.
4. சீதையின் துன்பத்தைப் போக்கியவரும், ஸ்ரீராமபிரானின் புகழைப் பிரகாசிக்கச் செய்தவரும், ராவணனுடைய புகழை அழித்தவருமாகிய ஹனுமாரின் உருவம் என் முன்னால் தோன்றட்டும்.
5.வானரக் கூட்டத்தின் தலைவரும், அசுர வம்சமாகிய ஆம்பல் மலரை சூரியகிரணம் போல்இருந்து அழித்தவரும், எளியவர்களைக் காப்பாற்றுவது என்ற உறுதியாக சித்தம் கொண்டவரும், வாயு பகவான் செய்த தவத்தின் வடிவமாக இருப்பவருமாகிய ஹனுமாரை நான் நேரில் கண்டேன்.
பஞ்சரத்தினம் என்று பெயர் பெற்ற ஹனுமாரின் இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கிறாரோ, அவர் இந்த உலகில் நீண்ட காலம் எல்லா இன்பங்களையும் அனுபவித்து ஸ்ரீராமபக்தனாகவும் விளங்குவார்.
தனது வேரின் அடியில் சகல தீர்த்தங்களையும், நடுவில் சர்வ தேவதைகளையும், நுனியில் சர்வ வேதங்களையும் கொண்ட ஸ்ரீதுளசியை நமஸ்கரிக்கிறேன்.
தன்னை தரிசிப்போரது சகல பாவங்களையும் போக்குபவள். தன்னை ஸ்பரிசிப்போரது மேனியைத் தூய்மைப்படுத்துபவள். தன்னை வணங்குவோரது சகல நோய்களையும் தீர்ப்பவள். தனக்கு நீர் வார்ப்போரைக் கண்டு எமனும் நடுங்குமாறு செய்பவள். தன்னை விதிப்படி பிரதிஷ்டை செய்பவர்களை, ஸ்ரீகிருஷ்ணரது அன்புக்குரியவர்களாகச் செய்பவள். தன்னை பூஜித்தால் மோக்ஷத்தை நல்குபவள். அத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீதுளசியை வணங்குகிறேன்.
ஸ்ரீ துளசி, பவித்ரமானவள், பூஜிக்கத் தகுந்தவள், பிருந்தாவனத்தை வாசஸ்தலமாகக் கொண்டவள், ஞானம் நல்குபவள், ஞானமயமானவள், எவ்விதக் களங்கமும் அற்றவள், எல்லோராலும் பூஜிக்கப்படுபவள்.
ஸ்ரீ துளசியானவள், கற்புக்கரசி, பதிவிரதை. பிருந்தா என்ற ரூபமுடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள், கறுப்பு, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வித வண்ணங்களை உடையவள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்.
ஸ்ரீ துளசி தேவி, ஸ்ரீதேவியின் தோழி. எப்போதும் சுத்தமானவள். அழகிய பற்கள் உடையவள், பூமியைப் புனிதமாக்குபவள், எப்போதும் ஸ்ரீஹரியையே தியானிப்பவள், பகவானது பாதத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவள்.
ஸ்ரீ துளசி, புனிதத்தின் திருவுருவமானவள். மிகச் சிறந்தவள், நல்ல வாசனையுள்ளவள், அமிர்தத்தோடு கூடவே தோன்றியவள், நல்ல தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருபவள், மகிழ்ச்சியானவள். துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி ஆன மூன்று சக்திகளின் திருவடிவானவள்.
ஸ்ரீ துளசி தேவி மிகப் பிரகாசமானவள், தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவள், அழகிய திருவுருவம் உடையவள், ஸ்ரீவிஷ்ணுவின் மனதிற்குப் பிரியமானவள், பூதம், வேதாளம் முதலியவற்றால் உண்டாகும் பயத்தை நீக்குபவள், மஹா பாபங்களைப் போக்குபவள்.
ஸ்ரீ துளசி தேவி, விருப்பங்களை நிறைவேற்றுபவள். மேதைத் தன்மை மற்றும் நுண்ணறிவு அவற்றின் வடிவமானவள், ஒளி ரூபமானவள், வெற்றியை அளிப்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றைத் தரித்திருப்பவள், தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தை எடுக்கும் சக்தியுடையவள்.
மோட்சத்தைத் தருபவள், கரும்பச்சை வர்ணம் உள்ளவள், என்றும் இனிமையானவள், மெல்லிய இடை உடையவள், அழகான கேசமுள்ளவள், வைகுண்டத்தை வாசஸ்தலமாக உடையவள், ஆனந்தத்தை அளிப்பவள், கோவைப்பழம் போன்ற உதடுகள் உள்ளவள், குயில் போன்ற குரல் உடையவள்.
பொன்னிறமானவள், கண்டகி நதி உண்டாகக் காரணமானவள், ஆயுள் விருத்தியைத் தருபவள், வன ரூபமானவள், துக்கத்தை நசிப்பவள், மாறுதல் இல்லாத, இறைவனைப் போன்றவள், நான்கு திருக்கரங்களை உடையவள்.
கருடனை வாகனமாக உடையவள், சாந்தமானவள், புலனடக்கம் நிரம்பியவள், துன்பங்களைப் போக்குபவள், ஸ்ரீவிஷ்ணுவின் மூலிகையாக உள்ளவள். நன்கு வளர்ந்த தேகமுடையவள், தர்ம, அர்த்த காம பலன்களைத் தன்னை உபாசித்தவர்களுக்கு அளிப்பவள்.
மூன்று சக்திகளுக்கும் மேலான சக்தியானவள். மஹாமாயையின் ஸ்வரூபமானவள், லக்ஷ்மீயாலும், சரஸ்வதியாலும் பூஜிக்கப்படுகின்றவள், சுமங்கலிகளைப் பூஜித்தால் சந்தோஷமடைபவள். சகல மங்கலங்களையும் விருத்தி செய்பவள்.
சாதுர்மாஸ்ய உத்சவ காலத்தில் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவள். சாதுர்மாஸ்யத்தில் தன்னை பூஜிக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சந்நிதானமான வைகுண்டத்தை அடையும் பாக்கியம் அளிப்பவள், உத்தான துவாதசியில் விசேஷமாகப் பூஜிக்கத்தக்கவள். சகல தேவர்களாலும் பூஜிக்கப்படுகின்றவள்.
கோபியர்களுக்கும் அவர்கள் ப்ரேமை கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் அன்பு பாலமாக இருப்பவள். அழிவற்றவள், முக்குணங்களுக்கப்பாற்பட்டவள், பார்வதி தேவிக்குப் பிரியமானவள், துளசிவனம் உள்ள இடத்தில் அகால மரணம் ஏற்படாது, ராதா தேவிக்கு மிகவும் பிரியமானவள், மான் போன்ற விழிகளை உடையவள்.
காலையில் தரிசிக்கத்தக்கவள், உடல் மற்றும் மனதின் களைப்பை அகற்றுபவள்.
ஸ்ரீவிஷ்ணுவின் பத்தினியாக விளங்குபவள், சகல சித்திகளையும் தருபவள், நாராயண ஸ்வரூபமானவள், சந்ததியை நல்குபவள், தன் வேரின் மண்ணை பக்தியுடன் அணிபவரைப் புனிதப்படுத்துபவள்.
அசோகவனத்தில் உள்ளவள், சீதையால் தியானம் செய்யப்பட்டவள், தானே தனக்குப் புகலிடமானவள், கோமதீ, சரயூ ஆகிய புண்ணிய நதிகளின் கரையில் தோன்றி வளர்பவள். சுருண்ட கூந்தலை உடையவள்.
தகாதவர் உணவைப் புசித்த பாவத்தைப் போக்குபவள், தானம் செய்யும் போது விடும் நீரைச் சுத்தமாக்குபவள் பிரசாதமாகக் காதில் அணிந்தால் மிக்க சந்தோஷம் அடைபவள், மங்களமானவள், விரும்பிய எல்லாம் அனைவருக்கும் அளிப்பவள். அத்தகைய மகிமை பொருந்திய துளசி தேவியை வணங்குகிறேன்.
1. ஸ்ரீகிருஷ்ணநாம சங்கீர்த்தனத்திற்கு எல்லா வெற்றியும் உரித்தாகட்டும். இது காலம் காலமாக நம் இதயத்தில் படிந்துள்ள மாசுக்களை நீக்கி, கட்டுண்ட வாழ்வில் தொடரும் பிறப்பு இறப்பு என்ற தீயை அணைக்கிறது. நிலவு தன் ஒளியால் குளிர்ச்சியை கொடுப்பது போல, இந்த ஸங்கீர்த்தனமானது மனித இனத்திற்கு பெரும் வரப்பிரசாதமாகும். இது தெய்வீக ஞானத்திற்கு வித்திடுகிறது. பேரானந்த கடலை பெருக வைக்கிறது. எப்பொழுதும் நாம் விரும்பும் அமிர்த்தை முழுமையாக சுவைக்கச் செய்கிறது
2. எம்பெருமானே, உமது திருநாமம் மட்டுமே அனைத்து ஜீவன்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாகும். இவ்வாறாக கிருஷ்ணா, கோவிந்தா என ஆயிரக்கணக்கான உடையவராயிருக்கிறீர். தெய்வீக நாமங்களில் தெய்வீக சக்தியை இருக்கிறீர்கள். இந்த நாமங்களை இத்தகைய உம்முடைய உள்ளடக்கி நாமங்களை ஜெபிப்பதற்கு கடினமான நிபந்தனை எதுவும் இல்லை. உம்முடைய கருணையினால், உம்முடைய தெய்வீகநாமங்களினால், நாங்கள் சுலபமாக உம்மை அடைந்துவிட முடியும். ஆனால் இத்தகைய நாமங்களில் சுவையற்ற நான் துர்பாக்கியசாலியாக இருக்கிறேன். மிகவும்
3. பகவானின் புனித நாமத்தை ஜெபிக்கும் ஒருவர் தாழ்வான மனநிலையில் இருக்க வேண்டும். புல்லைக் காட்டிலும் பணிவாக இருக்க வேண்டும். மரத்தை விடப் பொறுமையாக இருக்க வேண்டும். தனக்கென்று எந்த மரியாதையையும் எதிர்பார்க்கக் கூடாது.பிறருக்கு எல்லா மரியாதையையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மனநிலையில் ஒருவர் பகவானின் புனித நாமத்தை இடைவிடாமல் உச்சரிக்க முடியும்.
4. எல்லாம் வல்ல பெருமானே, பொருள் சேர்க்கும் விருப்பம் இல்லை. அழகிய பெண்களை விரும்பவில்லை, என்னை பின்பற்றுவோரும் எனக்கு வேண்டாம், ஒவ்வொரு பிறவியிலும் உமக்கு ஆற்றும் உள்நோக்கமற்ற பக்தி சேவையை மட்டுமே நான் வேண்டுகின்றேன்.
5. நந்த மஹாராஜாவின் புதல்வனே (கிருஷ்ணா), நான் உனது நிரந்தர சேவகன், எவ்வாறோ நான் பிறப்பு, இறப்பு என்ற கடலில் விழுந்துவிட்டேன். தயவு செய்து என்னை இந்த கடலில் இருந்து கை தூக்கிக் காப்பாற்றி, உங்களுடைய தாமரைப் பாதங்களில் ஒரு தூசியாக வைத்துக் கொள்ளுங்கள்.
6. எம்பெருமானே, தங்கள் புனித நாமத்தை ஜபிக்கும் போது, என் கண்களில் பக்திப் பரவசத்தால் ஆனந்த கண்ணீர் பெருகுவது எப்பொழுது? மேலும் எப்பொழுது எனது குரல் தழுதழுத்து, மயிர்க் கூச்செறிந்து உமது நாமத்தை நான் ஜபிக்கப் போகிறேன்?
7. ஓ கோவிந்தா! உம்முடைய பிரிவினால், ஒரு நொடிப் பொழுதையும், பல யுகங்களாக உணர்கிறேன். கண்களில் கண்ணீர் பெருகி மழை போல் பொழிகிறது. நீங்கள் இல்லாமல் அனைத்து உலகத்தையும் வெற்றிடமாக நான் உணர்கிறேன்.
8. கிருஷ்ணரை தவிர வேறு எவரையும் நான் என் இறைவனாக அறியேன். அவர் என்னை முரட்டுத்தனமாக நடத்தினாலும், அணைத்துக் கொண்டாலும், என் முன் தோன்றாமல் என் இதயத்தை பிளக்கச் செய்தாலும் அவரே என் பிரபுவாவார், என்னிடம் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்து கொள்ள அவருக்கு முழுஉரிமை உண்டு. ஏனென்றால் எவ்வித நிபந்தனையும் இன்றி, அவர் எப்பொழுதும் எனது வழிபாட்டிற்குரிய பகவானே ஆவார்.
திருப்பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவனே! சக்ராயுதத்தை கையில் தாங்கியவனே! ஆதிசேஷனின் தலையில் உள்ள ரத்னங்களினால் ஒளிரும் புண்யமான வடிவை உடையவனே! யோகிகளுக்கெல்லாம் தலைவனே! நிலையானவனே! தஞ்சமடையத் தக்கவனே ! ஸம்ஸாரமெனும் கடலைக் கடக்க ஓடம் போன்றவனே ! லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானே! எனக்குக் கை கொடுத்து அருள வேண்டும்.
நான்முகன், இந்திரன், ருத்ரன், மருத்துக்கள், சூரியன் முதலானவரின் கிரீடங்களின் முனைகளால் உறையப்பெற்று மாசற்று ஒளிரும் தாமரை போன்ற சரணங்களை உடையவனே! லக்ஷ்மீ தேவியின் ஸ்தனங்களாகிற தாமரை மலருக்கு ராஜ ஹம்ஸம் போன்றவனே ! லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மீந்ருஸிம்ஹனே!
ஸம்ஸார மென்னும் காட்டுத்தீயினால் எரிக்கப்பட்டு அல்லல் படுபவனும், அச்சுறுத்தும் பரந்த தீயின் ஸமூஹங்களால் கருகிய ரோமங்களை உடையவனுமான எனக்குக் கைகொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! எங்கும் வியாபித்திருப்பவனே ! ஸம்ஸாரமென்னும் வலையில் விழுந்தவனும், தூண்டிலால் இழுக்கப்பட்ட மீன்போல பொருளாசையால் ஈர்க்கப் பட்ட புலன்களை உடையவனும், துண்டிக்கப்பட்ட தாடைகளையும் தலையையும் உடையவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! தேவனே! ஆழமான அடித்தலத்தை உடையதும் மிகவும் பயங்கரமானதும் ஸம்ஸாரமென்னும் கிணற்றை அடைந்து நூற்றுக்கணக்கான இன்னல்களான அரவங்களால் துன்புறும் கதியற்றவனான இரங்கத்தக்க நிலையை அடைந்த எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! இன்னல்களனைத்தையும் போக்குபவனே! ஸம்ஸாரமென்னும் பயங்கரமான யானையின் துதிக் கையினால் அடிபட்டு நசுக்கப்பட்ட நுண்ணிய உறுப்புகளைக் கொண்டவனும், பிறப்பு இறப்பு என்னும் வாழ்க்கையாகிற அச்சத்தினால் அல்லுறுபவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! கருடனை வாஹனமாகக் கொண்டவனே! அமுதக் கடலில் வசிப்பவனே! வசுதேவன் புதல்வனாய் அவதரித்தவனே! வாழ்க்கை என்னும் பாம்பின் விரிந்த வாயிலுள்ள அச்சுறுத்தும் கடுமையான வலிவான பற்களிலுள்ள கொடிய நஞ்சினால் பொசுக்கப் பட்டு உருவிழந்த எனக்குக் கைகொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானே ! இரக்கமுடையவனே ! பாவங்களை விதையாகவும், அளவற்ற செய்கைகளை எண்ணற்ற கிளைகளாகவும், புலன்களை இலைகளாகவும், காமனை மலராகவும், துயரங்களைப் பழங்களாகவும் உடைய வாழ்க்கை என்னும் மரத்தின்மீது ஏறி விழுகின்ற எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! வாழ்க்கைக் கடலில் பரந்த அச்சுறுத்தும் காலமென்னும் முதலைகளால் பிடிக்கப்பட்டு விழுங்கப்படுகின்ற உடலை உடையவனும், பலவிதமான கவலை உடையவனும், பலவிதமான ஆசைகள் என்னும் அலைகளால் அல்லல் படுபவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
மிகவும் வல்லமை உடையவனே! கருணை நிதியே! பிரஹ்லாதனின் இன்னலைப் போக்க அவதாரம் செய்தவனே ! வாழ்க்கைக் கடலில் முழுகி மயங்குகின்ற எளியோனான என்னை (கடைக்கண்ணால்) பார்க்க வேண்டும். லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே ! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! முரனின் பகைவனே! வாழ்க்கை என்னும் அச்சுறுத்தும் காட்டில் திரிகின்றவனும், விலங்குகளில் தலைசிறந்த (சிங்கம்) போன்ற உக்கிரமான அச்சுறுத் தும் காமனால் பீடிக்கப்பட்டவனும், மிகவும் துன்ப முற்றவனும், பொறாமை என்னும் கோடையினால் பீடிக்கப்பட்டவனுபான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப்பெருமானே! இரக்கமுடையவனே! வாழ்க்கையின் நூற்றுக்கணக்கான பாசங்களால் சூழப்பட்ட என்னை யமனின் ஆட்கள் கழுத்தில் (பாசக்கயிற்றால்) கட்டி மிகவும் அதட்டுபவர்களாக எங்கேயோ இழுத்துச் செல் கிறார்கள். தனித்திருப்பவனும், பிறர் வயப்பட்ட வனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
லஷ்மியின் நாதனே! தாமரையை தொப்புளில் உடையவனே! தேவர்களின் தலைவனே! வியாபித்திருப்பவனே! வைகுண்டனே! கிருஷ்ணனே! மது என்ற அசுரனைக் கொன்றவனே! தாமரைக் கண் ணனே! பிரம்மனே! கேசவனே ! ஜனார்த்தனனே! வஸு தேவனின் மைந்தனே! தேவர்களின் தலைவனே! இந்த எளியோனுக்குக் கை கெர்டுத்தருள வேண்டும்.
ஒரு (கையினால்) சக்ராயுதத்தையும் மற்றொரு கையினால் சங்கையும் மற்றும் இன்னொரு கையால் லக்ஷ்மியை அணைத்துக் கொண்டும் வலது கையால் வரமளித்தல், காத்தருளல், பத்மமுத்திரை முதலியவைகளை குறிப்பிட்டுக் கொண்டு நிற்கும் லக்ஷ்மி யுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
தேவனே ! லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! புலன்கள் என்னும் பெயருடைய வலிமையுடைய திருடர்களால் குருடான என்னுடைய பகுத்தறிவு என்னும் பெருஞ்செல்வம் கவரப்பட்டு மோஹம் என்னும் இருண்ட பாழும் கிணற் றில் தள்ளப்பட்ட எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.
பிரஹ்லாதன், நாரதர், பராசரர், புண்டரீகன், வியாஸர் முதலான சிறந்த பக்தர்களின் இதயத்தில் குடியிருப்பவனே! பாரிஜாதம் (மரம்) போன்று பக்தர்களை பரிவுடன் காத்தருள்பவனே! லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.
லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப்பெருமானின் திருவடித்தாமரைகளில் (அமர்ந்த) தேனீ போன்ற சங்கரரால் இப்புவியில் நன்மை பயக்கும் இத்துதியானது செய்யப்பட்டது. எவர்கள் திருமாலிடம் பக்தி உடையவர்களாக இத்துதியைப் படிக்கின்றார்களோ அவர்கள் இன்பமயமான அந்தத் திருவடித்தாமரையை அடைகின்றார்கள்.